Pages

வாசகர் வட்டம்

Thursday, June 24, 2010

அவள் ஏன் சபதமிடவில்லை (சிறுகதை)


அவள் ஏன் சபதமிடவில்லை (சிறுகதை)



நேற்று கண்டது கனவு தான் இன்றும் காண்பதும் கனவோ என தன்னை நுள்ளி பார்த்து கொண்டாள் .வந்தவன் தேர்பாகன் என்பது தெரியும் ..தன்னை சபைக்கு அழைத்து வர சொன்னது என்று சொன்னது மட்டும் வாய் மொழியாக வந்து வெளியில் விழுந்தது ...

விழாதது,சொல்லாதது அவளை இழுத்து வர சொன்ன விசயம் அவனது முகத்தின் கடுமையில் தெரிந்தது.முகத்தை தொடர்ந்து கடுமையாக வைக்க முடியவில்லை வீமனின் தண்டாயுதம் அவனது எண்ணக் கோவையில் அங்கும் இங்கும் வலது இடதுமாக எம்பி குதித்து அவனை பயமுறுத்தி கொண்டிருந்தது. என்றாலும் தொடர்ந்து அவன் நச்சரிக்க இன்று எனக்கு அந்த நாட்கள் அதனால் சபைக்கு என்னால் வரமுடியாது என்று கூறு என்றாள் ..அப்படி சொன்னவள் அவள் பெயர் பாஞ்சாலி


அந்த ஐவரோடு அவர்கள் பின்னால் அந்த நாட்டுக்கு வந்தாள் .அவர்கள் ஜவருக்குமே இல்லகிழத்தி என்ற அந்தஸ்த்து,அவளுக்கு

பூரண கும்ப மரியாதை செய்து அது போல பல மரியாதைகள் செய்து இந்நாட்டு மக்கள் இங்கு நேற்று வரும் போது வரவேற்று மகிழ்ந்தது .அந்த ஜவருக்கும் ஒரு இன்ப மகிழ்வை கொடுத்திருக்கிலாம். ஆனால் அவளுக்கோ வேற மாதிரி இருந்தது.வேற எண்ணங்கள் அலை அலையாக வந்து அவை ஒன்றுடன் ஒன்றுடன் வந்து மோதி மனம் சாந்தி அடைய விடாமால் துரத்தியது ..காரண காரியமின்றி குழம்பி பின் ஏதோ காரணம் இருக்கவேண்டும் என
நினைத்து கொண்டே தன்னை அறியாமால் அந்த அறையில் ஒரு ஒழுங்கு முறையில்லாமால் தூங்கி விட்டாள்.

தூக்கத்திலை அவளது ஆழ் மனதை கலங்க வைக்கும் நிகழ்வாக அவளது மனத்திரையில் சலனப்படம் போன்று ஒரு கெட்ட கனவு ஓடிக்கொண்டிருந்தது.பலர் பெரியவர்கள் சான்றோர்கள் உறவினர்கள்
வீற்றிருக்கும் சபை மண்டபத்தில் அவன் துகிலுரிய கண்ணா கண்ணா என்று குழற அவளது சேலை முடிவின்றி வந்து கொண்டிருந்தது . தூக்க கலக்கத்தில் கனவோடு ஒன்றி கண்ணா கண்ணா என்று கூப்பிட்டது அவளது தூக்கத்தை குழப்பி நனவு நிலைக்கு திருப்பியது ...திரும்பியவள் தன்னை இழிநிலையில் தன்னை வைத்து பார்த்து வேதனை அடைந்தாள், .

அவளுடைய அவர்கள் என்று இந்த உலகம் சொல்லும் அந்த பஞ்ச பாண்டவர்களுடன் திரிந்து ஆலோசனை சொல்லும் மாயாஜாலம் செய்யும் இந்த கண்ணனை பார்க்கும் போதெல்லாம் ஒரு வெறுப்பு ஏனோ அவள் மனதில் வந்து போகும் ...அதை முகத்தில் காட்ட விடாமால் கடும் பிரயத்தனம் செய்து இவ்வளவு காலம் தவிர்த்து வந்தாள்.....அப்படி வெறுத்த கண்ணனை கனவில் கூட உதவிக்கு கூப்பிட்டிருக்க கூடாதே ..என்று நினைத்தவள்...அப்பிடி கூப்பிட்டதை நினைத்து தனது ஆழ்.மனதை ஒரு கணம் வெறுத்தாள்

அன்று ஒரு நாள் துரியோதன் தடக்கி விழுந்ததை பார்த்து அவள் நகைத்ததாக அவன் நினைத்தானோ தெரியாது .ஆனால் அவனை அவள் நகைக்கவில்லை என்பது அவனுக்கு தெரியாத விசயம் .அதற்க்கு மாறாக அவனது கம்பீரத்துக்கு முன்னால் இந்த தடங்கல் எம்மாத்திரம் என்றே நினைத்து சிரித்தாள் .இந்த நினைப்பு ஏன் எழ வேண்டும் என்ற கேள்வியை அவளே எழுப்பி அவளே விடையை தானே கூறி கொண்டாள் .. தனது புன் சிரிப்பை தவறாக அர்த்தப் படுத்தி தன்னை பழிவாங்குவதற்க்காத தான் தங்களை விருந்து என்ற பேரில் இப்ப இங்கு அழைத்திருப்பானோ என்று யோசித்தாள்...


ஊரும் உலகமும் துரியோதனை பல அடை மொழிகள் வைத்து அவனை கெட்டவனாக உருவக படுத்தினாலும் அவள் மனம் அதை நிராகரித்தே இருந்து வந்தது.தனது நாயகர்கள் அம்பு வில்லு தண்டாயுதம் போன்ற வெளி கவசங்களுடன் மற்றும் நற் குணங்கள் என்று சொல்ல படுகின்ற போலி கவசங்களை சுமந்திருந்தப்பதாக பட்டது ..அவர்களிலும் பார்க்க பொய்யான போலி வேசம் இல்லாத தனக்கு பட்டதை எதுவோ அதில் உறுதியாக இருந்த அவனுடய நேர்மை பண்பு அவளுக்கு பிடித்திருந்தது.

..தனது கணவர்களை விட வேறு ஒருவனை சிறந்தவனாக பண்பாளானாக நினைக்கலாமோ அவளுக்கு ஊட்டி வைக்க பட்ட பண்பாட்டு குணாம்சம் ஒரு கணம் யோசிக்க வைத்தது. மறுகணம் தன்னை சுதாகரித்து கொண்டு தனக்கே கூறி கொண்டு சிரித்து தன்னுள் நகைத்து கொண்டாள் ,,...ஒரே நேரத்தில் தனது ஓரே மனதை அந்த ஜவர்க்கும் ஒரே நேரத்தில் பங்கிடவேண்டும் என நினைக்கும் இந்த பண்பாட்டு குணாம்சத்தில் பார்க்க தனது நினைப்பு எவ்வளவோ மேல் என கூறி கொண்டாள் .

சகுனியின் மீசை தானே எழும்பி சிலிர்த்து நின்று அவனது வெற்றி களிப்பை பறை சாற்றுவதோடு முகத்தில் ஒரு தேஜஸை கொடுத்தது..சூதாட கேட்ட போது பல தர்மங்கள் கூறி மறுத்த தருமன் இப்பொழுது தன்னிடம் நாடு இழந்து ,வீடு இழந்து ,செல்வம் இழந்து தன் தம்பிகளோடு தலை தொங்கி போட்டு நிற்பதை பார்க்க அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது

. சபையில் தோன்றிய நிசப்தம் அடுத்த கணம் என்ன நிகழுமோ என்ற அச்சத்தை உருவாக்கி கொண்டிருந்தது ...அப்போது துரியோதனன் தேர் பாகனை பார்த்து போட்ட சத்தம் அங்கு இருந்தவர்களுக்கெல்லாம் மேலும் அச்சத்தை ஊட்டியது


இந்த பேடிப்பயல் இதோ கதாயதித்ததை சும்மா மேலேயும் கீழேயும் போட்டுக்கொண்டு நிற்கின்ற இந்த வீமனுக்கு பயந்து அழைத்து வர தெம்பில்லா நிற்கிறான் ....தம்பி துச்சாதனா அவளை இழுத்து வா என்று கூக்குரல் இட்டான் ..அது அந்த சபை கட்டிடத்தில் மோதி இரண்டு மடங்கா வீச்சு கொண்டு பயங்கரமாக எதிரொலித்தது.


கூக்குரலின் பின்னால் துச்சாதனன் பாஞ்சாலியை அழைக்க அந்தப்புரம் சென்று விட்டான்.

துரியோதனனின் உள் மனதோ அவனிடம் அடுக்கு அடுக்காக் கேள்விகளை கேட்க தொடங்கி கொண்டிருந்தது

உண்மையில் இந்த பேடி பாண்டவர்கள் செய்த முட்டாள்தனத்துக்காக அவளை இந்த சபையில் அவமானப்படுத்த போகிறாயா?

இந்த முட்டாள் பிற்போக்கு வாதிகள் தங்கள் பாணியில் தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி வகுத்து கொண்ட நல்லது ,கெட்டது,தர்மம்,அதர்மம்
என்ற பிரிப்புக்களை பறைசாற்ற இவர்கள் வகுத்த வேலை த்திட்டதுக்கு பலியாக போகிறாயோ?

இவர்கள் தங்களின் ஒரு நேர வேலைத்திட்டத்துடன் தங்களுக்கு சாதகமான ஒரு குருசேத்திரத்தை உருவாக்க காத்திருக்கிறார்கள் என்றதை நீ உணரவில்லையா?

இப்படி உள் மனம் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்க அதற்க்கு விடை கொடுக்க இப்ப அவசியமில்லை ..அந்த அந்த கணம் முடிவு செய்யும் என்று சமாதன பட்டு கொண்டான்


கூந்தலை கடிவாளம் போல கையில் வைத்து அவளை இழுத்து வந்தான் துச்சாதனன் சபையினுள் ..அவளும் அவனது இழுவைக்கு ஏற்ற மாதிரி ஈடு கொடுத்த இழுபட்டு வந்து கொண்டிருந்தாள். சான்றோர் பெரியோர்கள் பலர் அங்கு வீற்றிருக்க கூட யாரும் தட்டி கேக்க திராணியற்று இருந்தனர் .

அவள் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவாள் என எதிர்பார்க்க எதிர்ப்பாப்புக்கு எதிர்மாறாக மெளனமாக அங்கு கூனி குறுகி இருக்கும் பாண்டவர்களே உற்று நோக்கி கொண்டிருந்தாள்.

மெளனத்தை கலைத்து தருமனை பார்த்து கேட்டாள்

என்னை உணர்வுள்ள பெண் என்று இல்லாமால் உனது சொத்தாக பாவித்து என்னை சூதில் ஆடினாய் சரி ..சூதாட்டத்தில் உன்னை இழந்த பின் என்னை எப்படி வைத்து சூது ஆடுவாய் நீ என்று கேட்டாள்...என்றும் இல்லாதவாறு அவள் ஒருமையின் பேசியதை கேட்டு திகைத்து நின்றனர் அந்த ஜவர்கள்

துரியோதன்ன் மீண்டும் கர்சித்தான் ....துச்சாதனா ..அவளை வழ வழ என்று என்ன பேச விட்டு கொண்டிருக்கிறாய் ...

.அவளுடைய சேலையை அவிழ் நிர்வாணப்படுத்து பின் எனது தொடையில் கொணர்ந்து இருத்து என்றான்


அவிழ்க்க நெருங்கி வந்த துச்சாதனை பார்த்து

..அதுக்கு அவசியமில்லைடா அவன் தம்பியே ...நானே என்னை நிர்வாணபத்தி கொள்கிறேன் என்று கூறியபடி தனது உடைகளை தளர்த்தி எறிந்தாள் ....


இதை எதிர்பார்க்காத சபை திகைத்து நின்றது .

இதை விட இவள் கண்ணா என்று அபயக்குரல் இடுவாள் .

தான் தனது மாயா ஜால கண் கட்டு வித்தை யினால் அவளது சேலையை அவிழ விடாமால் மட்டுமின்றி முடிவில்லா சேலையை அந்த சபையில் பரப்பி காட்டலாம் என்று காத்திருந்த கண்ணன். நிகழ்ச்சி நிரல் மாறு படுவதை கண்டு திகைத்தான்.

நகுலனும் சகாதேவனும் தங்கள் சோதிட கணக்கும் பிழைத்தது என்று திகைத்து நட்சத்திரங்களின் வரிசையை மீண்டு கணக்கிட தொடங்கினர்.

பாஞ்சாலி ..

அரைநிர்வாண கோலத்திடன் நின்று கொண்டே முழங்கினாள் ....இவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தங்களின் நலனுக்காக யுத்தத்தை உருவாக்குவார்கள் பல ஆயிரக்கணக்கான மக்களை பலி கொள்ளுவார்கள் ..பின் இவர்களே ஒரு தீர்வை கொடுப்பார்கள் இப்படி தர்மம் வெல்லும் அதர்ம்ம் வெல்லும் என்று கொண்டு....


அதானால் நான் சபதம் இட மாட்டேன் ... ஏன் கெளரவர்களில் மூத்தவனே ஏன் கஸ்டப்படுகிறாய் ..

இந்த தொடை நடுங்கிகளுக்கு மனைவி வாழுவதை விட நானே தொடையில் வந்து அமர்கிறேனே .இதன் மூலம் நானும் நீயும்சேர்ந்து இவர்களின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவோமே என்றாள்

இதை சற்றும் எதிர்பார்க்காத துரியோதன்ன் சற்று சற்று திகைத்து பின் நோக்கி சென்றான்

பாஞ்சாலியின் இந்நடவடிக்கையை பார்த்து பூமி அதிர்ந்த மாதிரி உணர்வை சபையின் சான்றோர் உணரந்தனர்

மற்ற எல்லோரது காட்சி மன படிமங்கள் எல்லாம் ஆழிபேரலையில் அடிப்பட்ட பிணம் போல உணர்ச்சியற்று மிதந்தது

உண்மையில் பூமி அதிர்ச்சியும் வரவில்லை ஆழி பேரலையும் வரவில்லை

வரலாற்று தவறுகளை திருத்தியபடி அங்கு அவனும் அவளும் ஒரு யதார்த்ததில் இருந்து கொண்டிருந்தனர்



இக் கதை மிதுவின் கிறுக்கல்கள் வலைபதிவுக்காக எழுதப்பட்டது

Wednesday, May 26, 2010

முதல் பரிசு பெற்ற -எழுத்தாளர் ரஞ்சகுமார்


இலங்கையின் முன்னனி எழுத்தாளரான ரஞ்சகுமார் .அவுஸ்திரேலியாவில் இந்த மாதம் நடைபெற்ற சர்வதேச சிறுகதை போட்டியில் பல கால இடைவெளியின் பின் எழுதிய நவகண்டம் என்ற சிறுகதை மூலம் முதல் பரிசை பெற்றுள்ளார் .அவரை மிக்க மகிழ்வுடன் வாழ்த்துவதோடு அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்

1. நவகண்டம்
திரு எஸ். ரஞ்சகுமார், வத்தளை, இலங்கை.

2. எனக்குள் ஒருவன்
திரு. எ. விஜய், ராதாபுரம், தமிழ்நாடு, இந்தியா

3. தண்டனை
திரு. ஆனந்த் ராகவ், பெங்களூர், இந்தியா.

ஆறுதல் பரிசுகளாக (அவுஸ்திரேலியன் வெள்ளிகள் 50) தேர்வு பெறும் ஒன்பது சிறுகதைகள்

4. திடுக்கிடும் தகவல்
திரு. சூசை எட்வேட், அன்புவழிபுரம், திருகோணமலை, இலங்கை.

5. ஒரு சுதந்திர நாள்
திரு. தேவராசா முகுந்தன், கிருலப்பனை, கொழும்பு 6, இலங்கை.

6. எனக்கான 'வெளி'
எ.எச்.லறீனா, ஹந்தெஸ்ஸ, கெலி ஓய, இலங்கை.

7. ஒரு உயிர்; சில ஜீவன்கள்
திரு. சோ. சுப்புராஜ், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

8. தொப்புள் கொடி
திரு. டேவி. சாம். ஆசீர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

9. பயங்கரவாதத்திலிருந்து விடுதலை
திரு. சோ. ராமேஸ்வரன், நாரகன்பிட்டிய, கொழும்பு 5, இலங்கை.
10. பேர்த்திகள் இருவர்
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்), யாழ்ப்பாணம், இலங்கை.

11. பெரிய கல்வீடு
திரு. சா. அகிலேஸ்வரன் (அகில்), ஸ்காபறோ, கனடா.

12. தன்மானம்
செல்வி. சசிலா செல்வநாதன், திருகோணமலை. இலங்கை

Monday, May 24, 2010

மூன்று சிறுகதைகள்





(1) அந்த நகரத்து அழகி(சிறுகதை)
‎அந்த நகர மைய குறீயீடாக அமைந்திருக்கின்ற மணிக்கூட்டு கோபுரமடியில் இருந்து அந்த பிராந்தியத்தையே அலறவைத்து வந்தது ஒரு சத்தம்..சத்தம் என்றால் வெறும் சத்தமல்ல ஊரிலுள்ள கெட்டவார்த்தைகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்த மாதிரி அது. மிஞ்சினால் ஒன்றோ இரண்டோ மூன்றோ மூல தூசண வார்த்தைகள் இருந்திருக்கும் . அதை பல வடிவத்தில் மாற்றி பல வார்த்தை ஜாலங்களில் தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

அந்த கல்லூரி வாசலினூடாக சந்தையில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு பையோடு ஏதோ யோசனையுடன் செல்லும் நடுத்தர வயது மனிதர் கூட இச்சத்தத்தின் அர்த்தத்தை மனதுக்குள் ரசித்து உதட்டில் சில கணம் புன்னகையை வைத்து எடுத்து விட்டு செல்லுகிறார்..நூலகம் நோக்கி செல்லும் பருவ பெண்கள் கூட ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கபடுகிற மாதிரி வெட்கபட்டு கொண்டு,, வெளியில் அருவருத்து கொண்டு ஆனால் உள்ளுக்குள் ரசித்து கொண்டு செல்லுகின்றனர்.முனியப்பர் கோயிலுக்கு செல்லும் நடுத்தர பெண்கள் தீடிரென்று சினந்து கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி அவதானித்த பின்னர் அட இவளோ என்று சொல்லிக்கொண்டு செல்லுகின்றனர்.


அவளே தான் ,,,இவர்கள் ஒளித்து வைத்து ரசிக்கும் இவர்களால் ஊத்தை வார்த்தைகள் என்று வர்ணிக்கப்படுபவையை உதிர்த்து கொண்டிருப்பவள்,.அத்துடன் இந்த நகரத்தின் சிலரின் உபாதைகளையும் ஊத்தைகளையும் பெற்றுக்கொள்ளுபவளும்.அவளே. ஏதோ அவசரத்தில் ஏதோ நோக்கத்துக்காக சென்று கொண்டிருந்த அவளை.வழி மறித்து அந்த மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு கிட்ட உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருந்த பதினாறே நிரம்பாத சில பொடியள் அவளை பார்த்து சல்லிக்கல்லு யனைவமே அப்பி என்று சிங்களம் தமிழும் கலந்த அந்த பாடல் வரிகளை பாடியதே அவளுக்கு வந்த கோபம். அதனால் வந்தது இந்த வார்த்தை ஜால சத்தம்.அரை குறையாக உதிர்க்கப்படும் யனவமே அப்பி என்ற சிங்கள வார்த்தைக்கு அர்த்தம் சரியாக அந்நகரத்து வாசிகளுக்கு தெரியுதோ இல்லையோ.சல்லிக்கல்லு என்று தமிழ் போல இருக்கும் அந்த சொல்லுக்கு அர்த்தம் அவர்கள் கொள்ளுவது வேறு மாதிரி.



ஏன் என்று அவளுக்கு தான் முதல் தெரியுமே,..அதன் பின்னர் தானே மற்றவருக்கு தெரிந்திருக்கும்.அவளிடம் அவசரத்தில் இருட்டில் அனுபவிக்க போன ஒன்று.இவர் அனுபவிக்கும் அத்தருணத்தில் அவள் ஜடமாக இருந்து மள்ளாக்கொட்டை சாப்பிட்டு அதன் சுவையை ரசித்து கொண்டிருந்திருக்கிறாள். அந்த ஆத்திரத்தில் அவளிடம் சில்லறை காசாக உருவகபடுத்தி சல்லிக்கல்லுகளை கொடுத்து வந்திருக்கிறான்...அவளும் ஏமாந்திருக்கிறாள் அன்றிலிருந்து அவளுக்கு சல்லிக்கல்லு என்று பட்டம் முடிசூட்டப்பட்டு இப்பவும் தொடர்கிறது.

இந்த சல்லிக்கல்லு தேவைப்படுகிறது அங்குள்ள பெண்கள் தங்களை கண்ணகிகளாக உருவகபடுத்த..அப்படி ஒரு மாதிரி பெண்கள் அவர்களுக்கு தென்பட்டால் கூட சல்லிகல்லு என்று அழைக்க தொடங்க பார்ப்பார்கள்

கெக்கே போட்டு ரசித்த பொடியள் மீண்டும் ஒருமுறை அவளிடம் அதை எதிர்பார்த்து கூவ .அதை செவிசாய்க்க கூடிய எல்லை எல்லாத்தையும் தாண்டி சென்று விட்டாள்,.றீகல் தியேட்டர் அடியில் அடல்ஸ் ஒன்லி படத்தின் கட்அவுட்டை உள்ளே உள்ள படம் எப்படி இருக்கும் என்று மிகை கற்பனை பண்ணிக்கொண்டு ஆவென்று பார்த்து கொண்டிருந்தது. ஒன்று..நடக்கும் வேகத்தில் அதையும் சாடையாக இடித்து தள்ளிக்கொண்டு மூத்திர ஒழுங்கைக்குள் நகர்ந்து கொண்டிருந்தாள்.இந்த மூத்திர ஒழுங்கை கடைசி மட்டும் காவி பின் தாங்க மாட்டாமால் கடைசியில் ஒதுங்குபவர்களின் இடம்.இது. இந்த பகுதியிலிருந்து நகரத்து மைய பகுதிக்கு செல்லுவதுக்கு சுலபமான சேறும் சகதியும் நிரம்பி வழியும் குறுக்கும் பாதை.
அவளை கடந்து செல்லும் அந்த தோடம்பழ வியாபாரி கூட இவளை சுவைத்து இருப்பான் ,,அவனுக்கு கூட இவளின் அவசரம் கிராக்கிக்குத்தான் என்ற நினைப்பு.நெற்றியில் பட்டையும் சந்தனம் சவ்வாதுமாக ஒண்ணுக்கு ஒதுங்க இடம் தேடி கொண்டிருக்கிற பெட்டிக்கடை வைத்திருக்கின்ற அந்த பழசு கூட இவளிடம் சென்றிருப்பார்,அவரின் நினைப்பு கூட இவளின் அவசரம் கிராக்கியை தேடித்தான் என்று..அவளோ அவனின் நினைப்புடன் இந்த நகரமுழுவதும் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்..அவனை நாலு நாளாக அவளின் கண்ணில் காண கிடைக்கவில்லை. அதனால் ஏற்படும் தவிப்பை தண்டரோ போட்டு கூவியா சொல்லவா வேணும் அவர்களுக்கு..அவனின் நட்பு கிடைத்த பின் அதை விட்டு விட்டேன் அதையும் சேர்த்து சொல்லுவா வேண்டும் .இவர்களின் நினைப்பை எல்லாம் காவி நினைக்க அவளுக்கு இடமில்லை.ஏனெனில் .நினைப்பு முழுவதையும் அவனே பிடித்து விட்டான்.


நகரம் இவளது அவசரத்தின் வேகத்தை விட வேகமாக இப்ப இயங்க தொடங்கி விட்டது. அந்த பிரதான றோட்டில் இறங்கினவள் எந்த பக்கம் போவது என்று தனது மூளையை கசக்கி கொண்டு நின்றாள் .சிறிது அதில் நின்று நிதானித்து விட்டு ஆஸ்பத்திரி இருக்கும் தெரு பக்கமாக விறு விறுவென்று நடக்க தொடங்கி விட்டாள் .தெரு நடுபகுதியில் உள்ள மரங்களின் கீழ் மனிதர்கள் மட்டுமல்ல மினிவான் ,வாடகை கார்களும் ஓய்வெடுத்து கொண்டிருந்தன.கண்டக்டர்கள், வாகன ஓட்டனர்கள் அதில் சாவகசமாக நின்று கொண்டும் குந்தி கொண்டும் சிலர் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒன்றுடன் சாய்ந்து கொண்டும் வாயடித்து கொண்டிருந்தார்கள் ..அதுக்குள் அவன் நிற்கிறானா என்று துளாவினாள். அவள் தேடும் அவன் அதுக்குள்ளும் சில நேரம் நிக்க கண்டிருக்கிறாள் இவன் அறிமுகம் கிடைக்க முந்தி.
அவளை பொறுத்தவரை அவளுக்கு இப்ப உலகத்தில் மிகவும் அழகன் அவன் தான்

.ஆனால் பரட்டை தலையுடன் பல நாள் பல்லு தீட்டாத காவி படர்ந்த பற்களுடனும் கிட்ட சென்றால் பல மாதம் உடம்பு கழுவதாதால் ஏற்படும் ஒருவித அழுக்கு வாசனையுடனும் அந்த கடை வாசல்களிலும் தெருக்களிலும் வலம் வரும் ஒருவன் தான் அவன்.அவனை பார்த்தால் ஒரு காட்டு மனிதனோ அல்லது ஆதிவாசி போன்று அமைந்த தோற்றம் ,,அவனது பற்கள் எப்பவுமே சிரித்தப்படி இருப்பது போல் தோற்றமளிக்கும் அதில் எப்பவுமே வீணி வடிந்தபடி..உண்மையில் அவன் எப்பவுமே சிரித்தபடி இருப்பது அல்ல ..அவனது உருவ அமைப்பே அப்படி இயற்கையில் அமைந்து விட்டது .அங்குள்ள கடை க்காரர் அதில் கூடி இருக்கும் சிலரிடம் எப்பவும் கேட்டு கொண்டிருப்பான்.



இப்படி ,,அண்ணே ஒரு பணிசும் ஒரு டீயும் வாங்கி தாண்ணே .என்று அரியண்டம் கொடுத்து கெஞ்சி கொண்டு இருப்பான்..அதற்க்கு விலையாக பத்து மடங்கு பெறுமதியான வேலையை வாங்கி விடுவார்கள் .அவன் எந்த தொட்டாட்டி வேலை செய்து முடித்தாலும் அவனுக்கு அதிகம் கிடைக்கும் சம்பளம் பணிசும் டீயும் தான் .அவனுக்கும் அதுக்கு மேல் தேவை இருப்பது போல் தெரியவில்லை . தெரியவில்லையோ மேலும் தேவைகள் இருக்கு என்று தெரியாதோ என்னவோ தெரியாது.அப்படி யாரும் இல்லாத நேரங்களில் மூலையுள்ள கடை வாசலில் சாய்ந்து கொண்டு இருந்த படி போய் வரும் பெண்களை கண் வெட்டாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான் .

.அவனது தாமசத்தால் உருவாகிய இறுகிபோன உடல் உருவாகி இருந்தது. சில வேளை வேண்டுமென்றே தெரியாத மாதிரி தனது உடையை நழுவ விட்டு தனது அங்கங்களை தெரியதக்கதாய் விட்டு விட்டு இருப்பான் ..அதால் போகும் .பெண்கள் அருவருத்து திட்டி கொண்டு செல்லுவார்கள் ..அவர்கள் அருவருத்த மாதிரி தானே நடிக்க வேண்டும் ....சில வேளை ரசித்தும் இருக்காலாம் ஏனெனில் தையல்காரன் கவர்ச்சியாக தைக்கும் உடைகளிற்க்குள் ஒளிந்து கொண்டு கவர்ச்சி காட்டும் கோறை நெஞ்சு உடைய அவ்வூர் இளைஞர்களிலும் பார்க்க உண்மையிலையே இயற்கை கட்டமைப்பானவன்.

இந்த இடத்திலையும் இப்ப காணவில்லை என்ற போது நெஞ்சுக்குள் அவளுக்கு என்னவோ செய்தது .அவன் எங்கு போயிருப்பான் நகரத்தை விட்டு வெளியில் போக கூடியளவுக்கு அவனுக்கு தேவையுமில்லை ஆற்றலுமில்லை என்று பழகிய கொஞ்ச நாளில் அவளுக்கு நல்லா தெரியும்.

அவனை நினைத்து கலங்குவதுக்கு காரணம் காதல் என்ற கெட்ட வார்த்தையினால் என்று கடைசி வரையும் நினைக்கமாட்டாள். அதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை..அதுக்காக அவள் விபச்சாரி தானே அவளுக்கு எங்கை தெரிய போகுது என்று நினைக்க கூடாது .இந்த பலராலும் பூசிக்கபடும் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நன்றாகவே தெரியும் .இவளை தாண்டி பள்ளிக்கு செல்லும் பெட்டைகள் பொடியளின் பகிடிகளுக்கு புன்னகை உதிர்த்து விட்டு அது காய முன்பு ..அங்காலையும் நிற்கும் பொடியளும் பகிடி விட அதற்க்கும் வழிய விட்டுட்டு செல்லுகிறார்கள்.

அந்த நாட்களில் அந்த கிராமத்து சந்தியில் காலை நேரம் களிப்பூட்டி கொண்டு இருக்க ஸ்கூல் பஸ்க்காக இவள் வரும் போது அந்த பிரதேசமே குளிர்மை கொண்டாடி கொண்டு இருக்கும்..அவளின் அசைவு அங்குள்ள கல்லூரி பெண்களில் இருந்து வித்தியாச படுத்தி கொண்டு இருக்கும் ..அது இயற்கை கொடுத்த வரம் ...அவளின் புன்னகை த்தும்பும் போல் இருக்கும் அப்பாவித்தானமான முகம் அங்கு இருப்பவர்களின் உணர்வுக்களுக்கு தக்க மாதிரி விடை கொடுத்து கொண்டு இருக்கும். அவ்வூர் வாசிகளை விட அவன் நவ நகாரிகமாக இருந்தான் அண்மை காலமாக தான் அவ்வூரில் தென் படுகிறான் ,இவள் பள்ளிக்கு வரும் நேரங்களில் அவனும் வழமையாக வருவதுண்டு .அவள் அங்கு பரப்பும் முழு புன்னகையையும் தனதாக்கி கொள்ள யோசித்தான் ..அதற்க்கு தனக்கு தெரிந்த சகல அஸ்திரங்கள் சகலவற்றையும் பிரயோகித்தான் ..
.

இரட்டை பின்னலில் வந்தால்என்னை விரும்புவதாக அர்த்தம் என்று சொல்லி தன்னிடம் உள்ள கடைசி அஸ்த்திரத்தையும் பாவித்து முடித்தான்

அடுத்த நாள் அந்த ஸ்கூல் பஸ் இரட்டை பின்னலுடன் சென்றது .அன்றிலிருந்து அவளுக்கு கசிறினோ பீச் காட்டினான் .. படத்தில் நாயகன் நாயகிக்கு நெருப்பூட்டி திரையில் சிவப்பாக்கா ..ராணி தியேட்டர் பொக்ஸ் றூமில் இருந்த படி சிவப்பு பச்சை எல்லாம் காட்டினான் அவன் கடைசி யில் இவளுக்கு சிவப்பு கொடி காட்டி விட்டு சென்று விட்டான்..ஆனால் காலம் செல்ல அவளுக்கு வயிறு காட்டியது ...அதனால் கிராமத்து சொந்தகளினால் தூக்கிய எறிப்பட்டவள் நகரத்தில் அலைந்தாள் அவனைத்தேடி ..ஆனால் நகரமோ அவளை இந்த தொழில் செய்யும் நரகத்தில் தள்ளியது.


அவள் ஸ்ரான்லி றோட்டில் தேடினால் அவன் நிற்க்கலாம் என்ற நப்பாசை அவளுக்கு ...மூட்டை தூக்கு தொழிலாளிகளுடன் நிற்க்க கண்டதாக நினைப்பு.

இடியும் மழையும் நகரத்தை உலுப்பி கொண்டிருக்க அவனும் அவளும் தற்சயலாக பாழடந்த கட்டிடத்தில் ஒதுங்கிய போது தான் அந்த நட்பு உருவாகியது .நகரமே நள்ளிரவில் நித்திரை வராமால் போராடி கொண்டிருக்க ..இழக்க ஏதும் அற்ற அந்த இருவரும் அந்த இரவை முதல் இரவாக்கி அங்கு ஒரு யோக நடனம் செய்த அன்றிலிருந்து பிறகு அவர்கள் பல முதல் இரவுகளை சந்தித்து இருந்தார்கள்.

அவள் அவனிடமிருந்து அந்த காலம் ஏமாற்றிய காதலினிடமோ அவள் ஈடுபட்ட பாலியல் உறவுகளிலிருந்து பெற்று கொள்ளாத புதிய அனுபவத்தை பெற்றாள்..அதற்க்கு என்ன பெயர் சொல்ல தெரியமால் தவித்தாள்

அந்த தவிப்பு அடங்காமால் தான் இன்னும் தவிப்புடன் அவனை தேடி கொண்டிருக்கிறாள். அவள் பத்திரிகை படிப்பவளல்ல ..அவளை கடந்து செல்லும் போய் வருவர்களின் முக அசைவுகளை படிப்பதன் மூலம் அங்கு ஏதோ நடக்க கூடாத விசயம் நடந்து விட்டது அவளுக்கு உணர்த்தியது.

அந்தி தேவன் கோப கணைகளை வீசி கொண்டிருந்தான் ..முனிசபல் விளக்குகள் மெல்ல மெல்ல எரிய தொடங்கி கொண்டிருந்தன ..அப்பொழுதும் அவனை தேடி கொண்டிருந்தாள் ..அந்த நகர தெருவில் ஈயை கூட காணவில்லை ..அவ்வூர் சன ங்கள் வீட்டுக்கு இரட்டை தாள்ப்பாள் பூட்டு பூட்டி பங்கருக்குள் இருப்பது மாதிரி இருந்து கொண்டு செய்தி கேட்டு கொண்டு இருந்தனர்.
பயம் கவ்விய உணர்வுடன் மறு நாள் காலை விடிந்தது..சனங்கள் மெல்ல மெல்ல குசு குசுத்து கொண்டு தெருவுக்கு இறங்கி தங்களுக்குள் கதைத்து கொள்ளுகிறார்கள்.
அங்கங்கை பிரேதம் கிடக்காம் உண்மை பொய் தெரியாது என்றது ஒன்று.
இரவு முழுவதும் பங்கருக்கிலை இருந்தது போல் இருந்து விட்டு வெளியில் வந்து ..ச்சாய் அவங்களாய் இருக்காது ..சும்மா ஆட்களாய் இருக்கும் என்று புறநானாற்று வீரம் கக்கியது.
அப்பொழுது சைக்கிளில் வந்த
பொடியன் ஒருவன் அவர்களை பார்த்து சொன்னான் ..இப்பத்தான் பார்த்துட்டு வாறன்.
முற்றவெளியிலை உண்மையாய் த்தான் என்று.. .
அவன் பிரேதமாக கிடந்து இருந்தான் என்று அவளுக்கு தெரியாது ..ஏனென்றால் அவளும் பிரதேமாக அவனருகில் கிடந்திருந்தாள்.
-----------------------------------------------------------------------------------------------

(2) ஒரு தற்கொலை முயற்சி (சிறுகதை)





அந்த திரைபடம் திரையில் சும்மா தன் பாட்டில் ஓடி கொண்டிருந்தது. அந்த தியேட்டரில் அதிகம் கூட்டமில்லை அது ஒரு இலங்கை படம் .வேறு எங்கையோ அரைத்த மாவை அரைத்ததை எடுத்து மேலும் அரைத்து கொண்டிருந்தது .அதிகம் கூட்டமில்லை அதுவும் வந்தவர்கள் வெளியில் எரியும் வெய்யிலின் புழுக்கத்தை தணிக்க ஒதுங்கி இடம் தேடித்தான் இங்கு வந்தவர்கள் மாதிரி மூலைக்கு மூலைக்கு தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள் ,அவர்களுடன் அங்கு இருவர் திரையை வெறித்து பார்த்த படி படம் பார்த்து கொண்டிருந்தனர் ..அதில் ஒருவன் திரையை பார்த்து ரசிப்பது போல் இருந்தான் .மற்றவன் படத்தை வெறுத்து திரையை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான்

படத்தை ரசித்து பார்த்த
அந்த உயரமானவன் திரையில் கதாநாயகன் கதாநாயகிக்கு ஏதோ நாடகத்தனமாக கூறிய வச னத்தை
திரும்ப திரும்ப தனக்காக கூறியது போல் நினைத்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தான்.திரையில் வேறு காட்சியும் ஓடியும் அவனுக்கு அந்த காட்சியும் வசனமும் தான் தொடர்ச்சியாக ஓடி கொண்டிருந்தது.அவனுக்கு அருகில் இருந்த நண்பனுக்கு ஆச்சரியம்..அழுவதுக்கு ஒன்றுமில்லை அப்படி அழுவதென்றாலும் ஏன் இந்த படத்துக்கு வந்தோமோ என என்று நினைத்து அழத்தான் ஒன்று இருக்கிறது ..உன்னையும் அவனுக்கு பிறந்த உன் பிள்ளையையும் ஏற்று கொள்ளுகிறேன் என்னுடன் வந்துவிடு...என்ற வசனம் வந்த இடத்திலிருந்து அவன் மோகன் அழுது கொண்டிருக்கிறான் என்பது அவனுடன் வந்தவனுக்கு தெரியாது மட்டுமல்ல . அந்த வசனம் வந்ததே தெரியாத மாதிரி தான் திரையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் இவ்வளவு நேரமும்

..
கடல் நோக்கி ஓடும் ஆறு மாதிரி கன்னங்களில்இரு பக்கங்களிலும் கண்களிலிருந்து ஒழுகும் கண்ணீர் தங்கு தடையின்றி ஒழுகி கொண்டிருந்தது.அந்த வழியும் கண்ணீருடன் அவன் பக்கம் திரும்பி இதை தான் அவளிடம் கேட்டேன் என்று அவளிடம் யாசித்ததை பொருத்தி இவனிடம் ஒப்புக்கொடுத்தான்.அவனின் நண்பன் அவனின் அந்தரங்கங்களை நன்கு அறிந்தவன் ,,அதையும் மீறி அதையெல்லாம் அசிங்கங்களாக நம்புகிறவன் கூட ..அதனால் அவர்களிடேயே அடிக்கடி விவாதம் நடைபெறும் ....அதனூடாக நட்பு என்ற போர்வையில் அவர் அவர்களின் தனித்தன்மை அழிக்க முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பதுண்டு ..அதே போல் இப்பொழுதும் அப்படி ஒரு தர்க்கம் தொடங்கி விட்டது .படம் முடிந்ததது என்று தெரியாமால் விவாதத்தினூடாக நடக்கிறார்கள் வெளியேறுகிறார்கள் .ஆத்திரபடுகிறார்கள் பரிதாபப்படுகிறார்கள் ..படம் பார்க்க வந்தவர்கள் மூணு மணி நேரம் போனது முப்பது மணி நேரம் போனது மாதிரியான உணர்வுட ன் வெளியேறுகிறார்கள். வெளியே வெப்பம் தகித்து மதியத்தை கொதி தண்ணியாக்கி அத்தெருவில் போகிற வருகிறவர்களை குதிக் காலில் நடக்க வைத்து பரத நாட்டிய கலையை உருவாக்கி கலை சேவை செய்து கொண்டிருந்தது. இந்த எந்த பிரச்சனை எதுமின்றி அவர்களின் பிரச்சனையே மையமாகி உரத்த குரலில் தர்க்கம் செய்து கொண்டு பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.பஸ் நிலையம் வந்தது கூட தெரியாமால் பஸ்ஸில் ஏறுகி றார்கள்
.

