Pages

வாசகர் வட்டம்

Thursday, November 24, 2011

மிதுவின் கார்த்திகை மாத(2011) சிறுகதைகள்

வாடகைக் காதலி(சிறுகதை)





அவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வேண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழித்ததில் நிஜ கால அளவை கடந்த ஞானி போல் இருந்தான்.இப்ப கொஞ்ச முன்பு தான் தனது பாசத்துக்கு நேசத்துக்கும் நட்புக்குமுரிய அந்த கிழவனிடம் அந்த செய்தியை சொல்லி அதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றல்லாம் விவாதித்து ஏதோ முடிவை பெற்று கொண்டது போல் இருந்த இந்த மனம்.அதற்க்குள் அந்த ஒரே விசயத்தையே திரும்ப திரும்ப அரைத்து உள்ளத்தை குமுற வைத்து வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்க்க தன்னிலையே வெறுப்பு கொண்டான் .இது என்ன வாழ்க்கையடா ..சொந்த பிறந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை பற்றி ஏன் இவ்வளவு கவலை படுவான் என்று அலுத்து கொண்டான்,

 வந்த ஆத்திரம் கோபத்தில் விரக்தியில் வாசித்தததும் வாசிக்காததுமாய் இருந்த எறியப்பட்ட கடிதம் மேசையின் மூலையில் நிலத்தில் இதோ விழப்போறன் என்ற மாதிரி ஒழங்கற்ற மாதிரி மேசையில் தொங்கி கொண்டிருந்தது,திரும்ப எடுத்து வாசித்து பார்க்க மனமின்றி இருந்தவன், அப்படி இருந்த நிலையை மாற்றி அந்த கடித்ததில் கறுத்த தடித்த எழுத்துகளில் கோடிட்ட வாசகங்களை திரும்ப திரும்ப படித்தான். இலங்கை இந்திய சமாதன ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு அமைதி திரும்பி விட்டது, இன்னும் இரு வாரங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிடின் வெளியேற்ற படுவீர் ,,

,வாசித்தவன் தொடர்ந்து வாசிக்காமால் நிறுத்தி விட்டு இவங்கள் பிரச்சனை முடிந்து சமாதனம் வந்து விட்டது என்று சொல்லுறாங்கள் ,சனம் இனிமேல் தான் பிரச்சனை அடிபாடு தொடங்க போகுது என்று பரவலாக கதைக்குது .,இப்படி கடிதம் கிடைத்தவன்கள் எல்லாம் அவனவன் எங்கையல்லாம் ஓடி தப்ப என்று யோசித்து கொண்டிருக்கிறான்கள் ,எங்கை ஓடி தப்பிறது.. ..இவன்கள் எடுத்த முடிவைப் போல தான் மற்ற ஜரோப்பா நாடுகள் முழுவதும் எடுக்கும் ,,ஓடுறது என்றால் எங்கை ஓடுறது ...கனடாக்காரனும் உவன் ஸ்கன்டிநேவியன் நாட்டு காரன்களும் உள்ளுக்கு விட்ட அகதிகளை ஒரு போதும் திருப்பி அனுப்பினதாய் சரித்திரம் இல்லையாம் என்று சொல்லுகினம்.....யார் கண்டாங்கள் எல்லாம் உதை... ஒரு காலத்திலை சரித்திரம் திரும்பிச்சுது என்றால்.

 அந்த டச்சு கிழவன் ,,கிழவன் என்று தான் அவனை அன்போடு கூப்பிடுவான் .கிழவன் என்று சொல்லுமளவுக்கு அவனுக்கு அவ்வளவு வயதில்லை சரியாக,வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கும் வயதான நாற்பது அப்படித்தான் இருக்கும் ,,உண்மையாய் வாழ்க்கையை ரசித்து கொண்டாடி குதூகலித்து இந்த வயதிலும் இருக்கும் அவனைப் பார்க்க ..ஒரு வித பொறாமை கலந்த ஆச்சரியம் தான் ,,அவன் அனார்கிசிஸ்டாம் என்று முதல் சொல்லும் பொழுது அது என்ன என்று புரியவில்லை ,...எப்படி முதலில் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது என்று சுவையான சம்பவம் .அதிலும் பார்க்க சுவையான விடயம் வாரக் கடைசியில் ஒரு காதலியை சந்திக்கும் ஏக்கத்துடன் இருப்பது மாதிரி இருந்து சந்தித்து மது அருந்தி விவாதித்து அவர்கள் தங்களுக்குள் கொண்டாடுவது. .ஒரு பெட்டை பிடியன் ,வரண்டு பாலைவனமாக இருக்கும் உன் மனதை குளிர்மையாக்கி பசும் சோலை மாதிரி வைத்திருக்கும் உன் உடலுக்கும் நல்லது என்று அடிக்கடி அந்த கிழவன் அவனுக்கு ஆலோசனை சொல்லுவான்.அது மட்டுமன்றி அப்படியான சூழ்நிலைகளை உருவாக்குவதற்க்காக தனது தெரிந்த வளங்கள் வழிமுறைகள் அனைத்தையும் அவனுக்காக பயன் படுத்தினான் ,அவனது முயற்சி ஒரு பொம்மைக்கு உயிர் வர வைக்கும் முயற்சியாகத்தான் இருந்தது .கிழவன் இவனை ஒரு சங்கோஜ பிரஜையோ ,,என்று நினைத்தாலும் ,அது உண்மை இல்லை ..ஏதோ படி தாண்டா பதிரனாக சின்ன வயதிலிருந்து பழக்க படுத்திய காரணமோ அல்லது பவுத்திரமாக தமிழில் செய்த பெட்டையை பெற்றோர் ..மூலம் இறக்குமதி செய்யும் நோக்கத்தில் இருப்பது தான் காரணமோ தெரியாது.

ச்சாய்... கிழவன் சொன்னமாதிரி ஒரு டச்சு பெட்டையை பிடித்து இருந்தால் .இந்த சமயத்தில் மற்றவன்கள் செய்யிற மாதிரி கலியாணம் செய்ய போறன் என்று காட்டி விசா எடுத்திருக்கலாம் ,,என்ன உவகளோடை தொடர்ந்து வாழப்போறமே அல்லது அவகள் தான் எங்களோடை வாழுவுகளோ,,ஒரு கொஞ்ச வருசத்துக்கு பிறகு ,ஒன்று நாங்கள் துரத்துவம் அல்லது அவகள் விட்டு போவாகள் ,நிச்சயமாக தொடர்ந்து இருக்கும் திருமணம் இல்லாவிட்டாலும் ,ஆனால் விசா மட்டும் நிச்சயமெல்லோ ,,,என்று நினைத்து சந்தர்ப்பங்களை தொலைத்ததை தேடி கொண்டிருந்தான்.

டெலிபோன் மணி அடித்தது,,மீண்டும் அவன் மைத்துனர் தான் சொர்க்கத்துக்கு போகும் பாதையும் வழிமுறைகளும் ஆலோசனை சொல்லி கொண்டிருக்கிறார் ,,அதை விட சொர்க்கத்தில் இருந்து இன்றைக்கு மட்டும் நாலு தரம் அடித்து போட்டார் ,மைத்துனருக்கும் தான் இருக்கும் நாடு அப்படி என்ற நினைப்பு வேற,அவனை பொறுத்தவரையில் அவன் இருக்கும் நிலமையில் இந்த நாட்டை விட்டு ஏதாவது நாடு ஒன்று ஏற்கும் என்றால் அது சொர்க்கமே

.சனம் சொர்க்கத்தின் நுழைவாயிலை அடைந்து விட்டால் காணும் என்ற நிலையில் தங்களுக்கு தெரிந்த சகல வழிமுறைகளை யாவற்றையும் பயன் படுத்தி கொண்டு முயற்சி செய்யுதுகள் சிலதுகளுக்கு வெற்றி சிலதுகளுக்கு தோல்வி உந்த அம்ஸ்ரடாமாலை வாறதை விடு ...எல்லாம் ஏயாப்போட்டும் எங்கட கள்ள முறையளும் அடிப்பட்டு போச்சாம் ,,உங்கட பிறவுண் தோலை கண்டால் காணுமாம் உதுக்காலை விடுறான்கள் இல்லையாம் ,,,மைத்துனர் மட்டும் கனடா போனாப்போலை வெள்ளையாய் போனார் என்று நினைத்தாரோ தெரியாது ,,ஏதோ புது டெக்னீக்களை பார்த்து செய்து இங்காலே கெதியாய் வரப்பார் என்று சொல்லி டெலிபோனை வைத்துப்போட்டார் ,

 சூர்னாம்காரின் டச்சு பாஸ்போட்டிலை தன்ரை தலையை மாத்தி எல்லாம் றெடியாக்கி வைச்சு இருக்கக்கை இந்த ஆள் இப்படி பயப்படுத்துது...என்று நினைத்தவன் ,,ராஜன் தான் தனக்கு ஒன்று ஒழுங்கு படுத்தக்கை அவனுக்கு ஒன்று ஒழுங்கு படுத்தனவன் .அதோடை ராஜனின் மாத்தின பாஸ்போர்ட்டை பார்க்க்ககை கீளீனா மாத்தின மாதிரி இருக்கு ,,தனக்கு மாத்தின பாஸ்போர்ட் கொஞ்சம் கீளினாக மாத்தவில்லை என்று அவனுக்கே பட இப்பவே ஏர்போர்ட்டில் பிடிபட்டமாதிரியான உணர்வு மேலோங்கியது

 அவனிலும் விட கிழவன் தான் என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி பிழிந்து எதாவாது வருகுதா என்று அசையாமால் \யோசித்து கொண்டிருந்தான் ,தீடிரென்று புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்தவன் போல் துள்ளி குதித்தான் ..மகிழ்ந்தான் ,,என்றாலும் இது நடைமுறைக்கு சாத்தியமா ,அவன் சம்மதிப்பானா என்ற அச்சம் புருவத்தில் ஓடி மறைந்தது.

 இது தான் திட்டம் ,,,டச்சு பெட்டையோடை ஜோடியாக போறது,,,,என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சொன்னான், எனக்கு தெரிந்த பெட்டை இருக்கிறாள் அவள் உந்த நாடுகளுக்கு எல்லாம் போறவள் ,,வாறவள்..என்ன அவளுக்கு கனடா போறதுக்கு நீ டிக்கட் போட்டியெண்டால் ,,அவள் உனக்கு ஜோடியாக நடிக்க தயாராவாள் திட்டம் வரைந்து பேசி கொண்டிருந்தவனை இடைமறித்த அவன் ,,விளையாடுறீயா ,,எனக்கே டிக்கட் போடுறதுக்கு எங்கெல்லாம் தெண்டி அல்லாடுகிறேன் ,,,,அவளுக்கும் டிக்கட் என்றால் ....நான் எங்கு போறது,,,என்று சொல்லும் பொழுது குரலில் ஒரு பரிதாபமும் கையறந்த நிலையும் கலந்திருந்தது

 கிழவனின் சேமிப்பு அவளின் டிக்கட்டாக மாறியது

 என்னதான் திட்டத்தை வரைந்தாலும் சிறிலங்காகாரன் சூர்னாம் நாட்டுக்காரன் மாதிரி இருந்தாலும் ,,,எங்கேயோ இவர்களிடம் இருக்கும் அப்பாவித்தனமான தோற்றமோ வெகுளித்தனமோ அவன்களிடமிருந்து வித்தியாச படுத்தி காட்டுகிறது ..அதனால் ,,அதுவும் இவனை பார்த்தாலே தெரிகிறது .என்ன செய்யலாம் என்று கிழவன் மேலும் யோசித்தான்

 நாலு ஜந்து மணித்தியாலங்களில் பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பயணம் அம்ஸ்டாமிலிருந்து பெல்ஜியத்துக்கூடாக பாரிஸ் செல்லும் பஸ் இல் இந்த ஜோடிகள் .

..அவள் அவனது கை குலுக்கும் பொழுது உள்ளங்கையை சுரண்டிய பொழுதே அவள் இந்த ஜோடி நடிப்புக்கு தயராகி விட்டாள்,,இவன் பதட்டபட்டது தயாரகவில்லை என்றதையும் காட்டியது

 போரில் இந்த அஸ்திரத்தை ஒரு முறை தான் பாவிக்கலாம் அதற்கு மேல் பாவிக்க கூடாது என்று குந்திதேவி சத்தியம் வாங்கியது போல் ,,,கிழவனும் இவனிடம் சத்தியம் வாங்கி கொடுத்திருந்தான்.ஒரு முறை தான் பாவிக்கவேணும் .என்று..மூன்று மாத்திரைகள் , அந்த நேரத்தில் பதட்ட படாமால் இருக்க வேணும் என்பதற்க்காக,,,

அது ஹாலந்தை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட சிறிது போதை வஸ்து கலந்த மாத்திரை மருத்துவ தேவைகளுக்காக பாவிப்பக்கபடுவது

 பஸ் மெல்லிய ஒளியில் தூங்கி வழியும் பிரியாணிகளுடன் பெல்ஜியத்தினூடாக ஓடிக் கொண்டிருந்தது ,அவனும் அவளும் பக்கத்தில் இருந்தாலும் ஜோடியாக தெரிய மறுத்தது ..கிழவன் கொடுத்த மாத்திரை அவனுள் சென்றது ,,அவனுக்கு அவளின் மனது நெருங்கி வருவது போல் இருந்தது அவன் பேசினான் அவளும் பேசினாள்

 ...அவள் தனது காதலன் கனடாவில் படிக்கிறான் என்றாள் ,,,
அவனுக்கு இப்பொழுது மிதப்பது போன்ற மனத்தடை எதுவும் இல்லாத உணர்வு ...எனது காதலி நீ தான் இப்ப என்றான் .
.
ஏதோ நகைச்சுவையை கேட்ட மாதிரி சிரித்தாள்.

அவன் தூங்க இடமும் தலையணையும் தேடினான்
.
அவள் அவளது தோள்பட்டையை காட்டினாள் .
அவனோ அவளினுள் துவண்டான் ..அவளும் நெளிந்தாள்...ஏனோ அவளும் அதை அனுமதித்தது மாதிரி இருந்தது ,,அவன் அவளின் அதரத்தை மலர வைக்கும் முயற்சில் முயன்றான் அவளோ நாகரிகமாக தடுத்து கூறினாள்

...எனது காதலனை தவிர உதட்டில் முத்தம் கொடுப்பதில்லை என

 அவன் என்ன கணக்கு இது என்று சிரித்தான் ,,,அவளும் சிரித்தாள் அது என்ன கணக்கு என்று விளங்கவில்லை
 ஜோடியாக அழகாக நடித்து அந்த விமான நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் செக் பண்ணும் இடத்தை கடந்து விட்டார்கள்..
.இருவரும் அங்குள்ள கோப்பி கடை ஒன்றில் ,,,ஒலிபரப்பு அலறுகிறது,
,,இவனது சூர்னாம் பாஸ்போர்ட்டு பெயரை சொல்லி வரும்படி ,,இவனுக்கு அவனின் பெயர் தானே ஞாபகத்தில் இருக்கும் ..

.அவர்கள் நேரடியாகவே வந்து விட்டார்கள் ..விசாரணை தொடங்கியது ..டச்சு எழுத வைத்து பார்த்தார்கள் கதைக்க வைத்து பார்த்தார்கள் .

 ..அத் தருணத்தில் அவர்களை நம்ப வைக்கும் நோக்கில் அவள் அவனை அடிக்கடி இறுக்க கட்டி அணைப்பதுமாயும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவதுமாயும் இருந்தாள் ..
 விமானம் புறப்படும் நேரம் கடந்து விட்டது ..விமான பணிப்பெண்கள் காத்திருந்தார்கள் இவர்களை கூட்டி செல்ல
,,சந்தேகம் தீர்ந்து அதிகாரிகள் அவனை அனுமதித்து வெளிக்கிடும் பொழுது ,,

 ,அதே நேரம் அங்கு,உள்ளுக்கு பிடிப்பட்டிருந்த ராஜன் சத்தம் போட்டான்

,,,,உவனும் சிறிலங்காகாரன் என

 அவள் கனடா சென்றாள்

 அவனும் ராஜனும் ..

......
 (யாவும் கற்பனை) 


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




கள்ள வேலை ( சிறுகதை)


கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான், ,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொன்டாலே பெருக்கி பாத்தால்...வயித்த பத்தி எரியுது ..அவனும் தன்ரை வயிறும் மனம் எரிந்து கொண்டு தான் சம்பளம் தாறன் என்று சொல்லுறான்..அவனோ வடக்கு ஹாலந்து தேசத்தின் சிறு தோட்ட முதலாளி .நாங்களோ அண்மையில் அந்த நாட்டுக்கு வந்த அகதி மக்கள்.அவன் தனது வரி ஏய்புக்காக வேலை செய்ய அனுமதி இல்லாத எங்களை பயன் படுத்துகிறான் .நாங்கள் அவனை பயன் படுத்துகிறோம்.இதிலை டயலாக் வேறை என அலுத்து கொள்ள எங்களை தாண்டி ஒரு பச்சை கார் ஒன்று சென்றது ,

 ராஜன் தான் ...அது.. அவனும் எங்களை போலத்தான் ஆனால் வந்து குறுகிய காலத்தில் இப்படி வசதியாக, பத்து நிமிசத்திலை. நாங்களோ ஜந்து மைல் தூரத்தை இந்த எதிர் காற்றையும் சேர்த்து கடக்க ஒன்றே கால் மணித்தியாலம் பிடிக்குது.எப்படி சம்பாதித்தான் என்ற வினாவுக்கு தங்களின் பொறாமையின் பூச்சுகளுடன் வர்ணம் தீட்டி தங்களின் நினைப்புக்கு ஏற்றவாறு ஆக்கள் ஒவ்வொரு கதை கூறுவினம்...எதை நம்புறது எதை நம்பாமால் விடுறது என்று தெரியலை சில வேளை,.ஒரு நாளைக்கு மூன்று தரம் நூறுமைல் தூரமுள்ள அம்ஸ்ரடாமுக்கு காரில் போட்டு திரும்புறான் ,அப்பிடி என்ன அவசியமோ தெரியலை ,எனக்கு அது பெரிய ஆச்சரியமில்லை ,,அந்த டச்சு தோட்டக்காரனுக்கோ அது பெரிய ஒருஆச்சரியம் ,,,தானே ஒருதரமோ இருதரமோ தான் வாழ்நாளில் போயிருக்கிறன் அதோடை அங்கு போகவணுமெண்டும் தேவை இருக்கவில்லை என்கிறான்.

,,எங்கள் இரண்டு பேரையும் உவன் கேட்டவன் ஒருக்கா காட்டில் இருந்து வந்திருக்கிறம் என்ற நினைப்பில் உங்கட ஊரிலை முந்தி பந்து கண்டிருக்கிறீயளோ சைக்கிள் கண்டிருக்கிறீயளோ என்று,,,,, இப்ப இவருக்கு இவங்கள் எல்லாம் வீரன் சூரன்களா விபரம் தெரிந்தாக்களாக இருக்கிறான்கள் என்று அறிந்தா பிறகு ஒரே கொன்பியூஸ் ,, அதன் பின் டச்சுக்காரனுக்கு ராஜனுக்குமிடையில் அந்நியோன்யம் வளர்ந்தது .மாதிரி இருந்தது..அது எவ்வளவுத்துக்கு என்று எங்களால் உணர முடியவில்லை .எங்களால் என்பது என்னையும் என்னை சைக்கிளில் வைத்து தள்ளும் நண்பனையும் மட்டும் தான் சொல்லுறன். ஏனென்றால் ,மற்றவர்கள் எல்லாம் ராஜனால் அங்கு வேலைக்குச் சேர்க்கப் பட்டவர்கள் என்று கால போக்கில் தான் அறிந்து கொண்டோம்.

சைக்கிளில் என்னை வைத்து உதைக்கும் தோழர் இருக்கிறாரே .. அவர் ஊரிலை போராட்டத்துக்கு தலைமை சக்தியாக அவர்கள் தான் இருக்க வேணுமென்ற கொள்கையோடு அந்த காலம் பாட்டாளி வர்க்கத்தை தேடி மலையகம் சென்ற ஆக்களில் ஒருவராம் .அவர் நல்ல அன்பான நட்புத்துவத்துக்குரிய ஆள் என்றாலும் எதுக்கு எடுத்தாலும் காரண காரியங்களை சொல்லி ஒரே தொண தொண. அதனால் எனக்கு சிலவேளை எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமன்றி பிரச்சனைகளையும் விலைக்கு வாங்க வைத்து விடுவார்.எப்பவும் அநியாயத்துக்கும் அடக்குமுறைக்கும் குரல் கொடுக்கிறதை நீ தப்பாய் புரிந்து கொண்டு விட்டாய் என்று கூறுவார் ... இந்த போர்குணத்தை இலகுவில் மாற்ற இயலாமால் கிடக்கு என்பார். எனக்கு என்றால் சிலவேளை இவற்றை கதையை கேட்க சிரிப்பு சிரிப்பாய் வரும்

,,,நித்திரையிலை கூட வாய் விட்டு சிரித்து இருக்கிறன் .அண்ணை என்று முதல் கூறி இப்ப வாடா போடா என்று பழக்கப்பட்டா பிறகும் கூட கனதரம் சொல்லி இருக்கிறன் .நாட்டில் இருந்து எப்ப பிளைட் ஏறினமோ உந்த உளவராங்களை எல்லாம் எங்கையாலும் கட்டி கடலிலை போட்டுட்டு வந்த இடத்திலை நாலு காசு சம்பாதிக்க பார்க்க வேணும் என்று .அவரை மாத்த வெளிக்கிட அவர் என்னை மாத்த பார்த்தார் அதுக்கு நான் விடவில்லை .அண்ணை உங்களுக்கேற்ற ஆக்களை தேடி உப்படியாய் இருந்தால் .அப்படியான ஆட்கள் கிடைக்கும் வரை காத்திருந்தால் தட்டி போடும் அப்படி .யாரும் வந்தாலும் அவையளும் மண்டை தட்டின ஆட்களாதான் இருப்பினம் என்று.அப்படி இப்படிசொல்லி ஒரு மாதிரி ஆளை மறுத்தான் கொடுத்து மாத்தி தான் இந்த தோட்டத்திலை பூ பிடுங்கிற வேலைக்கு கூட்டியண்டு போறன்

..நாங்களாய் உப்பிடி அங்கினை வேலை தேடி கேட்டதிலை கிடைச்சிட்டு நாலு கில்டன் என்றான் .அதுக்கென்ன என்று நாங்கள் போய்க்கொண்டிருக்கிறம் .அதுக்கும் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கு இந்த ஆள்,,போன இடத்தில் ஏடா கூடாம நடந்திடும் பயம் ..பயந்த மாதிரியே...

அழகாய் வளர்ந்து இருக்கின்ற அந்த பூவை எல்லாம் பிடுங்கி எறிய ஒரு மாதிரி இருந்தது எனக்கு முதலில்.பிடிங்கிய பூ எல்லாம் கசங்கி வாய்க்கலுக்கு பரிதாபமாக கிடக்க .இது என்ன பைத்தியகாரத்தனம் என்று தோன்றியது,,,ஏன் இப்படி செய்கிறான்கள் என்று விளங்கவில்லை..என்னுடைய தோழர் இருக்கிறாரே அவர் எதையும் பக்கெண்டு பிடிச்சுடுவர் .இந்த பூவை தக்க தருணத்தில் பிடிங்கினால் அடி வேர் கிழங்கு நல்லாய் வரும் அவங்களுக்கு கிழங்குதான் முக்கியம் பூ அல்ல என்று சொல்லிப்போட்டு அது போல என்று தொடங்குவார் .நான் அந்தரப்பட்டு அவற்றை புராணத்துக்கு பிறேக் போட்டு விடுவன்.அன்றைக்கு உந்த ஆள் என்னத்தை சொல்ல......

....இடுப்பு நாரி குனிந்த படி இந்த தொங்கலில் இருந்த அந்த தொங்கல் வரையும் பிடிங்கி போட்ட படி நிமிராமால் போகணும் ...கொஞ்சம் நிமிர்ந்தாலும் அங்காலை வேலை செய்து கொண்டிருக்கிற தோட்டக்கார முதலாளி கோய் என்று கூக்குரிலிட்டு எச்சரிக்கை செய்து குனிய செய்வான். இடுப்பல்லாம் வலிக்கும் முதுகெல்லாம் உழையும் இடையில் விட்டுட்டு ஓடிடுவமா என்று தோன்றும் ..நாலு கில்டன் நமஹா என்று தோஸ்திரம் சொல்லி விட்டு தொடர்ந்து வேலை செய்வம் .

 டே ,,,போய் வேலை செய்யடா ..எல்லாரும் தான் கஸ்டப்படுறம் உரத்த குரலில் தமிழில் கேட்டது வேலை கஸ்டத்தில் வேலை செய்ய முடியாமல் தன்னிச்சையாக வெளியேற முடிந்த அந்த ஆட்களில் ஒருவனை விரட்டி கொண்டிருந்தான் ராஜன் ,அவன் தோட்டத்தில் இருந்து வெளியில் ஓடுவதும் ராஜன் உள் இழுத்துவதுமாக கொஞ்சம் நேரம் கடந்தது இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம் தோட்டக்காரன் நான் உட்பட வேடிக்கை பார்க்க முடியாதவர் தோழர் என்று சொல்லாமல் தெரிந்திருக்கும்

 வாதங்கள் முற்றின...ஒரே களேபரம் ... கொடுக்கும் நாலு கில்டனில் ஒரு கில்டன் ராஜனுக்கு என்ற கதை வெளியில் வந்தது ..அந்த ஒரு கில்டன் கொமிசன் தான் தோட்டக்காரனுக்கு இல்லாத அக்கறை ராஜனுக்கு இருக்கவேண்டி வந்தது என்று தெரிய வந்தது.

 அவன் செய்வதே பக்கா உடல் சுரண்டல் அதுக்குள்ளை நீ வேற என்று தோழர் கத்தினார்... செய்யிற கள்ள வேலை நீ என்ன கதைக்கிறாய் உனக்கும் மூன்று கில்டன் தான்

..என்னை மீறி ஒன்றும் நடக்காது என்று உறுமினான் ராஜன் ராஜனும் தோட்டக்காரனும் என்னவோ பேசினார்கள் தோட்டக்காரன் கூறினான் நாலு கில்டன் தருகிறேன் அதில் மாற்றமில்லை என்று சமாதனப் படுத்தினான் வேற ஒரு தோட்டத்தை காட்டினான் நாளை அங்கு வேலை என அது முடிய எல்லா காசும் சேர்த்து தாறன் என்று

 எப்படி வீச்சா டபிள் பெடல் போட்டாலும் மணிக்கூட்டை பார்த்த பொழுது நேரம் பிந்தி விட்டதாகவே தோன்றியது ... ஆனால் அந்த தோட்டத்தில் ஒரு தரும் பூ பிடுங்க வேலைக்கு என்று ஆட்களை காணவில்லை அந்த டச்சு காரணையும் காணவில்லை ராஜன் ஆட்களை காணவில்லை ராஜனும் டச்சுக்காரனும் சேர்ந்து எங்களது சம்பளத்திற்க்கும் வேலைக்கும் செய்த சதி...அப்பத் தான் விளங்கியது யாருக்கு முறையிடுறது ..செய்த வேலையோ அனுமதியற்ற வேலை

 திரும்பி வரும் வழியில் தென்னிந்திய திரை நடிகர்களின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது அந்த பூத்தோட்டங்களில் ஒன்றில் ஆடி பாடி கொண்டிருந்தனர்..அதையாவது பார்ப்பம் என்று சிறிது நேரம் நின்றால்

,,,பிரபல நடிகர் ஒருவர் வலிய வந்து கதைத்தார்...மகிழ்ந்தார் ...உலகத்தின் எந்த துருவ மூலைக்கு சென்றாலும் தமிழரை காணக் கிடைக்குது என்று...

 உதுக்கு எல்லாம் சந்தோசம் கொள்ளும் மனம் நிலையில் அப்போது இல்லை

 ...மூன்று கில்டனுக்கு என்றாலும் நான் வேலை செய்திருப்பன் .
..

ச்சேய் இது எல்லாம் இந்த தோழரால் வந்த வினை

 இப்ப எல்லாம் பிழைக்க தெரியாத ஆட்களைக் கண்டால் நாலு அடி தூரத்திலை போயிடறது

 இப்ப நான் அச்சா பிள்ளை

மிதுவின் கிறுக்கல்களை பார்க்க