Pages

வாசகர் வட்டம்

Saturday, January 04, 2014

நாடு காத்த சிறுவன்

அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான்

.வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று.

இவன் மோகன் தோட்டம் துரவு சந்து ,பொந்து பீச்சு கடல் என்று வேடிக்கை பார்ப்பதிலை விண்ணன்.அத்துடன் சிக்கலை மற்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமால் உருவாக்கி தருபவன் .என்பதால் காது கொடுக்காத மாதிரி மற்ற பக்கம் மாறி நித்திரை மாதிரி கிடந்தேன்.

அந்த அகதி முகாம் ஹாலந்து நாட்டின் வட பகுதியில் உள்ள புகழ் பெற்ற பீச்சுக்கு அண்மையில் அமைந்துள்ளது.இங்கு வெளிநாடுகளில் இருந்து எல்லாம் கூட பெருவாரியாக உல்லாச பிரயாணிகள் வருவதுண்டு.


இந்த பீச்சுகளில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக படுத்து சூரிய குளிப்பு செய்வதுண்டு. அதுவும் நம்மவர்கள் அண்மையில் தான் வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அத்துடன் பகலில் நிர்வாணம் என்றதை நேரில் காணதாவர்கள். ஏன் இரவில் கூட காணாதாவர்கள்..காண கூச்சமாக இருந்தவர்கள்..அவர்களுக்கு எந்த மனத்தடை சமூக தடை இல்லாமால் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தமையால் கூட்டம் கூட்டமாக அந்த கடற்க்கரைக்கு புளு பிலிம் ஓசியில் பார்க்க கிடைத்த மாதிரி இளையவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை திரிய தொடங்கி விட்டார்கள்.

அதற்க்கு தலைமை தாங்கி வழி நடத்துபவன் உந்த மோகன் தான் . ..உல்லாச பிரயாணிகளுக்கு இடையூறாகவும் அசெளகரியமாகவும் இருக்கு என நகர சபையினருக்கு செய்தி போக பின்.அகதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது

.அதனால் உவன் என்னிடம் நெருங்கி நெருங்கி வந்து ஊர் உலகம் காட்டி செய்தி சொன்னால் எப்பவும் எச்சரிக்கையாகவே இருப்பதுண்டு.

என்றாலும் அவன் கூறிய வார்த்தைகள் ....அவன் சொல்வதை திரும்பி பார்க்க வைத்தன.

மச்சான்..நாடு காத்த சிறுவனின் தூபியை பார்த்தேன் கடற்க்கரையிலை வா காட்டுறன் என்றான்.

நாடு காத்த சிறுவன் பற்றி அந்த காலத்தில் எங்களுடைய நாலாம் வகுப்பு பாட புத்தகத்தில் படம் போட்டு கதை சொல்லி இருப்பார்கள்..

இது தான் அந்த கதை

ஒல்லாந்து(ஹாலந்து) தேசம் கடல் மட்டத்திற்க்கு கீழே அமைந்த தேசம்.அதனால் நாடு சூழ கடல் தண்ணீர் உள்ளை போகமால் இருப்பதற்கு அணை கட்டி இருக்கிறது. ஒரு முறை கடற்க்கரை ஓரமாக ஒரு சிறுவன் நடந்து சென்று இருக்கும் போது அணையில் இருந்து ஒரு துவார வெடிப்பூனூடக கடல் தண்ணீர் உள் புகுவதை கண்டான்,.அந்த துவாரத்தை தன் கையால் பொத்தி கொண்டு அந்த குளிரிலும் இரவு முழுக்க இருந்தானாம் .விடிய ஊரவர்கள் கண்டு ஆவன செய்தார்களாம்.அவன் அப்படி தண்ணீர் வடிவதை தடுக்காவிடில் நாடு அழிந்திருக்குமாம்..அதனால் நாடு காத்த சிறுவன் என்று சொல்லி கெளரவித்தார்களாம்.

சின்ன வயதில் கேட்ட கதை என்றாலும் உருவக கதை என்று தான் என்னுள் இருந்தது.என்றாலும் நாடும் இடமும் கதையும் இவ்வளவு அண்மையில் இருக்கும் போது சரி பார்ப்போமே என்று கிளம்பினேன்.

வெளியில் கார் தரிப்பிடத்தில் ..கார்களில் இருந்து இறங்குபவர்களும் கார்களில் ஏறுபவர்களுமாக இருந்தார்கள் ..இங்கு இந்த அகதி முகாமில் சிலர் சில நேரம் தான் இருப்பார்கள் .மற்ற நேரங்களில் ஒரு நாள் ஜெர்மனி மற்ற நாள் பெல்ஜியம் அடுத்த நாள் பாரிஸ் என்று வாழும் நாடோடிப் பிராணிகள் ...

அவர்களுக்கு நாடு கடக்க சரியான அனுமதி இல்லாவிடினும் அந்த அந்த நாடுகளின் எல்லை வேலிகளின் துளைகளை கண்டு அதனூடாக கள்ள வேலி பாய்ந்து இலகுவாக சென்று வருவதில் சூரர்கள்.இவர்களுடன் சில சமயங்களில் காரில் உந்த கள்ள வேலி கடந்து பெல்ஜியம் ஜெர்மன் என்று சென்று வந்திருக்கிறேன்...

அப்படி செல்லும் போது மற்ற பக்கத்தினால் ஏதோ நோக்கத்துக்காக எங்கோ சென்று கொண்டிருக்கின்ற பொலிஸ் காரை பார்க்கும் போது கூட எல்லாம் என்னைத்தான் பிடிக்க வாறான் என்று நினைத்து அடி வயித்தை கலக்கும்..

நம்மவர்கள் ஜரோப்பாவின் பெருநிலத்தில் கள்ள வேலி தாண்டி இலகுவாக போய் வந்தாலும் உந்த ஆங்கில கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்கு செல்வது ஒரு போதும் வாய்ப்பாக இருக்கவில்லை. இஸ்லாமியர்கள் மதீனா மக்காவுக்கு ஒரு முறையாவாது போய்விடும் நினைப்பில் இருப்பது போல் இங்கு இருக்கும் பலருக்கு உந்த லண்டனுக்கு போற நினைப்பும் இருப்பதுண்டு

வாசலை தாண்டி றோட்டுக்கு இறங்கும் போது என்னை பெயர் சொல்லி அழைத்த மாதிரி ஒரு அசரீரி குரல் கேட்டது..

சுரேஸ் தான் ..அண்மையில் அவனுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்தது .அது கிடைத்த தாமதமே லண்டன் போய்ட்டு வந்திருக்கிக்கிறான் ....என்னை காண வந்திருக்கிறான்....எங்களுடைய திட்டத்தை மாற்றி கொண்டு அவன் நான் இவன் மோகனுமாக அந்த பரந்த பூந்தோட்டத்தத்திலுள்ள மூலையிலுள்ள ஒரு பாருக்குள் பிரவேசித்து கொண்டோம்...எங்கள் பிரவேசத்தை வரவேற்பது மாதிரி அங்கு இசை ஒலித்து கொண்டிருந்தது.பாரில் அவ்வளவு கூட்டமில்லை மூலையில் ஒரு இளம் ஜோடி ஒன்று ஜிகு ஜிகு மூட்டி கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் தள்ளி நடுத்தர வயது தாண்டிய ஜோடி ஒன்று பழைய முத்தங்களை நினைத்து கொண்டு புதிய முத்தங்களை சொரிந்து கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சம் செல்ல டச்சு கமக்காரர்களினால் இந்த பார் நிறைந்து விடும்

நாங்கள் எங்கள் மொழியை ராகத்துடன் கதைக்க கூடிய இடமாக பார்த்து மூலையான இடமாக தேர்ந்து எடுத்த கொண்டோம்

நான் தான் கதையை தொடக்கினேன்

என்ன மச்சான் ..லண்டன் போய் வந்திருக்கிறாய் இனிமேல் உனக்கு என்ன சேர் பட்டம் கிடைத்த மாதிரி தான் என்றேன்

