Pages

வாசகர் வட்டம்

Wednesday, March 16, 2011

ஊருக்குள் புகுந்த கடல்



இயற்கையின் சீற்றத்தினால் நிலம் அதிர்ந்தது, கடல் ஊருக்குள் புகுந்தது,.ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அழிவு, பெரும் சொத்து நாசம் இதுவெல்லாம் அண்மைக்கால செய்திகள் .அதன் உச்சகட்டமாக ஜப்பானில் நடந்த அண்மையில் நடந்த அழிவினால் ஒரு முறை அணுகுண்டால் அழிந்த அந்த நாட்டில் இன்னுமொரு அணு கதிர் கசிவு ஏற்பட போகுது என்ற செய்திகள்.அந்த நாட்டை கடந்து தங்கள் நாட்டுக்கு வந்துடுமோ என்று அஞ்சு நாடுகள். தங்களுக்கு இந்த பிரச்சனையால் ஒரு ஆபத்து இல்லை என்று தங்களை தாங்களே சமாதானப்படுத்தும் நாடுகள் . இவையை பற்றித்தான் இந்த டிவி பத்திரிகை மற்றும் எல்லா தொடர்புசாதனங்களில் எல்லாம் பேச்சு ஆராய்ச்சி விளக்கம் கட்டுரைகள் .என்ன என்ன எல்லாம் விளக்கத்துடன் படங்களுடன் காரணங்களும் தீர்வுகளும் சொன்னாலும் அனுபவம் வாய்ந்த விஞ்ஞான தரப்பு இயற்க்கையின் குமுறலுக்கு அல்லது கோபத்துக்கு ஒன்றுமே செய்ய இயலாது என்று ஒப்பு கொள்ளுகிறது.ஒப்புக்கொண்டாலும் சில இடங்களில் சிலர் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு இவர்கள் காட்டுகிற கள்ள மெளனங்கள் எரிச்சலை ஊட்டுகின்றன.

அண்மைகாலங்களில் அடிக்கடி உலகத்தில் நடக்கின்ற இயற்க்கை அழிவுகளினால். இந்த மதவாதிகள் ஜோதிடர்கள் ஹாஸ்யம் கூறுவர்கள் புனை திரை கதை கூறுகின்றவர்கள் சொல்லுகிற மாதிரி 2012 உலகம் அழிய போகிறது என்ற உண்மையை . பொய்யை அல்லது கற்பனையை பலரும் இப்பொழுது உற்று நோக்குகிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது.ஆஸ்தினாகட்டும் நாஸ்திகனாட்டும் அவர்களுக்கு வரும் மரண பயம் என்றது பொதுவே.பொதுவாக சொல்லுவார்கள் மரணம் அண்மை கணங்களில் நிகழப்போகுது என்று தெரியும் போது பயம் பெரிதாக வராது என்று .ஆனால் இப்படியான உணர்வு தான் வருமென்று.. நான் சரியாகவே வாழவே தொடங்கவில்லை அல்லது வாழவில்லை ..அதுக்குள் அழியப்போகிறனே என்று .ஆனால் இப்பொழுது தனிமனித பயத்தை தாண்டி இன்னும் சரியாக வாழ தொடங்காத ஒட்டு மொத்த மனித குலத்துக்குரிய பயமாக மாறி இருப்பதை டிவி பத்திரிகைகளில் நடைபெறும் விவாதங்கள் காட்டுகின்றன.

2004 வருடம் ஒரு நாள் ஒரு நள்ளிரவு தாண்டி அசந்து ஆழ்ந்து தூக்கி கொண்டிருந்த எங்களை டெலிபோன் மூலம் அடித்து எழுப்பி ஒரு அவல செய்தி சொன்னான் என் நண்பன் ஒருவன் .நாட்டிலை ஊருக்குள் கடல் புகுந்து விட்டுதாம் பலர் கடலோடு சங்கமாகிவிட்டாராம் என்று .அதுக்கு பெயர் சொன்னான் சுனாமி என்று. இந்த பெயரை ஞாபகபடுத்தி பார்த்தேன் அணமை காலத்தில் கேள்விபட்டிருக்கிறேன் அதுவும் கமலின் படமான அன்பே சிவம் படத்தில் ,கமல் இந்த சுனாமி பற்றி சொல்ல மாதவன் இங்க எல்லாம் வராது என்று சொல்ல இங்கு வரும் என்று கமல் கூறுவார்.எங்கள் அனுபவத்தில் இயற்கை அனர்த்தம் என்றால் ஒரு சூறாவளி ஒரு பெரும் அடை மழை ,ஆறு குளம் பெருக்கெடுத்து வழிவது ,ஒரு மண் சரிவு என்று தான் இருந்திருக்கும் .இந்த கடல் புகுந்த அனுபவம் எங்களுக்கும் இருந்திருக்கவில்லை எங்கள் ஊருக்கும் இருக்கவில்லை என்பது தான் உண்மை.

சுனாமி என்றதை ஒத்த ஒரு கடல் அழிவு நடை முறையினால் தான் குமரி கண்டம் முழுகினதாக சொல்லுவார்கள் இதை தமிழில் கடல் கோள் என்று கூறுவார்கள் .சங்கம் வளர்த்த மதுரை இப்ப இருக்கிற தமிழ் நாட்டில் உள்ள மதுரை இல்லை அழிந்த குமரிகண்டத்தில் உள்ள மதுரை தான் என்று கூறுவோரும் உள்ளர்.கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வாசித்த காலத்தில் அதில் கடல் கோளை பற்றிய வர்ண்ணையை வாசித்ததாக ஞாபகம், இந்த பூமி அதிர்ச்சி கூட ஓரு பாடத்தில் படித்த விடயமாக ஒரு செய்தியாக கன காலமாக எனக்குள் இருந்தது .செய்தியாக இருந்த இந்த விசயம் ஒருமுறை அனுபவமாக மாறியது எப்பவெனில் 2002 இல் விடுமுறைக்கு இந்தியா சென்ற போது சென்னையில்.திருவான்மையூரில் எனது உறவினரின் மொட்டை மாடியில் ஜாலியாக பேசி கொண்டிருந்த போது இந்த அதிர்வை உணர்ந்தேன்.அந்த மரண பயத்தினால் அன்று இரவு முழுவதும் தூங்கமால் தூங்கி கொண்டு றோட்டிலேயே இருந்து இருக்கிறார்கள் பலர் ..வருவது வரட்டும் ஊரோடு ஒத்தது தானே என்று நினைத்து கொண்டு மற்றவர்கள் போலல்லாது நான் வீட்டிற்க்குள் போய் தூங்கி விட்டேன் .ஆழமான தூக்கம் கிடைத்தது அன்று. அருமையான தூக்கம் எனது வாழ் நாளில் ஒருபோதும் தூங்கி இருக்கவில்லை.அப்பிடி ஒரு சுகனுபவம் அதற்கு காரணத்தை என்னுள் தேடினேன் கிடைக்கவில்லை . அப்பொழுது தான் அங்கிருந்த பெரிசு ஒன்று சொல்லிச்சுது மரணத்துக்கு அருகாமாயில் வரும் பொழுது ஒரு சுகானுபவம் வருமென்று .

2004 இல் வந்த சுனாமி சுப்பர் மூன் என்று அழைக்கப்படும் சந்திரன் பூமிக்கு அண்மையில் வந்த இரண்டு கிழமைக்குள் வந்ததாயும் அது போல் இந்த ஜப்பானில் நடந்த சுனாமியும் வருகின்ற மார்ச் 19 ந்திகதி அன்று நடக்கிற சுப்பர்மூன் காரணமாகத்தான் வந்ததாயும் கூறுவோரும் உளர். இந்த சந்திரனுக்கும் கடலுக்கு ஏதோ தொடர்பு இருக்கத்தான் செய்யுது எனது அனுபவத்திலலை பார்க்கும் போது . வடமராட்சி பகுதியில் உள்ள வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தம் பெளர்ணமி அன்றுதான் நடைபெறும் அப்பொழுது அந்தகடல் ஊருக்குள் வந்து விட விருப்பம் காட்டுவது போல பொங்கி எழும்பி ஜாலம் காட்டும்

சில வேளை இந்த இயற்கை அழிவினால் ஜீவராசிகள் இல்லாமால் போய் நான் ஒன்று இல்லாமால் போனாலும் நானும் நானிமில்லாத ஒன்று இருக்க தானே போகிறது.

No comments: