Pages

வாசகர் வட்டம்

Thursday, May 17, 2012

மிதுவின் (மே மாத -2012) சிறுகதைகள்



வகுப்பறை 11B(சிறுகதை)


எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான பலப் பரீட்சை என இன்னும் நினைக்கவில்லை தானே என்று அப்பொழுது திருப்தி பட்டுக் கொண்டான். .நாட்டை விட்டு ஓடி எவ்வளவு காலத்துக்கு பிறகு திரும்பி வந்து ஒரு சாரமும் சேட்டுடன் காசுவலாக மூன்று மைல் நீளப்பாட்டுக்கும் நாலு மைல் அகலப்பாட்டுக்கும் கால் போன போக்கில் பைத்தியக்காரன் போல் நடந்து திரிகிறான், அப்படி ஒரு ஆசை இருந்தது அதில் ஒரு சந்தோசம் இருக்கும் என நினைத்து அப்படியே நடந்தாலும் இன்னும் ஒரு தெரிந்தவன் படித்தவன் கூட அவன் கண்ணில் தென் படவில்லை ..அட எல்லாரும் ஒட்டு மொத்தமாக தன்னைப் போல வெளியிலை ஓடி தொலைந்திட்டாங்களாக்கும் என்று நினைத்து கொண்டு அந்த கோயில் வாசலின் உள்ள தூணுக்கருகில் அப்பாடா என்ற குரலுடன் வந்த நீண்ட மூச்சை வெளியில் விட்ட படி காலாற குந்தினான். .


 

கோயிலில் யாரும் இல்லை .அப்பிடி ஒரு தனிமை அங்கு அப்பப்ப இடைக்கடை எங்கிருந்தோ வாற .இதமான காற்று வந்து அவனை தழுவி செல்ல அப்படியே அந்த வாறந்தாவில் புரண்டு படுத்தால் என்ன சந்தோசமாக இருக்கும் என்று ஒருமுறை நினைத்து பார்த்தானே ஒழிய அப்படி செய்ய அவனால் முடியவில்லை.என்னதான் காசுவலாக உள்ளுர் வாசி போல வேசம் போட்டாலும் உள் மனம் வெளிநாட்டு வாசியாகவே போலி கெளவரத்துடன் உருவமைப்பதை நினைத்து வெட்க பட்டு கொண்டான்.

 

 

அவனது தனிமையை மட்டுமல்ல அங்கு மூலஸ்தான மூடிய அறையில் அம்மனோ காளியோ கல்லாக இருக்கும் அவளின் தனிமை கூட குலைந்தது. தரிசனம் என்ற போர்வையிலும் பூஜைக்கான ஆயத்தம் என்ற போர்வையிலும் வந்தவர்களின் பிரச்சன்த்தால் .அவற்றில் அங்கு பூஜை செய்ய வந்த ஜயரும் ஒருவர் .பூஜைக்கான ஆயத்தங்கள் செய்வதில் அக்கறை, படபடப்பு அவரின் முகத்திலும் அசைவிலும் தெரிகிறது .காலம் காலமாக உந்த கடவுள்களுக்கு அலங்கரித்து ஆலாவனம் பண்ணி பூஜை புனகாரம் எல்லாம் செய்து அங்கிருந்து இங்கு சக்தி பெற்று கொடுக்க முனையும் சராசரி பூசாரி போல ஒருவர் தான் இவரும் என்று மேலோட்டமாக பார்க்கும் பொழுது கூட அவனுக்கு எழவில்லை ...எங்கையோ.. எங்கோ .. அருகில்.. மிக அருகில் இன்னும் எனது உணர்வுகளை பகிர்ந்த ஒருவர் தான் உறுதி செய்தாலும் முழு விவரங்களை தேடி மூளை வெகு வேகமாக இயங்கி கொண்டிருந்தது.அட மையிக் சுந்தரம் அவரா ...நீங்கள் என்று சொல்லாமால் அவனா நீ அவனை அறியாமால் வாய் உளறியது ,என்னமாய் மாறி விட்டான் அதை விட ஜயன் என்று இவ்வளவு காலமும்தெரியாதே என்ற ஆச்சரியுமும் மேலோங்கியது
.

 

 

.உந்த கல்லுக்கு இனிமேல் செய்ய போகும் அலங்காரத்தை ஏற்கனவே அவன் தனக்கும் செய்து தன் மேல் மற்றவர்களுக்கு பக்தியும் பரவசமும் வரும் கோலத்தில் நிற்கிறான். என்னதான் ஓரே வகுப்பில் பக்கத்து வாங்கில் இருந்து படித்தவன் என்றாலும் நீ ..அவன் என்று கூப்பிட்டால் என்ன நினைப்பார்கள் என்று மட்டுமின்றி அதுக்கு மேலும் எதுவும் நடந்து விட்டால் என்று அஞ்சி அவருக்கு அருகில் சென்று ஜயா என்னை ஞாபகமிருக்கிறதா என்று ஒரு வாஞ்சையுடன் ஆவலுடன் கேட்டான் ...

 

 


கண் மட்டத்தில் கை மட்டத்தை வைத்து அவனது உருவத்தை குளோசப்பில் கொண்டு வந்து கூட அவனை அவர் யார் என்று தெரிந்து கொள்ளாமால் தவித்தார் .காலம் என்ற வில்லன் தொடர்ந்து ஞாபக நினைவுகளை தொடர்ந்து கடத்தாமால் தவிர்ப்பதற்க்காக ஒரு துணிந்த கதாநாயகனாக விரைந்து ..அட மையிக் சுந்தரம் நான் தான் டா ,,,என்று தொடங்கி பள்ளிக்கால நினைவுகளை சொல்லி ஞாபக படுத்துவது மட்டுமில்லை ...வகுப்பறை நினைவுகளான மற்றவர்களுடைய டிபன் பொக்சில் இருந்து முட்டை பொரியல் திருடி சாப்பிட்டதில் தொடங்கி ,,,அவன் அந்த சிறிய வயதில் செய்த ஹிப்னொடிசம் சாகசங்கள் பலவற்றை சொல்லி பள்ளிக் கால உருவத்தை கொண்டு வந்த மறு கணமே ,தனது ஜயர் வேசத்தை கூட மறந்து அவனை இறுக அணைத்து கொண்டார். அங்கு அவர்கள் காதலாகி கசிந்து கண்ணீர் உருகும் காட்சியை ,,அங்கு அம்மன் தரிசனம் பெற வந்தவர்களுக்கு வழங்கி கொண்டிருந்தனர்.

 

 


தூரத்தில் தெரிகிற அந்த கடலின் அலை சத்தத்தையும் மீறி உங்களுக்கு ஓரே அலை வரிசையில் ஒரு சத்தம் கேட்டு கொண்டிந்தால் அது தான் அந்த பள்ளிக்கூடம். காலனித்துவ கல்வியாளனோ நிறுவனமோ அல்லது மதம் மாற்றி வலை பிடிக்க வந்த கூட்டமோ யாரோஅந்த பள்ளிக்கூடத்தை நிறுவியதானால் என்னவோ அந்த தன்மைகளில் சிறிதும் நழுவ முயற்சி செய்யமால் இன்று வரை அவற்றை அடியொற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறது.,அதில் ஒரு தற்பெருமை அதுக்கு.இந்த பள்ளியின் அருமை பெருமைகளை சொல்ல தேவை இல்லை அந்த நூற்றாண்டு கால பெருமையை அப்பள்ளி வாசலுக்குள் காலடி வைக்காதவன் கூட கதை கதையாக கூறுவான் .ஏதோ தட்டு தடுமாறி இந்த மையிக் சுந்தரத்துக்கும் அவனுக்கும் கூட இந்த பள்ளிகூடத்திற்க்குள் காலடி வைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அதனால் அந்த பள்ளிக்கு பெருமை சேர்த்தார்களோ பள்ளியால் இவர்கள் பெருமை பட்டாரகளோ என்று சொல்லுவதற்க்கு ஒன்றுமில்லை ,சொல்ல முனைந்தாலும் பெரிய சுவராசியமாக ஒன்றும் இருக்காது .நிச்சயம் சுவராசியமாக ஏதும் சொல்லலாம்.பான பட அந்த றோட்டை பார்த்தபடி இருக்கிற கட்டிடத்தின் அந்த பழமையான மரத்துக்கு அண்மையில் ஒரு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறதே கொஞ்ச கால மாக அதை 11B என்று சொல்லி கொண்டிருக்கிறார்களே அதை பற்றி.