ச்சாய்..என்னடா லண்டன் என்று அலுத்து கொண்டான்

அவனது அலுப்பை ஏமாற்றத்தை போல் ஒன்றை 70 களின் நடுப்பகுதியில் இலங்கையில் இருக்கும் போதே பெற்றிருக்கிறேன். எனது வகுப்பு தோழன் ஒருவன் பல்கலைகழக அனுமதி கிடைத்து அது தொடங்க இருக்கும் ஒரு வருட இடைவெளியில் லண்டன் சென்று வந்திருந்தான்...அவனிடம் கேட்ட போது அவன் சொன்னது நினைவில் வந்தது


ஒல்லாந்து (ஹாலந்து) நாட்டு சிறுவன் ஒருவன் (இது இன்னோரு சிறுவன்) லண்டன் தெருக்கள் எல்லாம் தங்கத்தால் செய்ய பட்டது என்று கற்பனை செய்து பின் போய் பார்த்து ஏமாந்த கதை முந்தி வாசித்திருக்கிறேன் .அதே மாதிரி தான் எனக்கு ஏற்பட்டது என்றான்

சுரேஸ் இரண்டாவது ஆட்டத்துக்கு வந்து விட்டான். நான் இன்னும் எனது முதலாவது ஆட்டத்தை முடிக்கவில்லை..எனக்கு முதலாவது கிளாஸ் உள் போகும் வரை எனது முகம் பல அஸ்ட கோண வடிவத்தில் இருக்கும்.ஏன்டா கஸ்டப்பட்டு இப்படி இவன் தண்ணி அடிக்கோணும் முன்னுக்கு இருப்பவர்களை யோசிக்க வைக்கும்.

சுரேஸ் அப்படி இல்லை நிதானமாக குடிப்பான் நிதானமாக கதைப்பான் ஏற ஏற சுவராசியமாக கதைப்பான் ..நானும் இரண்டாவது வந்து விட்டன் என்றால் குசியாகி விடுவேன் நிதானமாக குடிப்பேன். நான் கேள்வி கேள்வி மேல் கேட்டு கதையை பம்பல் ஆக்குவேன் அவனுடன் இப்படியான தருணத்தில் கதைப்பதில் எனக்கு இருக்கும் மகிழ்ச்சி அவனுக்கு நன்கு தெரியும்
.
அதனால் கதைக்க தொடங்கி விட்டான்..இனிமேல் லண்டன் புராணம் தான் என்று விளங்கி விட்டது ..இவன் மோகன் எங்களின் கதை பேச்சுகளில் அக்கறையின்றி கலை நயத்துடன் அங்கினை இங்கினை பிராக்கு பார்த்து கொண்டிருந்தான்.

லண்டனை விட நம்ம லண்டன் வாழ் தமிழர்களின் கதை சுவராசியமானது என்று தொடங்கினவன் நிற்பாட்டவே இல்லை.

வரவேற்பறையை கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வாடகைக்கு விட்டு விட்டு வருபவர்களை வரவேற்க்க காத்திருக்காதவர்கள்..இவர்கள்
.
இவர்களின் சிரிப்பை இவர்கள் தொலைத்து மறந்து நெடுநாளாகி விட்டது . இந்த நாட்டிலை இங்கு பல சமூகங்களுடன் பழகுகிறோம் புதியவைகளை பெற்று கொள்ளுகிறோம் ..ஏன் சிலர் இந்த நாட்டு மக்களுடன ஓன்று கலந்து காதல் செய்கிறார்கள் ,கலவி செய்கிறார்கள்,கலியாணம் செய்கிறார்கள் ,விவாகரத்து செய்கிறார்கள்..சில வேளை விவகாரப்பபடுகிறார்கள்...அவர்��
�ள் அப்படி இல்லை தாயகத்தில் இருந்து அப்படி பெயர்த்து எடுத்து வந்து லண்டனிலை வாழ்கிறார்கள் .இன்னும் சொல்லப் போனால் தேவை இல்லாத (rat race)எலி ஓட்ட வாழ்க்கையை ஒருவரை பார்த்து ஒருவர் ஓடி கொண்டிருக்கிறார்கள்.

மச்சான் ...அவங்கள் எதையோ தொலைத்து விட்டு என்ன தொலைத்தது என்று தெரியாமால் எங்கையோ தேடி கொண்டிருக்கிறார்களடாப்பா.

மற்ற ஒன்றடப்பா.. கொஞ்சம் படிச்ச மட்டம் என்று நினைத்து கொள்ளிறவியளினரை கூத்து பார்க்க இயலாது என்று தொடர்ந்தான்

இந்த படித்தது என்ற ஜாதி கூட்டம் ...தமிழனுக்கு முன்னாலை வெள்ளைக்காரன் மாதிரி காட்டி கொள்ளுவினம்..வெள்ளைக்காரனுக்
கு முன்னாலை தங்களை சரியான பச்சை தமிழனாக காட்டி கொண்டு நிற்ப்பினம்

என்னடா லண்டனை பற்றி கேட்டால் லண்டன் தமிழரை பற்றி சொல்லிறியே இடை மறித்து நான் கேட்டால்...

அவன் அதற்க்கு பதில் கூறவில்லை கதையை மாற்றி ஹாலந்து நாட்டிற்க்கு அவன் வந்த காலகட்டத்து கதையை ஆரம்பித்து விட்டான்

மச்சான் நான் வந்த புதிதில் அம்ஸராடமில் தான் எல்லாரும் இருந்தோம் ..சிறிலங்கா என்ற நாடு உலகத்தில் எங்கை இருக்கு என்று கூட டச்சுக்காரங்கள் அநேகமானவருக்கு தெரியாது. எங்கட பொடியள் கூட்டம் கூட்டமாக திரிஞ்சாங்கள். அவங்கள் தோளிலை கை போட்டு சென்றதை அவதானித்த டெலிகிராப் பத்திரிகை ..எங்கிருந்தோ கூட்டம் கூட்டமாக காட்டுமிராண்டி ஓரின சேர்க்கையாளர்கள் குழுவாக அம்ஸ்டர்டாம் வந்து இறங்கி இருக்கிறார்கள் என்று இன வாதம் கக்கியது.

சொன்னால் நம்பமாட்டாய்...என்னை ஒரு டச்சு சமூக சேவகி வந்த புதிதில் ஒரு முறை கேட்டாள் உங்களுக்கு பந்து தெரியுமா ..சைக்கிள் தெரியுமா என்று ...நல்ல காலமாக அவள் இப்படி கேட்காமால் விட்டுட்டாள் காதல் தெரியுமா செக்ஸ் தெரியுமா என்று. எங்களை காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் வந்த ஆட்கள் என்று நினைத்தாளோ என்னமோ.
பிறகு எங்களுடன் பழகி எங்களை பற்றி தெரிந்து கொண்ட பின் அப்படி நினைத்ததை வெட்கப்பட்டாள் என்றது வேற கதை



இவனது சம்பந்த சம்பந்தமில்லாமால் மாறும் கதையை கேட்க நான் தயாரில்லை என்று எனக்கே தெரிந்தது,,,இந்த தண்ணி அடித்த கிக் போவதற்க்குள் பல நாள் கொள்ளாத எனது நித்திரையை கொள்ள வேண்டும் நினைவு வேற உணர்த்த போவோமா என்றேன்

பாருக்கு வெளியே மூவரும் வெளியே வரத்தான் தெரிந்தது நடுநிசி கடந்து விட்டதை. .டச்சு நடுத்தர ஜோடி ஒன்று நல்ல நித்திரை கிடைக்கட்டும் டச்சு மொழியில் எங்களை வாழ்த்தி கொண்டு வெளியேறி கொண்டிருந்தது.

அதோ தூரத்தில் மங்கிய ஒளியை கக்கி கொண்டு சோம்பிய மாதிரி இருக்கும் கட்டிடத்துக்குத்தான்...திரும��
�ப செல்ல வேண்டும்......இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்று அடைந்து விடுவோம்



No comments: