Pages

வாசகர் வட்டம்

Thursday, June 27, 2013

எலக்கியமா ,,,மண்ணாங்கட்டியா.ஏதோ எழவோ..இணைய தெருவில் விற்குதடா.....

இப்ப நான் போடுற பதிவுகள் வீடியோக்கள் மாதிரி வெறும் தகவல் குப்பைகள் தான் அந்த காலமும் என்னிடம் இருந்தது.அதை வைத்துக்கொண்டு கூட்டி கழித்து பெருக்கி பிரித்து கதை விடுறதால் அதை கேட்க ஒரு சின்னக்கூட்டத்தை எப்பவும் வைத்திருப்பேன். அப்படி என்ன எழவு மகிழ்ச்சியோ விருப்பமோ தெரியாது அப்படி நடந்து கொண்டேன்.ஏனோ தெரியாது சிலரை பார்த்து கான மயிலாட கண்ட வான் கோழி போல கொஞ்ச சீரியஸ் என்று சொல்லப் படுகின்ற விசயங்களை கதைக்க தொடங்க என்னை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் என்ன இவன் தீடிரென்று ஒரு மாதிரி கதைக்கிறான் என்று நினைத்து கொண்டு காணாமால் போய் விட்டார்கள் .நாய்க்கு ஏன் போர் தேங்காய் என்று சொல்லுமாப் போல் அன்றிலிருந்து அந்த பக்கம் தலை வைத்து படுக்கிறதில்லை. அது எல்லாம் ஏதோ பெரிய விசயம் போல் இன்று வரை இருந்தது.

சிவாஜி எம்ஜி ஆர் போல ஏன் கமல் ரஜனி போல் இந்த எழுவு இலக்கியத்தில் சிலரால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிற இந்த இரண்டு பேர் .ஒருவர் என்ன்ன்டா சிரிக்கிறியா சிரிக்கிறயா என்று எழுதி கொண்டிருக்கிறார் .மற்றவர் என்னடால் வர்றியா வர்றியா என்று எழுதி கொண்டிருக்கிறார். இந்த இலக்கிய பிரம்மாக்களின் எழுத்துக்களை பார்த்தாப்பிறகு .என்னை போல அரைவேக்காட்டுக்கள் கூட எழுதலாம் என்று நினைக்க வைத்து விட்டது.வாயிலை வாறது எல்லா எழுதுறது என்றால் எனக்கும் அல்வா சாப்பிடற மாதிரி ..எழுதலாம் என்று யோசிக்கிறன் .ஆக்கள் வாசித்தால் என்ன வாசிக்காட்டால் என்ன

உந்த எழவு பிடித்த எலக்கிய பிரபலங்களின் சிரிக்கிறியா சிரிக்கிறியா என்ற லிங்கையும் வர்றீயா வர்றீயா என்ற லிங்கையும் பார்க்க விரும்பின் கீழே
http://www.jeyamohan.in/?p=324
http://charuonline.com/blog/?p=447