 

 

 

அந்த வகுப்புக்கு கெமிஸ்ட்டிறி மாஸ்டர் வருவார் பிசிக்ஸ் மாஸ்டர் வருவார் அப்படி அதில் பொட்னி டீச்சரும் வருவார் ..பாடம் நடக்கும் ..நாளைய டொக்டர்களும் என்ஜீனியர்களும் முன் வருசையை பிடித்து வைத்துருப்பார்கள் தெரிந்த விடயம் தானே ...முன் வரிசை இருந்தால் பின் வரிசை இருக்கும் தானே ..அதில் தான் நம்ம மையிக் சுந்தரமும் அவனும் இருப்பார்கள் என்று சொல்லாமால் உங்களுக்கு தெரிந்திருக்கும் .அதை மீறி ஒருவன் 16 வயதில் வயதுக்கு மீறிய பரம் பொருள் ரகசியத்தை சொல்வது மாதிரிஅங்கிருந்தவர்களுக்கு எப்பவும் ஏதேனும் சொல்லிக்கொண்டிருப்பான். ..அதில் எல்லாம் சினிமா இருக்கும் இலக்கியம் இருக்கும் கவிதை இருக்கும் காதல் இருக்கும் களவியல் இருக்கும் ,எல்லாம் பாடம் நடந்து கொண்டிருக்கும் மாறிக்கொண்டிருக்கும் இடைவெளியில் தான் என்றது தான் ஆச்சரியமான விடயம் .முன் வரிசை மாணவர்களுக்கு இவன் சொல்வது விளங்காது .தங்களுக்கு மட்டுமே என விளங்க முடியும் என நினைத்து கொண்டிருக்கின்ற தாவரவியல் சூத்திரங்களிலும் பாரக்க ஏதோ விளங்காத ஒன்றை சொல்லுகிறான் என்று அதிசையத்தாலும் தேவை இல்லாத விடயம் என்று தான் அலட்சியமாக பார்ப்பார்கள்.

 

 

 

இதை விட நடுவரிசை மாணவர்கள் ஒன்று இருக்கிறார்கள் தெரியுமா ..தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள் ..அவர்கள் படிப்பிலும் கண்ணு இப்பிடியான விடயங்களிலும் ஒருஈர்ப்பு.இருக்கும்.அப்படி ஒருவன் தான் ராகவன் ..கிளுகிளுப்பாக நயம் பட இந்த விடயங்களை சொல்லும் பொழுது காதை பின்னுக்கு நீட்ட தவறுவதில்லை... ஒரு கட்டாக்காலி மாடு அசை போட்டு நடந்து கொண்டிருக்கும் அதன் பின் நடுத்தர பெண் ஒருத்தி வாழ்க்கை சுமையின் வலிகள் முகத்தில் தெறிக்க அந்த றோட்டில் கடந்து கொண்டிருப்பாள் ,,,பாடம் எவ்வளவு மும்முரமாக நடந்து கொண்டிருந்தாலும் அங்கு தான் எல்லார் கண்ணும் போகும் இதில் முன் வரிசை பின்வரிசை பேதம் இல்லாமால் ..என்ன தான் இருந்தாலும் அவனின் கருத்துகளை ரசித்து கேட்டாலும் ,அவனது குரு பக்தி ...ஆசிரியர்களை மதிக்காமால் இவர்கள் நடந்து கொள்வது துப்புரவாக பிடிப்பதில்லை ..மனதில் எத்தனை நாள் திட்டி இருப்பான் ...ஆசிரியர்களும் இவர்களை கண்டு கொள்ளுவதில்லை ...மனத்தளவில் இவர்களை ஒதுக்கியே வைத்து இருக்கிறார்கள் ...யார் கண்டார்கள் இவர்களில் நாளைய காலத்தின் பிரபல எழுத்தாளனும் இருக்கலாம் அல்லது பிரபல அரசியல் கட்சியின் தலைவனும் இருக்கலாம் ..இதை எல்லாம் ராகவன் யோசித்து பார்க்கவில்லை

 

 


..பொட்னி பாடத்திலும் பார்க்க பொட்னி வகுப்பு பிடிக்கும் ராகவனுக்கு .ஆனால் பலருக்கு பொட்னி பாடத்திலும் பார்க்க பொட்னி டீச்சரை பிடிப்பதில்லை ...இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமால் இருக்கிறதே என்ற தாழ்வு மனப்பான்மையால் பாடம் நடத்தும் நேரத்தில் ஒரு நிமிடத்தில் எத்தனை தரம் சீலை இழுத்து இழுத்து மூடிகொண்டே இருப்பா என்று சொல்ல முடியாது அப்படி அவ்வளவு தரம் இருக்கும் . ...சில வேளை அக்கறையோடு உற்று நோக்கி படிப்பவர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியமால் இருக்கலாம்.அதை பார்க்க ரஜனி செய்யும் மெனரிசம் ஒன்று போல இருக்கும்

 

 

 

நம்ம இலக்கியவாதி இருக்கிறானே ....சிலவேளை பாடம் நடக்கும் பொழுது கண்ணை முழித்து கொண்டே கனவு காண்பான் ..அப்படித்தான் முழித்து கொண்டு தனது கற்பனை பெண்ணை வைத்து கவிதை வடித்து கொண்டிருந்தானோ அல்லது எப்போதோ வாசித்த மோக முள் நாவலின் வசனங்களை இரை மீட்டு கொண்டிருந்தானோ தெரியாது ...நடந்த கொண்டிருந்த தாவரவியல் பாடத்தின் சிலபஸ் தீடிரென்று மாறியது ...பொட்னி டீச்சர்..சரமாரியாக இவனை நோக்கி ...தாக்குதல் கணைகளை வீசி கொண்டிருந்தா..குரு என்ற மதிப்பில்லை என்று ...தொடர்ந்து கொண்டிருந்தது ...தீடிரென்று நனவு உலகத்துக்கு வந்த அவனுக்கும் விளங்கவில்லை ...அந்த வகுப்பில் உள்ளவர்கள் எவருக்கும் விளங்கவில்லை..டீச்சருக்கு மட்டும் அப்படி விளங்கி இருக்கிறது தன்னை உற்று பார்த்து தன்னை சைட் அடிக்கிறான் என்று ...டீச்சரில் பார்க்க ராகவனுக்கு தான் கோபம் அதிகம் இவன் குருவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று ...

 

 


தீடிரென்று ஏதோ காரணத்தினால் அவசர ஆசிரியர் கூட்டத்துக்கு அதிபர் அழைப்பு விட்டு இருந்தார்.எப்பொழுது வகுப்பு முடியும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்கவா வேண்டும்.எல்லா வகுப்பிலும் கும்மாளம்

 

 


அப்படித்தான் 11B யிலும்

 

 


இந்த மையிக் சுந்தரத்தை பார்த்து இந்த இலக்கியவாதி.உசுப்பேத்தினான்..

 

 


என்னடா ஹிப்னாடிசியம் தெரியும் என்று சொல்லுறீயே ..செய்து காட்டு பார்ப்பம் என்று

 

 


யாராவது சம்மதித்தால் செய்து காட்டுறன் என்று கூறினான் சுந்தரம் கொலரை இழுத்து கொண்டு

 

 



யாருமே சம்மதிக்கவில்லை ...வீம்பு காட்டி கதைக்கும் இலக்கியவாதி முதற்க்கொண்டு

 

 

அறியும் ஆவலோ என்னவோ ராகவன் இதற்க்கு சம்மதித்தான்

 

 

உண்மையில் மையிக் சுந்தரம் திறமை சாலி தான் ..ஆழ்ந்த ஹிப்னாடிச தூக்கத்தில் ராகவன்

 

 

பல கேள்விகளை ..கேட்டு கொண்டிருந்தான் சுந்தரம் ஆழ்நிலையில் வைத்து க்கொண்டு

 

 

பதில்களை சரியாக சொல்லி கொண்டிருக்கிறான் ..பள்ளியில் முதல் சேர்ந்த முதல் திகதி கொண்டு

 

 

-------

 

 

------

 

 

-------

 

 

------

 

 

யாரோடு படுத்திருக்கிறாயா இவ்வளவு காலத்தில் ?

 

 

இல்லை என்று அனுங்கிய குரலில் பதில் வந்தது

 

 

யாராயாவது காதலித்து இருக்கிறாயா என்று கேள்விக்கு

 

 

ஓம் என்றான்

 

 

யாரை என்றதுக்கு

 

 

பொட்னி டீச்சரை என்று மகிழ்ச்சியுடன் பதில் வந்தது

 

 

அடுத்த பாடமும் பொட்னி பாடம் தான். இன்றைக்கு டபிள் பீரியட் எல்லோ

 

 

அப்ப வகுப்பறை 11B எப்படி இருக்கும் ஒன்று கட்டாயம் அவதானியுங்கோ ஒருக்கா ..என்ன?

 

 

(யாவும் கற்பனை)

 

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 



சுருங்கிய தோலின் சுருங்காத எண்ணங்கள்(சிறுகதை)
என்னடா பயல் இப்படி கதை விட்டுட்டு போறானே என்ற பாவனையில்..அங்கு கூடி நின்றவர்கள் ஒருதரை ஒருத்தர் பார்த்து கொண்டனர் .இப்படித்தான் பத்து பேர் வருவான் பத்து கதை சொல்லுவான் இதெயல்லாம் நம்பி கொண்டு இருக்க முடியுமா ..அண்டைக்கொரு நாள் பாருங்க ....இப்படித்தான் ஒருவன் வந்து ....என்று கொண்டு ...அங்கு சிறிது நேரம் நீடித்த இனம் தெரியாத அமைதியை இல்லாமால் ஆக்கி கொண்டு அங்கு சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவன் பேச்சை தொடங்க கல்லா பட்டையில் இருந்து ஒருவன் குரல் கொடுத்தான் கதையை விட்டுட்டு கஸ்டமரை கவனியடா என்று .

 


.இப்படி வாறவர் போறவர் கதைக்கறவர் சிரிக்கிறவர் கேலி செய்கிறவர் சாப்பிடுறவர் குடிக்கிறவர் பத்திரிகை பார்க்க வருகிறவர் வெட்டி கதை அழப்பவர் எல்லாரோயும் வேடிக்கை பார்த்து பொழுது போக்கி கொண்டிருக்கவே ஒரு கூட்டம் எப்பவும் அந்த கோப்பிக் கடையில் இருக்கும். .அவர்களுக்கு என்று அந்த கடையில் உள்ள மூலையில் உள்ள கதிரை மேசைகளை உத்தியோக பூர்வமகா வழங்கபட்டிருக்காவிடினும் அதை தங்களுக்கென்று நிரந்தரமாக்கி வைத்திருப்பர் .அந்த இளைஞர் முதியவர் என்ற வேறுபாடின்றி இருக்கும் வெட்டி கூட்டத்தில் இருந்து கொண்டு மணியத்தார் வழமை போல எல்லவாற்றை கவனித்து கொண்டிருந்தார் .அந்த கோப்பிக்கடையின் வியாபாரத்தின் நாடி ஓட்டத்தை பொறுத்து இவர்களின் கூச்சலும் கும்மாளம் கூடி குறைந்து இருக்கும் ...அந்த கூட்டத்தில் ஒருவராக அதிகம் நேரம் அங்கு பிரச்சனமாயிருந்தாலும் அதிகம் கதைக்க மாட்டார்.

 

 


...கதைத்தாலும் ஒரிரு வார்த்தைகள் தான் கதைப்பார் அதுவும் தங்களுடைய கூட்டதுக்கு தான் அதுவும் இதை மட்டும் தான் கூறி கொண்டே இருப்பார் ..இது ஊர் தேத்தணி கடைக்கு முன்னாலுள்ள பெஞ்ச் இல்லையடாப்பா.. இது லண்டன் ..அவன்ரை வியாபாரத்தை பழுதாக்கமால் எங்கட அலுவலை பார்க்கோணும் ..

 


.பெரிசு ....சும்மா கிட பேச மாட்டாய் ..பேசினால் எப்பவும் இதைத் தான் கீறல் றைக்கோட் பிளேயர் மாதிரித் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாய் ,,,,ஓனரே ,,பேசாமால் இருக்கிறான் ...அவனுக்கு நாங்கள் இருப்பதனால் வருவாயோ என்னவோ இதையே பதிலாக எப்பவும் சொல்லும் நெட்டையனுக்கும் அங்கு வந்த கஸ்டமருக்கும் தேவையில்லாத கதை தொடங்கி எங்கையோ முடிந்து பெரிய சண்டை வராமால் தடுப்பதே பெரும் பாடய் போய் விட்டது ஓனருக்கு ..

 

 

 

.அது தான் வேலையாளி மேல் காட்டுறார் என்று நினைத்த மணியத்தார் .அங்கு இருக்க பிடிக்காமல்.தனது மூன்றாம் காலான வாக்கிங் ஸ்ரிக்கையும் எடுத்து ஊன்றி க்கொண்டு மெல்ல மெல்ல வெளியே வந்தார். இவ்வளவு தூரம் இங்கு வந்தும் அவர்கள் போடும் சத்தம் தமிழில் கேடபதை உணர்ந்தார். அவர்கள் கறுவல் கூறிய விடயத்தை தான் இப்ப கதைக்கிறார்கள் விளங்கியது ..வழமையாக அவருக்கு காது அவ்வளவு கேட்காது .ஆனால் அதைத் தான் அவர்கள் கதைக்கிறார்கள் தெளிவாக உணர்ந்ததை பற்றி அவர் ஆச்சரிய படவில்லை .ஏனெனில் அவரது கால்களும் வாக்கிங் ஸ்ரிக்கும் ஒவ்வொரு அடியாக வைத்தாலும் அவரது மனமும் அதை நினைத்து தான் திரும்ப திரும்ப அசை போட்டு கொண்டிருந்தது!

 

 

 

அவர் எழுபதுகளின் அந்தியை அவர் தொட்டாலும் அந்த காலம் பேசிய கொள்கையின் நம்பிக்கைகளை இன்னும் நம்பிறன் நடக்கிறன் என்று நினைக்கிறார். நடை முறையில் அப்படி இல்லை என்பது தான் உண்மை. .இதை எல்லாம் ஒரு விசயமாக பொருட்டாக கருதி இன்னும் அதனுடன் போராடுவது வெறுப்பை தட்டியது .அவன் சொன்ன விடயம் அவர் வழமையாக குறுக்கு பாதையாக கை கொள்ளுகிற அந்த பார்க்கில் தான் நடந்ததாம்.

 

 



வரும் பொழுது இருந்த ரம்மிய மான சூழ்நிலை இப்பொழுது அங்கு இல்லையென்றாலும் வீட்டை போய் என்ன வெட்டி விழுத்த போறனோ? மருமகளின் வெறும் குத்தல் பேச்சுக்களை கேட்டு மன நோகிறதிலும் பார்க்க இதில் கொஞ்சம்இருப்போமே என காலாற அந்த பெஞ்சில் அமர்ந்தார்

 

 


உதிர்ந்த மரங்களில் இலைகள் மெல்லிதாக மலர தொடங்கும் அறிகுறியை காட்டி கொண்டிருந்தன.தூரத்தில் இருந்த கல்லறையில் ஏதோ அசுமாத்தம் ...சுற்று முற்றும் பார்த்து இந்த சூழலோடு ஒன்றி தேவையற்ற சிந்தனையை ஓடாமால் இருப்பதுக்கு முயன்றாலும் மனக் குதிரை தேவையில்லாமால் பின்னோக்கி தான் சவாரி செய்து கொண்டிருந்தது.இளவேனில் காலத்தின் ஆரம்பம் என்ன குதுகாலம் சந்தோசம் சிறுவர்கள் அதை வரவேற்பது போல் விளையாடிக்கொண்டிருந்தார்கள் ..ஒரு இளம் ஜோடி தங்களை மறந்த ஒரு உலகத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்

 

 

.இவருக்கு முன்னால் உள்ள பெஞ்சிலுள்ள கிழவி ஒருத்தி தூரத்தில் தெரியும் கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருந்தாள் ..அவளுடைய நாயோ தெரியாது தூரத்தில் ஓடுவதும் அவளுடைய காலடியில் வருவதுமாக இருந்து கொண்டிருந்தது.அதுக்கு கூட என்ன குதூகலாம் ..வயோதிபம் வரக்கூடாது ...வர முன் போயிடணும் ..அவருடைய ஆத்தா ...அந்த காலம் என்னை நேர காலத்துக்கு கொண்டு போய் சேர்த்திடு நல்லூரானே என்று வேண்டுவது சும்மா புலூடாவில்லை உண்மை தான் என்று நினைத்தார் ..இந்த தனிமை இந்த வேதனையுடன் மரணத்துக்கு காத்திருப்பதை தவிர வேற ஒன்றும் தான் செய்து கொண்டிருக்கவில்லையே ....அந்த உதிர்ந்த மரம் கூட மீண்டும் துளிர்க்கின்றது ..எனது சுருங்கிய தோலுகள் அப்பொழுது இருந்த இளமையுடன் இனிமேல் வருமா என நினைத்து இயற்கையின் ஓர வஞ்சனை நினைத்து திட்டிக்கொண்டார்

 

 


