Pages

வாசகர் வட்டம்

Thursday, June 24, 2010

அவள் ஏன் சபதமிடவில்லை (சிறுகதை)


அவள் ஏன் சபதமிடவில்லை (சிறுகதை)



நேற்று கண்டது கனவு தான் இன்றும் காண்பதும் கனவோ என தன்னை நுள்ளி பார்த்து கொண்டாள் .வந்தவன் தேர்பாகன் என்பது தெரியும் ..தன்னை சபைக்கு அழைத்து வர சொன்னது என்று சொன்னது மட்டும் வாய் மொழியாக வந்து வெளியில் விழுந்தது ...

விழாதது,சொல்லாதது அவளை இழுத்து வர சொன்ன விசயம் அவனது முகத்தின் கடுமையில் தெரிந்தது.முகத்தை தொடர்ந்து கடுமையாக வைக்க முடியவில்லை வீமனின் தண்டாயுதம் அவனது எண்ணக் கோவையில் அங்கும் இங்கும் வலது இடதுமாக எம்பி குதித்து அவனை பயமுறுத்தி கொண்டிருந்தது. என்றாலும் தொடர்ந்து அவன் நச்சரிக்க இன்று எனக்கு அந்த நாட்கள் அதனால் சபைக்கு என்னால் வரமுடியாது என்று கூறு என்றாள் ..அப்படி சொன்னவள் அவள் பெயர் பாஞ்சாலி


அந்த ஐவரோடு அவர்கள் பின்னால் அந்த நாட்டுக்கு வந்தாள் .அவர்கள் ஜவருக்குமே இல்லகிழத்தி என்ற அந்தஸ்த்து,அவளுக்கு

பூரண கும்ப மரியாதை செய்து அது போல பல மரியாதைகள் செய்து இந்நாட்டு மக்கள் இங்கு நேற்று வரும் போது வரவேற்று மகிழ்ந்தது .அந்த ஜவருக்கும் ஒரு இன்ப மகிழ்வை கொடுத்திருக்கிலாம். ஆனால் அவளுக்கோ வேற மாதிரி இருந்தது.வேற எண்ணங்கள் அலை அலையாக வந்து அவை ஒன்றுடன் ஒன்றுடன் வந்து மோதி மனம் சாந்தி அடைய விடாமால் துரத்தியது ..காரண காரியமின்றி குழம்பி பின் ஏதோ காரணம் இருக்கவேண்டும் என
நினைத்து கொண்டே தன்னை அறியாமால் அந்த அறையில் ஒரு ஒழுங்கு முறையில்லாமால் தூங்கி விட்டாள்.

தூக்கத்திலை அவளது ஆழ் மனதை கலங்க வைக்கும் நிகழ்வாக அவளது மனத்திரையில் சலனப்படம் போன்று ஒரு கெட்ட கனவு ஓடிக்கொண்டிருந்தது.பலர் பெரியவர்கள் சான்றோர்கள் உறவினர்கள்
வீற்றிருக்கும் சபை மண்டபத்தில் அவன் துகிலுரிய கண்ணா கண்ணா என்று குழற அவளது சேலை முடிவின்றி வந்து கொண்டிருந்தது . தூக்க கலக்கத்தில் கனவோடு ஒன்றி கண்ணா கண்ணா என்று கூப்பிட்டது அவளது தூக்கத்தை குழப்பி நனவு நிலைக்கு திருப்பியது ...திரும்பியவள் தன்னை இழிநிலையில் தன்னை வைத்து பார்த்து வேதனை அடைந்தாள், .

அவளுடைய அவர்கள் என்று இந்த உலகம் சொல்லும் அந்த பஞ்ச பாண்டவர்களுடன் திரிந்து ஆலோசனை சொல்லும் மாயாஜாலம் செய்யும் இந்த கண்ணனை பார்க்கும் போதெல்லாம் ஒரு வெறுப்பு ஏனோ அவள் மனதில் வந்து போகும் ...அதை முகத்தில் காட்ட விடாமால் கடும் பிரயத்தனம் செய்து இவ்வளவு காலம் தவிர்த்து வந்தாள்.....அப்படி வெறுத்த கண்ணனை கனவில் கூட உதவிக்கு கூப்பிட்டிருக்க கூடாதே ..என்று நினைத்தவள்...அப்பிடி கூப்பிட்டதை நினைத்து தனது ஆழ்.மனதை ஒரு கணம் வெறுத்தாள்

அன்று ஒரு நாள் துரியோதன் தடக்கி விழுந்ததை பார்த்து அவள் நகைத்ததாக அவன் நினைத்தானோ தெரியாது .ஆனால் அவனை அவள் நகைக்கவில்லை என்பது அவனுக்கு தெரியாத விசயம் .அதற்க்கு மாறாக அவனது கம்பீரத்துக்கு முன்னால் இந்த தடங்கல் எம்மாத்திரம் என்றே நினைத்து சிரித்தாள் .இந்த நினைப்பு ஏன் எழ வேண்டும் என்ற கேள்வியை அவளே எழுப்பி அவளே விடையை தானே கூறி கொண்டாள் .. தனது புன் சிரிப்பை தவறாக அர்த்தப் படுத்தி தன்னை பழிவாங்குவதற்க்காத தான் தங்களை விருந்து என்ற பேரில் இப்ப இங்கு அழைத்திருப்பானோ என்று யோசித்தாள்...


ஊரும் உலகமும் துரியோதனை பல அடை மொழிகள் வைத்து அவனை கெட்டவனாக உருவக படுத்தினாலும் அவள் மனம் அதை நிராகரித்தே இருந்து வந்தது.தனது நாயகர்கள் அம்பு வில்லு தண்டாயுதம் போன்ற வெளி கவசங்களுடன் மற்றும் நற் குணங்கள் என்று சொல்ல படுகின்ற போலி கவசங்களை சுமந்திருந்தப்பதாக பட்டது ..அவர்களிலும் பார்க்க பொய்யான போலி வேசம் இல்லாத தனக்கு பட்டதை எதுவோ அதில் உறுதியாக இருந்த அவனுடய நேர்மை பண்பு அவளுக்கு பிடித்திருந்தது.

..தனது கணவர்களை விட வேறு ஒருவனை சிறந்தவனாக பண்பாளானாக நினைக்கலாமோ அவளுக்கு ஊட்டி வைக்க பட்ட பண்பாட்டு குணாம்சம் ஒரு கணம் யோசிக்க வைத்தது. மறுகணம் தன்னை சுதாகரித்து கொண்டு தனக்கே கூறி கொண்டு சிரித்து தன்னுள் நகைத்து கொண்டாள் ,,...ஒரே நேரத்தில் தனது ஓரே மனதை அந்த ஜவர்க்கும் ஒரே நேரத்தில் பங்கிடவேண்டும் என நினைக்கும் இந்த பண்பாட்டு குணாம்சத்தில் பார்க்க தனது நினைப்பு எவ்வளவோ மேல் என கூறி கொண்டாள் .

சகுனியின் மீசை தானே எழும்பி சிலிர்த்து நின்று அவனது வெற்றி களிப்பை பறை சாற்றுவதோடு முகத்தில் ஒரு தேஜஸை கொடுத்தது..சூதாட கேட்ட போது பல தர்மங்கள் கூறி மறுத்த தருமன் இப்பொழுது தன்னிடம் நாடு இழந்து ,வீடு இழந்து ,செல்வம் இழந்து தன் தம்பிகளோடு தலை தொங்கி போட்டு நிற்பதை பார்க்க அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது

. சபையில் தோன்றிய நிசப்தம் அடுத்த கணம் என்ன நிகழுமோ என்ற அச்சத்தை உருவாக்கி கொண்டிருந்தது ...அப்போது துரியோதனன் தேர் பாகனை பார்த்து போட்ட சத்தம் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் மேலும் அச்சத்தை ஊட்டியது


இந்த பேடிப்பயல் இதோ கதாயதித்ததை சும்மா மேலேயும் கீழேயும் போட்டுக்கொண்டு நிற்கின்ற இந்த வீமனுக்கு பயந்து அழைத்து வர தெம்பில்லா நிற்கிறான் ....தம்பி துச்சாதனா அவளை இழுத்து வா என்று கூக்குரல் இட்டான் ..அது அந்த சபை கட்டிடத்தில் மோதி இரண்டு மடங்கா வீச்சு கொண்டு பயங்கரமாக எதிரொலித்தது.


கூக்குரலின் பின்னால் துச்சாதனன் பாஞ்சாலியை அழைக்க அந்தப்புரம் சென்று விட்டான்.

துரியோதனனின் உள் மனதோ அவனிடம் அடுக்கு அடுக்காக் கேள்விகளை கேட்க தொடங்கி கொண்டிருந்தது

உண்மையில் இந்த பேடி பாண்டவர்கள் செய்த முட்டாள்தனத்துக்காக அவளை இந்த சபையில் அவமானப்படுத்த போகிறாயா?

இந்த முட்டாள் பிற்போக்கு வாதிகள் தங்கள் பாணியில் தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி வகுத்து கொண்ட நல்லது ,கெட்டது,தர்மம்,அதர்மம்
என்ற பிரிப்புக்களை பறைசாற்ற இவர்கள் வகுத்த வேலை த்திட்டதுக்கு பலியாக போகிறாயோ?

இவர்கள் தங்களின் ஒரு நேர வேலைத்திட்டத்துடன் தங்களுக்கு சாதகமான ஒரு குருசேத்திரத்தை உருவாக்க காத்திருக்கிறார்கள் என்றதை நீ உணரவில்லையா?

இப்படி உள் மனம் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்க அதற்க்கு விடை கொடுக்க இப்ப அவசியமில்லை ..அந்த அந்த கணம் முடிவு செய்யும் என்று சமாதன பட்டு கொண்டான்


கூந்தலை கடிவாளம் போல கையில் வைத்து அவளை இழுத்து வந்தான் துச்சாதனன் சபையினுள் ..அவளும் அவனது இழுவைக்கு ஏற்ற மாதிரி ஈடு கொடுத்த இழுபட்டு வந்து கொண்டிருந்தாள். சான்றோர் பெரியோர்கள் பலர் அங்கு வீற்றிருக்க கூட யாரும் தட்டி கேக்க திராணியற்று இருந்தனர் .

அவள் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவாள் என எதிர்பார்க்க எதிர்ப்பாப்புக்கு எதிர்மாறாக மெளனமாக அங்கு கூனி குறுகி இருக்கும் பாண்டவர்களே உற்று நோக்கி கொண்டிருந்தாள்.

மெளனத்தை கலைத்து தருமனை பார்த்து கேட்டாள்

என்னை உணர்வுள்ள பெண் என்று இல்லாமால் உனது சொத்தாக பாவித்து என்னை சூதில் ஆடினாய் சரி ..சூதாட்டத்தில் உன்னை இழந்த பின் என்னை எப்படி வைத்து சூது ஆடுவாய் நீ என்று கேட்டாள்...என்றும் இல்லாதவாறு அவள் ஒருமையின் பேசியதை கேட்டு திகைத்து நின்றனர் அந்த ஜவர்கள்

துரியோதன்ன் மீண்டும் கர்சித்தான் ....துச்சாதனா ..அவளை வழ வழ என்று என்ன பேச விட்டு கொண்டிருக்கிறாய் ...

.அவளுடைய சேலையை அவிழ் நிர்வாணப்படுத்து பின் எனது தொடையில் கொணர்ந்து இருத்து என்றான்


அவிழ்க்க நெருங்கி வந்த துச்சாதனை பார்த்து

..அதுக்கு அவசியமில்லைடா அவன் தம்பியே ...நானே என்னை நிர்வாணபத்தி கொள்கிறேன் என்று கூறியபடி தனது உடைகளை தளர்த்தி எறிந்தாள் ....


இதை எதிர்பார்க்காத சபை திகைத்து நின்றது .

இதை விட இவள் கண்ணா என்று அபயக்குரல் இடுவாள் .

தான் தனது மாயா ஜால கண் கட்டு வித்தை யினால் அவளது சேலையை அவிழ விடாமால் மட்டுமின்றி முடிவில்லா சேலையை அந்த சபையில் பரப்பி காட்டலாம் என்று காத்திருந்த கண்ணன். நிகழ்ச்சி நிரல் மாறு படுவதை கண்டு திகைத்தான்.

நகுலனும் சகாதேவனும் தங்கள் சோதிட கணக்கும் பிழைத்தது என்று திகைத்து நட்சத்திரங்களின் வரிசையை மீண்டு கணக்கிட தொடங்கினர்.

பாஞ்சாலி ..

அரைநிர்வாண கோலத்திடன் நின்று கொண்டே முழங்கினாள் ....இவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தங்களின் நலனுக்காக யுத்தத்தை உருவாக்குவார்கள் பல ஆயிரக்கணக்கான மக்களை பலி கொள்ளுவார்கள் ..பின் இவர்களே ஒரு தீர்வை கொடுப்பார்கள் இப்படி தர்மம் வெல்லும் அதர்ம்ம் வெல்லும் என்று கொண்டு....


அதானால் நான் சபதம் இட மாட்டேன் ... ஏன் கெளரவர்களில் மூத்தவனே ஏன் கஸ்டப்படுகிறாய் ..

இந்த தொடை நடுங்கிகளுக்கு மனைவி வாழுவதை விட நானே தொடையில் வந்து அமர்கிறேனே .இதன் மூலம் நானும் நீயும்சேர்ந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவோமே என்றாள்

இதை சற்றும் எதிர்பார்க்காத துரியோதன்ன் சற்று சற்று திகைத்து பின் நோக்கி சென்றான்

பாஞ்சாலியின் இந்நடவடிக்கையை பார்த்து பூமி அதிர்ந்த மாதிரி உணர்வை சபையின் சான்றோர் உணரந்தனர்

மற்ற எல்லோரது காட்சி மன படிமங்கள் எல்லாம் ஆழிபேரலையில் அடிப்பட்ட பிணம் போல உணர்ச்சியற்று மிதந்தது

உண்மையில் பூமி அதிர்ச்சியும் வரவில்லை ஆழி பேரலையும் வரவில்லை

வரலாற்று தவறுகளை திருத்தியபடி அங்கு அவனும் அவளும் ஒரு யதார்த்ததில் இருந்து கொண்டிருந்தனர்



இக் கதை மிதுவின் கிறுக்கல்கள் வலைபதிவுக்காக எழுதப்பட்டது

No comments: