Wednesday, August 22, 2012
இவனும் ஒரு மேடை பேச்சாளன் -மிதுவின் சிறுகதை
ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள்.
இவன் ஒருவன் எந்த விதமான மேடை அலங்காரமின்றி பட்ட பகலில் சுடும் வெய்யிலில் புல் தரை முன்பாக உள்ள உயரமான கல் மதில் குத்தி ஒன்றிலிருந்து காட்டமாக பேசி கொண்டிருக்கிறான் . நீண்ட நேரம் பேசி இருப்பான் போலும் . பேசியதை முடித்து விட்டு சில நேரம் அவகாசம் எடுத்து விட்டு புதிய தொனியில் புதிய விசயத்தை சொல்ல தொடங்குகிறான்.
இவ்வளவு நேரமும் எனது அரசியல் ஞானம் கலந்த பேச்சை கேட்டு கண்டுண்டவர் போல மெளனமாக இருக்கும் உங்களின் ஆர்வம் புரிகிறது. எனக்கு எப்படி இந்த அரசியல் சாணக்கியம் கிடைத்தது என்ற கதை சுவராசியமானது.யாருக்கும் சொல்லாதாது இது .இன்று சொல்லுகிறேன் உங்களுக்கு.
இந்த ஊரை தாண்டி இருக்கும் வல்லிபுரக்கோவில் அதன் தொடர்ச்சியாக இருக்கின்ற மணல் திட்டுக்கள் உடன் நீண்ட பாலை வனம் போல இருக்கின்ற பகுதி ,பொட்டல் காடு நீண்ட கால பயிரிடப்படாத வயல்கள் உங்களுக்கு தெரிந்தவை ..இவற்றை தெரியாதவர்கள் இவ்வூர் வாசிகளாக நிச்சயமாக இருக்க மாட்டீர்கள் .,..இந்த பகுதியில் பெரிய ஒரு அரச இராச்சியத்தின் தலை நகரம் இருந்தது என்று தெரியாதவர்கள் ..எழுத்து கூட்டி வாசிக்க முடியாதவர்கள் தான் அப்படி இருப்பீர்கள்..
திருவிழா காலம் அல்லது ஏதும் விசேசமான நாட்களில் தான் அப்பகுதிக்கு சென்று இருப்பீர்கள் , நான் இந்த நாட்கள் தவிர்ந்த நாட்களிலும் உலாவுவதுண்டு .இந்த பிரதேசத்தின் தனிமை அமைதி ஏகாந்தம் நடுநிசி இரவு நேரத்தில் கூட இருக்காது
ஆக்களுடன் வாழும் போது முட்டி மோதலினால் ஏற்படும் மன இறுக்கத்தை தவிர்க்க அடிக்கடி இங்கு செல்வதுண்டு.
அப்பகுதியிலிருந்து ஊரை பார்க்கும் போது ஊர் மூச்சு முட்டி தவித்து கொண்டிருப்பது போல் மாதிரியான உணர்வு ஏற்படும் . தூரத்தில் தெரியும் மணல் திட்டுகளை தாண்டி வானத்தை தொட்டு கொண்டிருக்கின்ற சாடையாக நீலமாக தெரிகின்ற கடல் தெரியும் . காற்றின் வீச்சின் ஏற்ற தாழ்வுக்கு ஏற்ப கடல் அலை எழுப்பும் சத்தம் அப்ப அப்ப கேட்டும் கேட்காமால் போகும் .தூரத்தில் சில கட்டாகாலி மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.எப்பாவது இருந்து அந்த பிரதேசத்தின் அண்டிய றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கும் சிலவேளை அதுவும் கேட்காது.
அந்த பிரதேசத்தில் உலாவும் போது நானே அவற்றுக்கு எல்லாம் ராஜா மந்திரி என்று நினைத்து கொள்ளும் போது ஒரு நாள் நீண்ட சடை முடி தாடியுடன் அமைந்த சாமியார் போன்ற தோற்றமுடைய ஒருவர் அந்த பொட்டல் காட்டில் உள்ள கொடி செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் .சில வேளை கேள்வி கேட்பவர் மாதிரி இருக்கும் . சிலவேளை பதில் சொல்லுகிறவர் மாதிரி இருக்கும்.ஏதோ பைத்தியமாய் இருக்கும் என்று நினைத்து கொண்டு அவரை தாண்டும் போது மெளனமாக செல்வேன் . அவரும் அத்தருணத்தில் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு செடி கொடியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு மெளனமாகி விடுவார்.இப்படி மெளன அறிமுக பரிமாற்றம் இருவரிடமும் பல காலமாக நடந்தேறியது.
.ஒரு முறை இப்படி இவரை தாண்டி செல்லும் போது மகனே என்று அசரீரி போல் என அழைத்து நிறுத்தி என்னுடன் பேச்சு கொடுக்க தொடங்கினார் . நானும் மிக பயத்துடனும் பவ்வியத்துடனும் அளவிளாவா தயாரானேன்.உன்னை ப்பார்த்தால் படித்தவன் போல் தோன்றுகிறது ...இந்த செடி பற்றி தெரியுமா என கேட்டார் .வாயை கொடுத்து வம்பை வளப்பான் என நினைத்து கொண்டு பதில் கொடுக்க வாயை திறந்த வாயை மறுத்தான் கொடுத்து மூடி கொண்டேன்.என்னிடம் எதுவும் நீண்ட நேரம் பதில் வராத நிலையில் இவ்வளவு காலமும் எனக்கு சொல்ல இருந்ததை மெளனத்துக்குள் வைத்து விட்டு இப்ப எல்லாம் சேர்த்து வைத்ததை சொன்ன மாதிரி மடை திறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கி விட்டார்.
இந்த செடியை பற்றி யாருக்கும் சொல்லுவதில்லை ..அதை தெரிந்து கொள்ளுவதுக்கு உனக்கு இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது ..இந்த செடியின் விதை இருக்கிறதே உன்னால் காலத்தை வைத்து கணிக்க முடியாத வயதை உடையது .சில காலங்களில் தான் இது தோன்றும் சில காலங்களில் மண்ணில் அடி யில் உறங்கு நிலையில் இருக்கும் ..இது தோன்றும் பொழுது எனக்கு இருக்கும் அனுமாஷ்ய சக்தியினால் அறிந்து இங்கு வந்து இதனுடன் வந்து பேச்சு கொடுப்பேன் .இதன் தாவர பெயர் இது . இதன் தாவரபெயரின் சூத்திரம் இது என்று அடுக்கி கொண்டு சொல்லிக்கொண்டு போனார் .பைத்தியம் போல் இருக்கும் இந்த சாமியாரிடம் அஞ்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானம் தெரிந்து இருக்கிறதே என்று அதிர்ச்சியுற்றாலும் அவர் கூறிய அந்த செடி காஞ்சிரோண்டி வகை செடி .அதன் இலையை எடுத்து சிறு வயதில் யாருக்கும் விளையாட்டுக்கு தேய்த்து விடுவதுண்டு . அப்படி தேய்த்ததனால் ஏற்படும் எரிச்சல் கடி அடங்க நீண்ட நேரம் எடுக்கும் ...
அதனால் நம்பிக்கையற்று அவரை முழு பைத்தியமே என்னுள் தீர்மானித்து கொண்டு எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டு அகல முடியமோ அவ்வளவு விரைவாக அகன்று விட்டேன்.
எப்பவும் போல அப்பப்ப அங்கு உலாவுவேன் .ஆனால் அந்த சாமியரை இப்ப கன காலம் காணவில்லை.எங்கு சென்றார் என்று என்னுள் ஒரு ஏக்கம் இருக்கும்..சிலவேளை அவரின் அசரீரி குரல் அங்கு கேட்பது போல் எனக்கு பிரமை தோன்றும் .சில வேளை திரும்பியே பார்த்து விடுவேன் .ஒன்றுமே இருக்காது அவ் விடத்தில் வெறும் கட்டாக்காலி மாடுகள் தான் மேய்ந்து கொண்டிருக்கும் .அவர் கதைக்கும் அந்த காய்ஞ்சோண்டி மரச்செடியை கூட காணவில்லை .அதை சூழ பல புதர் செடிகள் முளைத்து விட்டன.ஒரு நாள் பெளணர்மி அன்று அவ்விடத்தில் உலாவும் போது அந்த செடி தெரிந்தது .என்னையறியாமால் அதை நோக்கி சென்றேன். அது தீடிரென்று அரையளவுக்கு உயர்ந்தமாதிரி இருந்தது .அதன் இரு பக்கமும் கிளைத்து நிற்க்கும் இலைகள் கைகள் போல மாறி என்னை நோக்கி வா வா என்று அழைப்பது போல் இருந்தது .அதில் ஒரு இலை குத்தன கிளம்பி மேல் பக்கம் அசைந்து தலை போல காட்சி அளித்தது.இலையின் நடுவிலுள்ள காம்பு திறந்து மூடியது வாய் விட்டு சிரிப்பது போல் இருந்தது .நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது .என்னை அறியாமால் எனக்குள் ஒரு ஆனந்தம் ஏன் என்று தெரியவில்லை .எனக்கு தீடிரென்று தொடவேண்டும் என்று உணர்வு .உடனே அருகில் போய் இலையை வருடினேன்.
அப்போது தீடிரென்று சத்தம் மட்டும் தான் கேட்டது எனது உடல் கால் பகுதியில் தொடங்கி மெல்ல மெல்ல அருவமாக மாறி கொண்டிருந்தது.அதே நேரம் அந்த பிரதேசத்தின் சீதோஸ்ண நிலை மாறியது .தீடிரென்று ஒரு வித மணம் வீசியது .நாங்கள் சொல்லும் நறுமணத்துக்கு மேலான அந்த நேரத்தில் மட்டுமே உணரக்கூடியதான வாழ் நாளில் நான் நுகர்ந்திராத ஆனந்தம் தரக்கூடிய மணமாய் இருந்தது .. கோட்டைகள் கொத்தளங்கள் ,குதிரை தடம் தெரியும் பெரும் வீதிகளுடன் அங்கங்கு நெருப்பு பந்தங்கள் எங்கள் உலகத்து மேர்க்கூரி வெளிச்சத்தின் மேலான வெளிச்ச செலுத்தி கொண்டிருக்கின்ற இடமாக மாறி கொண்டிருந்தது. ..என்னில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கின்றன ஆனால் ..நானோ அருவமான நிலையில்
அங்கு ஆவி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன் ..தீடிரென்று ஒரு வித நக்கல் சிரிப்புடன் ஒரு குரல் கேட்டது . மகனே நீ இங்கு வருவாய் எனக்கு தெரியும் என்ற படி ...கேட்ட குரலாக இருக்கிறதே திரும்பி பார்த்தால் அந்த சாமியார் தான். ஆனால் வித்தியாசமாய் இருந்தார் .கொஞ்சம் இளமை ததும்பினதுமாக இருந்தார்
உடை அலங்காரமும் தலை அலங்கராமும் வித்தியாசமாய் இருந்தார் ,சிரிக்கும் போது தெரியும் பற்களின் அமைப்பும் மட்டும மாற வில்லை.
வா மகனே நல்ல நேரத்தில் தான் இங்கு வந்திருக்கிறாய் .. எங்கு நிற்கிறாய் தெரியுமா? நீ காலத்தை கடந்து
இறந்த காலத்துக்கு வந்திருக்கிறாய்
.உன்னுடைய சரித்திர ஆசிரியர்கள் சொல்லி தந்து போல் இங்கு இல்லை என இங்கு இருக்கும் சிறிது நேரத்தில் உணர்வாய் ..
.அவரே பேசி கொண்டு இருந்தார் .
அதோ பார் வெள்ளை இனத்தவரும் கடும் கறுத்த இனத்தவரும் சப்பை மூக்கு உடைய அமைப்புடையோரும் மிக கட்டை இனத்தவரும் அந்த பாய் மரக் கப்பலில் வந்து கரை ஏறி
கொண்டிருக்கிறார்களே ஏன் தெரியுமா?
.இந்த நாட்டின் அரசியல் பொருளாதார விற்பன்னர்கள் சேர்ந்து இன்று மாலை கருத்தரங்கு வைக்கிறார்கள் அதை கேட்க தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்
அந்த அரசியல் கருத்தரங்கத்தில் அருவமாக நான் . அவர்களின் உரை விளங்குவது கஸ்டமாக இருந்தது. நாம் பேசும் தமிழாக இல்லாமால் கமா ,கேள்விக்குறி முற்று புள்ளியுடன் இருக்கும் எழுத்து தமிழ் போல இருந்தது ..ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தது ..பிறகு இலகுவாக எனது மூளை யின் தினுசுக்களுக்களுள் அந்த உரைகள் அத்தியாயங்களாக மாறி நீண்ட பக்கங்களுடன் பெரிய புத்தகமாகவே சேமிக்க பட்டன.எனக்கு என்னவோ இந்த அரசியல் அறிவை எல்லாம் உடனடியாக எனது காலத்துக்கு சென்று பிரயோகிக்கவேண்டும் போல் இருந்தது.
கெஞ்சிய குரலில் கேட்டேன் எப்படி எனது காலத்துக்கு செல்லுவதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று சாமியாரை நோக்கி ...சாமியார் மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு இயல் நிலையை கடந்து காலம் கடந்து வந்தவர் திரும்பி சென்றது நடந்ததில்லை அது பல சிக்கல்களை தரும் என்பதால்.
எது எப்படியோ நான் அபாயத்தை எதிர் கொண்டு உனக்கு திரும்பி செல்லுகின்ற இரகசியத்தை சொல்லி தருகிறேன் அதன் படி செய் என்றார்.
அதோ குளம் மாதிரி தெரிகிறதே அதன் அருகில் இருக்கும் அருகில் இருக்கும் மரத்தில் பழம் மாதிரி இருக்கிறதை கடித்து துப்பு காலம் கடந்து செல்வாய் என்றார் .அவசரமாய் ஓடி அவர் சொன்னது போல செய்தேன் ..இப்ப அந்த பொட்டல் வெளியில் நான் மெல்ல மெல்ல தலையிலிருந்து காலை நோக்கி அருவத்திலிருந்து உருவமாக மாறி கொண்டு அரை நினைவுடன் மயங்கி இருக்கிறேன் . தூரத்தில் றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கிறது.
இவன் இங்கு நீட்டி முழுங்கி முழு அரசியல்வாதி மாதிரி பேசி கொண்டிருப்பதை பார்த்த றோட்டால் போன இவனது உறவுக்கார வயது போன மனிசி தன்னுக்குள் புலம்பி கொண்டு சென்றது...என்ன படிச்ச பொடியன் இப்படி பைத்தியகாரனாய் மாறி தன் நிலை தெரியாமால் பேசி கொண்டு திரியுது .என்ன இருந்தாலும் அவரவர் விதியை மார்த்த முடியுமே என்றபடி
இவன் இப்பவும் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறான் .ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பேசி கொண்டிருக்கும் கல் அத்திவார மேடைக்கு முன்னுள்ள புல் வெளியில் இவ்வளவு நேரமும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சிதறி வேறு பக்கம் பார்த்து கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன
Tuesday, July 17, 2012
மிதுவின் சிறுகதை -எது நிஜம் ?
Monday, July 16, 2012
மிதுவின் சிறுகதை -வீடு இல்லாதவன்
வீடு இல்லாதவன்(சிறுகதை)
என்னத்துக்கோ என்று தெரியாமால் முட்டி மோதி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் நிலக்கீழ் சுரங்க நிலைய பாதையின் ஒரு மூலையில் எந்த வித சலனமுற்று தூங்கி கொண்டிருந்தான் ஒருவன்.பலர் இப்படி அங்கும் இங்கும் தெருவோர பாதைகளில் தூங்குவது ஒரு காலத்தில் சூரியன் மறையாத ராஜ்யம் வைத்திருந்தவர்களின் தலை நகரத்திலும் இப்ப சகஜம் என்றாலும்.எனக்கு அவன் ஒருவிதத்தில் பரிச்சயமானவன்.
இதே பாதையில் இதே அவசரத்துடன் இதே பட படப்புடன் கடந்த பத்து வருடங்களாக யாருடையதோ பண மூட்டையை நிமிர்த்தி வைக்க சென்று வருகின்றேன் .அவர்கள் தூக்கி எறியும் அற்ப சொற்ப பணத்துக்காக.இப்படி சென்று திரும்பு வழியில் தான் அவன் என் கண்ணில் தென்பட்டான்.
குளிர்காலம் என்றால் என்ன கோடைகாலம் என்றால் என்ன அவனது உடை ஒரே மாதிரி தான் .அவனது சவரம் செய்யப் படாதா முகமும் கத்தரிக்கோல் கண்டு பல யுகமாய் இருக்கும் என்று நினைக்க வைக்கும் தலை மயிரும் வயது போனவன் போன்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோற்றமளிக்கும்.அவனை அண்மிக்கும் போது எதையும் யாசிக்காத கூர்மையான பார்வையும் அர்த்தமில்லாத மென் சிரிப்பும் மிளிரும். .அத்தருணத்தில் இளமையின் இளம் கதிர்கள் சிதறி நிற்ப்பதை காணலாம்
இவனை முதன் முதலாக கண்டேன் எப்பவென்றால். பல வருடங்கள் முன்பும் இதே அவசரத்துடன் சென்று கொண்டிருக்கும் பொழுது தன்னை மறந்த நிலையில் கிட்டார் வாசித்து கொண்டிருந்தான்.அவன் முன்னால் பெரிய துணி ஒன்று விரித்து கிடந்தது ..அதில் அங்கும் இங்கும் நாணயங்கள் சிதறி கிடந்தன.நாணயத்திற்க்காக நாணயாமாய் நடித்து
பாடுபவன் போல் தோன்றாது.அவன் தன்னை மறந்து தான் பாடி தான் ரசித்து வாசித்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றும்.அந்த அவசரத்தில் செல்லும் அவசரக்காரர்களுக்கு கூட அங்கு அவன் மூலம் வரும் இசையினால் அவனை தாண்டி செல்லும் அந்த சிறு கணத்தில் மகிழ்வை கொடுத்திருக்க கூடும் .ஏனென்றால் அவனை திரும்பி பாராமல் சென்றவர்கள் குறைவு என்று சொல்லலாம் அந்த நகரும் கூட்டத்தில்
.
சில நேரத்தில் எதுவும் செய்யாமால் சும்மா வெறித்து பார்த்தபடி அந்த தூணில் சாய்ந்தபடி இருப்பான் .அடிக்கடி காச்சல் தடிமன் வருத்தம் மனிதர்களுக்கு மட்டுமன்றி .இந்த ரயில்களுக்கும் ஏற்படும்,காய்ச்சல் அளவை தெரிவுக்கும் வெப்பமானி போல் தாமத கால அளவுகளை நிலைய ஒலிபெருக்கி தெரிவுக்கும்..அந்த சிறு கால தருணத்தில் அவனுடன் பேச்சு கொடுத்து பார்த்தால் என்ன என்று ஏனோ எனக்கு தோன்றும். அவனை நோக்கி சிறு புன்னகைப்பேன். அவன் ஒருமுறை பார்ப்பான் படாரென்று பார்க்க கூடாததை பார்த்த மாதிரி முகத்தை அங்கால் தூக்கி விடுவான்.இப்படி பல முறைகளாக பல காலங்களாக.
அங்கு மட்டுமெல்ல நகரத்தின் பெருந்தெரு கரையோரங்களில் கூட அவன் தனித்து மட்டுமன்றி அவனை போல உள்ள கூட்டத்தோருடையும் சேர்ந்து இருக்க காணுவதுண்டு. ஒரு நாள் இப்படியே நான் நகர்ந்து கொண்டிருக்கும் போது நகரின் மையப் பகுதியே என உணர்வின்றி, எந்த வித சலனமின்றி அங்கு கிடைத்த யாரோ ஒருவளுடன் சல்லாபித்து கொண்டிருந்தான்.அத்தெருவினூடக சனங்கள் போகின்றார்களே வருகிறார்களே என்ற எந்த வித பிரகஞை இன்றி .அவனும் அவளும் அவர்களின் வேற உலகத்தில் .சொர்க்கத்தை கண்டு கொண்டிருந்தார்களோ என்னவோ.
தீடிரென்று ஒரு சத்தம் எங்கையோ வந்த கார் சாரதி ஏதோ நினைவில் பின் றிவர்ஸ் எடுக்கும் போது இவர்களது ஆனந்தமய நிலையை குழப்ப அங்கு ஒரு போர்க்களத்துக்கான நிலை எடுப்பு உருவாகி கொண்டிருந்தது.அங்கு வெற்றி தோல்வியை தராமால் அவ்விடத்தில் இரத்த வெள்ளத்தை தந்து கொண்டிருந்தது..
அந்த சம்பவத்தின் பின் அதன் காரணமான சாட்சி சம்பிரதாயத்துக்கு சென்றதன் காரணமாகத் தான் அவனுடன் ஆழமாக பழக ஏற்பட்டது.பேச்சு கொடுத்து பார்த்தேன் ,,பேச்சு கொடுத்து பேசி பழகுவது எல்லாருக்கும் இயல்பானது இலவகுவானது தானே என்று நினைத்திருந்தேன் அவனுடன் பழகும் மட்டும்.கேள்வி பதிலில் இன்னொமொரு தேவையற்ற கேள்விக்கு இடமின்றி அவனின் பதில் இருக்கும் ..அப்படி பல
அவன் ஒரு phd முடித்த கல்வியாளன் அவனுடனான உரையாடலிருந்து பெறும் தகவல்களில் இருந்து கண்டு கொண்டேன்.அந்த படிப்பை அந்த பட்டத்தை அலட்சியமாக அநாயசமாக வெறுப்பதாக கூறினான்..சராசரிகளின் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறக இருந்தது அவனது எதிர்பார்ப்பு .சீ எந்த வித எதிர்ப்பார்ப்பே இல்லாத ஒருவனாய் இருந்தானே.அவனது நாடோடி தன்மை அவன் அனுபவிக்கும் சுதந்திர காற்று என்னிடமில்லையே என்ற வேதனை பொறாமை எல்லாம் அவனை காணப்போகும் போதெல்லாம் எனக்கு ஏற்படும்.நாங்கள் எல்லாம் காற்றடித்த யாரோ ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்டு இருக்கும், றீமோட்டோல் இயக்கும் பொம்மைகளாக தோன்றும் அப்போது.
காலம்களும் சும்மா இல்லை இயந்திரகதியில் நகர்ந்து கொண்டிருந்தது ..நான் அடிக்கடி சந்திக்கும நபர்களை கால இடவெளியில் காண நேரிடும் சந்தர்ப்பம் ஏற்படும். அவர்களிடம் இருந்து இளமையிலிருந்து இடம் மாறிய முதுமை தோற்றம் எனனுள் வந்ததை அப்ப தான் எனக்கு வந்து நினைவுறுத்தும் .இந்த இடைபட்ட காலங்களில் இவனை தேடி கண்கள் நான் போகும் இடம் எல்லாம் அலையும் ஆனால் .கண்ணில் படவில்லை .அவன்.எங்களைப் போல் அக்கம் பக்கம் கொஞ்ச நகராமால் அபாயத்தை துளியும் நேரிடயாக சந்திக்க துணிவில்லாமால் நேர்கோட்டில் வாழுபவனா .அவன்? .எங்காவது சென்று இருப்பான் என்று நினைத்தாலும் அவன் நினைவு என் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.
அவன் தூங்கி கொண்டு இருக்கிறான் என்றல்லா நினைத்து விட்டேன் ,ஏது நடந்து விட்டது .அவனை சுற்றி நிற்க்கும் பொலிஸ் உடை அம்புலன்ஸ் உடை தரித்தவர்கள் பரபரப்படன் இயங்கி கொண்டிருப்பதை பார்க்கும் போது செத்து கொண்டிருக்கிறானா செத்துவிட்டானா..என்ற ஏக்கம் என்னுள்.
அங்கு அவனை தூக்கி செல்கிறார்கள் .பார்க்க முடியவில்லை பரபரப்பாக செல்லும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது.வாழ்வதாக நினைத்து கொண்டு சடமாக வாழும் இந்த கூட்டம் வாழ்வையும் சாவையும் ஒன்றாய் நினைத்து வாழும் போதே வாழ்ந்து விட்டு செத்தவனை பார்க்க என்னமாய் அங்காலாய்க்கிறது என்று ஆத்திரமாய் வந்தது எனக்கு.
எல்லா பக்கம் செல்லும் நிலக்கீழ் ரயில்களுக்கும் ஒரே நேரத்தில் காச்சல் பீச்சல் ஏற்பட்டு விட்டதோ என்னவோ தெரியவில்லை.வழமையாக இதே நேரத்தில் பரபரப்பாக அசைந்து கொண்டு இருக்கும் கூட்டம் அசைவிற்று சிதறி நிற்பது போல தென்பட்டது ..இந்த இடையில் நிற்பவர்களின் வம்பு பேச்சை கேட்டு பார்க்கவேண்டும். கேட்டு பாருங்களேன் ஒரு ஆராய்ச்சியே செய்து முடித்திருப்பார்கள்.
இவர்களால் நகரின் அழகே கெடுது என்று பக்கத்தில் நின்ற மற்ற ஒருவனிடம் கூறிக்கொண்டு நின்றது . பார்க்க சகிக்காத கடுமையான மூஞ்சியை முகத்தில் ஒட்டியிருந்தது போல இருந்த கோட்டு சூட்டு போட்ட அழகற்ற கபோதி ஒன்று.
அதற்கு தலை ஆட்டி விட்டு தொடங்கியது மற்றவன். அதை போல இருந்த இன்னொன்று .அந்த ஆட்டத்துக்கு அர்த்தம் ஒம் என்றுதா இல்லை என்றதா கொள்ள முடியமால் இருந்தது
.
இவையளை ஒழுங்கு படுத்தி ஒரு வீட்டு வசதி செய்தாலும் அதுகள் திரும்ப வந்து றோட்டுக்கு வந்து படுக்குதுகள். அதுக்கு அரசாங்கம் என்ன செய்யிறது என்று தொட்ரந்து கொண்டு இருந்தார்.
அவன் இறந்து விட்டான் .அடுத்த நாள் பப்பராசி பத்திரிகையில் அவனது படத்துடன் முகப்பு செய்தியாக வந்ததது பெரிதாக ஆச்சரியமாக படவில்லை
அதை விட ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. அவன் உண்மையில் பரம்பரை கோடிசுவரன் என்ற உண்மையை வெளியிட்டு இருந்தது தான் ..இனிமேல் அவனை பற்றி உண்மை பொய்யும் கலந்து வெளியிட்டு பல கதைகள் சொல்லும் வேலையை அவர்களே செய்வார்கள் என்று நினைத்து கொண்டு நிலசுரங்க ரயில் நிலைய படிக்கட்டுளூடகா அதே படபடப்புடன் அதே அவசரத்துடன் சென்று கொண்டு இருக்கிறேன்
இப்பொழுது அந்த இடத்தில் அந்த பிளாட்பார தூணுக்கு கீழ் வேறு ஒரு வீடு அற்றவன் படுத்து கொண்டு இருக்கிறான்
Thursday, May 17, 2012
மிதுவின் (மே மாத -2012) சிறுகதைகள்