Pages

வாசகர் வட்டம்

Wednesday, August 11, 2010

வலித்தாலும் வாழ்க்கை அழகானது

டிக் டிக் டிக்

ஓயாமால் கேட்டபடி

என்ன அது

அதனருகே நான்,எத்தனையோ சத்தங்களை முன்பு கேட்டு கொண்டிருந்த பொழுதும் இப்பொழுது இந்த சத்தம் உறுத்தி கொண்டிருந்தது

அது ஒரு சுவர் மணிக்கூடு

அதனருகே நான் ,,ஏன்... இருக்க வேண்டும்...இருந்தே தீரவேண்டும்..அது ஒரு ஆஸ்பத்திரி வார்ட் ..நேற்று வரை நல்லாத்தான் இருந்தேன்..யார் சொன்னார்கள்...நான் தான் சொல்லுகிறேன்...மற்றவர்களுக்கும்
. பார்த்தவர்களுக்கும்..என்னை வருத்தக்காரன் மாதிரி என்று சொல்ல தோன்றாது....

ஏதோ தேவைக்காக யாருக்காகவோ ஆஸ்பத்திரி வந்த என்னை ஏதோ வருத்தமென்று பிடித்து வைத்திருக்கிறார்கள்...இரத்த பரிசோதனையில் ...வருத்தம் என்று டொக்டருக்கு தெரிந்திருக்கிறது ...அந்த செக்கிங் இந்த செக்கிங் எல்லா முடிந்தும் என்ன வருத்தம் என்று தெரியவில்லையாம் அதுக்காகவே சின்ன சத்திரசிகைச்சை செய்ய வேண்டுமாம்...

நாளைய பிணங்கள் இன்றைய நடை பிணங்கள் நேற்றைய சராசரி மனிதர்கள்..எல்லாரும்.இந்த வார்ட்டுக்குள் ..அவர்களை...குசலம் விசாரிக்க உறவினர்கள்...அன்பாகத் தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்...இப்படி எப்பவும்.மற்ற சமயங்களில் அன்பாகத் தான இருந்திருப்பார்களா . ...ஏன் என்னுள் எழவேண்டும் இந்த கேள்வி ..ஏன் இந்த அவநம்பிக்கை ..என்று என்னை கேட்க இந்த மனசுக்கு அவகாசம் கொடுக்கவில்லை......இந்த ...சுவர் மணிக்கூடு எனது கட்டிலில் அருகில் இருந்து கொண்டு மீண்டும் தொல்லை கொடுக்கிறது

டிக் டிக் டிக்

ஓங்கி உதை விட்டு உடைக்க வேணும் போல் இருந்தது ...உடைக்கலாம் ..எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது. பக்கத்து பெட்டில் இருக்கிறவன் ..லொக் லொக் என்று பிரேக் போடமால் இருமி கொண்டு இருக்கிறான்

இந்த அவல இருமலின் கனைப்பிலும் பார்க்க இந்த மணிக்கூட்டின் சிணுங்கல் எவ்வளவோ பரவாயில்லை என்று உணர்த்தியது

டிக் டிக் டிக்

இது தான் இந்த கணம் தான் உண்மை என்று அடிக்கடி உணர்த்தி கொண்டிருக்குதோ....

நாளைக்கு சத்திரசிகிச்சை ...இன்றைக்கே நான் சத்திரசிகிச்சை கூடத்தில் மனத்தளவில்...ஒரே பய பீதி ...ஒரு முறையும் இது வரை சத்திரசிகிச்சை செய்ய வில்லை...மரணமும் ஒருமுறையும் நிகழவில்லை தானே...அதை எல்லாம் நினைத்து இவ்வளவு காலம் பயந்து இருந்தேனா

.இந்த மணிக்கூடு டிக் டிக் என்று சத்தம் போட்டு விரைந்து ஓடுவதால் அதில் அந்த வெறுப்போ.....மணிக்கூட்டை ஓடாமல் சத்தத்தை நிறுத்தி விட்டால்...நாளை வராமாலா விடப்போகுது...அது சரி நாளை வராமால் இன்று எப்பவும் இருந்தால் நான் ஆஸ்பத்திரியில் எல்லவோ எப்பவும் இருக்கோணும்

அழகான பெண் நர்ஸுகளும் டாக்டர்களும் அங்கும் இங்கும் சிரித்து ஏதோ கதைத்து கலப்பாக கலப்பாக சென்று கொண்டு இருக்கிறார்கள்....அவர்களுக்கு என்ன அங்கு வேலை செய்பவர்கள் ....எங்களை போல நோயாளிகளா என்ன...அவர்களுக்கு ...இந்த ..டிக் டிக் உதவக்கூடும்....சிலருக்கு சிப்ட் முடிய உதவும் சிலருக்கு தொடங்க ..உதவும்...


அதில்....ஒரு நர்ஸ் கனிவோடு அந்த பக்கத்து பெட் கிழடோடு என்று பேசி கொண்டிருக்கிறாள்.......எனக்கு கொஞ்சம் பொறாமை தான் ..கொஞ்சம் முந்தி என்னோடு கனிவோடு மட்டு மன்றி சிரிக்க சிரிக்க பேசினாள்......அது அவளுடைய வேலை ..அவளுக்கு அப்படி பயிற்ச்சி அளிக்க பட்டு இருக்கிறது..என்று அந்த கணத்தில் புத்தி வேலை செய்யவில்லை


சத்திர சிகிச்சை பயத்தில் இருக்கும் பொழுது தேவையா இது என்று கேட்டால்....எந்த பய பீதியிலும்...ஹி..ஹி..ஹி....வாழ்க்கையின் சுவராசியமே அதில் தானே அடங்கி இருக்கிறது..... எல்லா நேரம் வாழ்க்கையில் பயந்து கொண்டு இருக்க முடியுமா...மரணமும் கட்டாயமும் நிகழத்தான் போகிறது....அதுக்காக இன்றைக்கே சுடுகாட்டில் இருக்க வேண்டுமா என்ன

நாளையை நாளை பார்த்து கொள்ளட்டும் என்று இருந்தால்...நாளையும் வந்து விட்டது..

அவள் அந்த நர்ஸ்தான் என்னை அந்த ஆஸ்பத்திரி கட்டிலில் வைத்து தள்ளி கொண்டு போகிறாள்....இப்படி எத்தனை பெயரை தள்ளி கொண்டு சத்திரசிகைச்சை கூடத்துக்கு போயிருப்பாள்...அவளிடம் தான் கேட்கிறேன்....இது என்னுடையது மைனர் ஒப்பிரேசன் தானே .. ரிக்ஸ் ஏதாவது இருக்குமே.என்று..அவள் சாதாரணமாக சொல்லுறாள் ...எந்த ஒப்பிரேசனும் ரிக்ஸ் தான் என்றாள்.சர்வ சாதாரணமாக

சத்திர சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை ஒன்று வீல் வீல் என்று சத்தம் போடுகிறது மற்ற பக்கத்தால் தள்ளி கொண்டு செல்லுகிறாள் இன்னோரு நர்ஸ்.அந்த குழந்தைக்கே வாழ்க்கையை தொடங்க முன்பே ...எங்களின் பட படப்பு அதுக்கு இப்பவே பற்றி கொண்டு விட்டது....

மயக்க மருந்து கை களினூடாக ஏற்றுகிறார் சத்திர சிகைச்சியாளர்.....மரணத்துக்கு பின்பு போல ..அதுக்கு பின் ஒன்றுமே தெரிய வில்லை

...அதே..டிக்...டிக் .. டிக் சத்தம் ..அந்த மணிக்கூட்டுக் கீழ் உள்ள
கட்டிலில் ...நான் ......உடம்பில் ...வலித்தது....உயிரோடு இருக்கிறேன் என்ற உணர்வு என்னிடம்...

வலித்தாலும் ...வாழ்க்கை அழகானது..

4 comments:

நிலாமதி said...

இன்று தான் உங்கள் பக்கம் வந்திருக்கிறேன் போலும்......உண்மை தான் வலித்தாலும் வாழ்க்கை அழகானது.சொல்லிய விதமும் அழகு. பாராட்டுக்கள்.

நிலாமதி said...

உண்மைதான் இன்பம் ...துன்பம் ....சோகம் ....நேசம் .....
துரோகம் எல்லாம் உள்ளது தான் வாழ்க்கை .வாழ கிடைத்த் ஒவ்வொரு நாளையும் அதன் பெறுமதியுடன் வாழ்ந்து விடுங்கள்.

Anonymous said...

வலித்தாலும் ...வாழ்க்கை அழகானது..
///
வாழ்ந்துதான் தீரணும்

சின்னக்குட்டி said...

வணக்கம் சதீஷ்குமார் உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றிகள்