என்றும் சம்பந்த மில்லாமால் தனது மன ஓட்டங்கள் ஒரு கோவை இல்லமால் அங்கு இங்கு ஒடுவது போல் இருந்தது .முன்னிருந்த கிழவி அவரை பார்த்து உற்று பார்த்தது போல் இருந்தது .புன்னகை செய்த மாதிரி இருந்தது ..இவரும் பதிலுக்கு புன்னகைக்க முற்பட தீடிரென்று காட்சி மாறி அந்த கிழவி கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருக்க அந்த நாய் அவளுடைய காலடிக்கு வருவதும் தூரத்தில் ஒடுவதுமாய் இருந்தது,தனது மன ஓட்டத்தில் பிழையா கிழவி தான் சும்மா தமாஸ் பண்ணுறாளா ..என்று தெரியாமால் தவித்தார்...

 

 

 

இந்த வயதில் அவள் செய்தால் என்ன செய்யாட்டி என்ன எனக்கு என்ன வரப் ப்போகுது என்று நினைத்து கொண்டிருக்கு பொழுது .அவள் மீண்டும் அவரை பார்த்த பொழுது அவளது அந்த கண்கள் மூக்கு அதரம் மேலுடம்பு இடுப்பு கால்கள் எல்லாம் முதுமை தோற்றத்தில் இருந்து இளமையாகி கொண்டிருந்தது ..இது என்ன சமிபாட்டு கோளாறா இப்படி தெரிவதுக்கு காரணம் அந்த கோப்பிக்கடை பலகாரமா ஒரு கணம் நினைக்கும் பொழுது ..அவள் இளமை த்தும்பிய சிரிப்புடன் அணுகி கொண்டிருந்தாள் .இவ்வளவு நேரமும் விளையாடிய நாய் ஒரு ஈனக்குரலில் குரைத்து கொண்டிருந்தது..தூரத்தில் தள்ளுவண்டிலில் சென்று கொண்டிருந்த குழந்தை இனம் புரியாத மழலை குரலில் வீறுட்டு சத்தம் போட்டு கொண்டிருந்தது ..அந்த கறுவல் இப்படி இதே மாதிரியான சம்பவம் நடந்ததை சொல்லத் தானே கேலியும் கிண்டலுமாக கதைத்தோமே என அந்த சந்தர்ப்பத்திலும் கூட நினைக்க தவறவில்லை ,,,அவள் அவரை இன்னும் கிட்ட நெருங்கி கொண்டிருந்தாள் .

 

 


.மூச்சு முட்டுவது மாதிரி இருந்தது மேல் தோள்ப்பட்டை வலிப்பது மாதிரி இருந்தது ..இதுவெல்லாம் அவளை பார்த்து பயந்து அவருக்கு ஏற் படவில்லை என இன்னும் நம்பினார் ..ஏனெனில் அவளை மாதிரியே அவரும் இளமையாக தோலும் உடம்பு மாறி கொண்டிருப்பது தென்பட்டது .அது உண்மை தானாக நிச்சயப்படுத்துவதற்க்காக தன்னையும் அவளையும் மாறி மாறி விரைவாக பார்த்து கொண்டிருந்தார் தவிப்புடன் பார்க்க பார்க்க..பார்வை மங்கி கொண்டு சென்றது...ஒன்றுமே அவருக்கு இப்ப தெரியவில்லை வெளிப்புற சத்தங்கள் குறைந்து கொண்டு போய் கொண்டிருந்தது..

 

 


இபுபொழுது வெளிப்புற சத்தங்கள் மெல்லமாக கேட்டு கொஞ்சம் கூடி கேட்டு ஒரு இரைச்சலாக கேட்டு கொண்டிருந்தது..மெல்ல கஸ்டப்பட்டு கண்ணை திறக்க முற்பட்டார் முழுமையாக திறக்க முடியவில்லையானாலும்.சுற்றுவர ஆம்பிலன்ஸ் உதவியாளர்கள் நிற்பதை கண்டார் ....அந்த கிழவி தான் தொலை பேசி செய்து ..உதவியதாக உதவியாளர்கள் கூற அவளுக்கு ஒரு நன்றி சொல்லுவோமோ என நினைத்து பார்க்கு பொழுது

 

 


அவள் இன்னும் கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருக்க கண்ட அவர் ..நடந்த சம்பவம் உண்மையா பொய்யா என இன்னும் தெளிவில்லாமால் தவித்தார்