உள்ளுக்குள் அழுது பொருமி உருகி குமைந்து கொண்டிருந்த மோகனின் உணர்வுகளை .இந்த பஸ் கூட தாங்கமாட்டாமாலோ என்னவோ முக்கி முனகி தான் நகர்ந்து கொண்டிருந்தது. திருவிழாவில் காணமால் போன குழந்தை மாதிரி அவனது மனதும் தனித்துவிட அங்கும் இங்கும் தாவியது. .நண்பன் பஸ்ஸை விட்டு இறங்கி சென்றது கூட தெரியாமால் மனது எதிரும் புதிருமாக நின்று யுத்தம் செய்து கொண்டு இருந்தது. தீடிரேன்று ஏதோ முடிவு வந்து விட்ட மாதிரியும முகத்தில் அப்ப அப்ப இடைக்கிடை சில ரேகைகள் வந்து மின்னல் வேகத்தில் வந்து மறைந்து கொண்டிருந்தன. முடிவை நிறை வற்ற நினைக்கும் மனதின் வேகத்துக்கு பஸ்ஸின் வேகம் ஈடு கொடுக்காததை நினைத்து இப்ப ஒரு புதிய வேதனையுடன் அவனது முகம் தவித்து கொண்டிருந்தது.


ஆளை மயக்கும் கவர்ச்சிகரமானவாக இருந்தாலும் இயல்பாகவே கூச்சம் சுபாவம் உடையவன், அவனோட்டை பொடியன்களிலும் வித்தியாசமாகவே இருந்தான் .உணர்வு தரும் இலக்கணங்களையெல்லாம் இலக்கியமாக்கி கொள்ளுபவன் . அவனும் கவிதை என்ற பெயரில் ஏதோ ஏதோ எல்லாம் கற்பனை பண்ணி கிறுக்கி வைப்பான். கவிஞர்கள் வர்ணிக்கும் வர்ணணை கற்பனைகளை எல்லாம் நிஜம் என கற்பனை பண்ணி கொண்டிருந்தான் ..அது போலவே காதலையும்...அதையும் மனதில் விக்கிரகபடுத்தி ஆலோபனை செய்து பூஜை செய்து தெய்வீகபடுத்தி வைத்திருந்தான் கனகாலமாக..இவன் மேல் மன்மத கணைகளை எறிந்த அவனுக்கு ஒத்த பெண்களை கூட அலட்சி படுத்தியே இருந்தான் . ஏனோ தெரியவில்லை...அவனுக்கு அவனிலும் பார்க்க வயதுக்கூடிய பெண்களை பார்க்கும் போது மனதில் பூ பூக்கும் ...அதை கூட நேரிடையாக கூட பார்க்க முடியாத கோழையாக இருந்தான்.

அவன் பாடசாலையை விட்டே நாள்கள் மாதங்கள் வருடங்கள் ஆகி விட்டன..பொதுவாக மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் சோம்பலை கொன்று தூக்கத்திலிருந்து எழும்பி வீதியில் சென்று பல காலமாகி விட்டது. அதனால் அவனது மூன்று வீடு தள்ளி புதிதாக வாடகைக்கு கூடியேறிய அவளை காண அவனுக்கு காண சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பள்ளி செல்லும் நேரத்தில் அவள் வீட்டுக்கு முன் நிற்பாள் தனது மகனை பள்ளிக்கு அனுப்பு நோக்குடன்.அவளது கணவன் திருமணம் செய்து சுகத்தை அறிமுக படுத்திவிட்டு மிகுதி சுகத்தை கடிதம் மூலம் வெளிநாடு ஒன்றிலிருந்து கொடுத்து கொண்டிருந்தான் .அவளின் அழகான விழிகளில் பொய்யான சுக அனுபவிப்பு தெரிந்து கொண்டு இருக்கும்....அவளது இளமையின் உணர்வுகளை கொல்லும் இந்த சமூக கோட்பாடு கவசகங்ளுடன் காலத்தையும் துரத்தி கொண்டு இருந்தாள்.....


அன்று ஒரு நாள் பள்ளி செல்லும் நேரம் சைக்கிளில் செல்லும் போது அவளது மகனை ஏற்றி செல்ல கேட்ட பொழுதிலிருந்து அவனுக்கு அவளின் அறிமுகம் கிடைத்தது...இயல்பாக பழகுவது மாதிரி பழகினாலும் இரண்டு பேரும் வெவ்வேறு தளத்தில் நின்று வெவ்வேறு கோணத்தில் அணுகி கொண்டிருந்தனர்.அவனோ காரணம் தெரியாமேலே இவள் மேல் ஒரு வித ஈர்ப்பு கொண்டு இவ்வளவு காலமாக பூட்டி வைத்த விக்கிரகத்துக்கு ஆராதனை செய்து காதல் என்று பெயரிட்டு திருவிழா கொண்டாடி கொண்டிருந்தான். அவளோ தனது தனிமையை போக்க குற்ற உணர்வு என்ற வெடி குண்டை கட்டி கொண்டு இவன் மூலம் இனிமையாக்க முயன்று கொண்டிருந்தாள்.


கடிதத்தில் இவ்வளவு காலமும் சுகம் அனுப்பிய அவளின் கணவன் நெடுகவும் வெளிநாட்டில் திரவியம் தேடி கொண்டிருக்க முடியமா ...நாடு திரும்ப போகும் செய்தி வந்தது. அவள் அவன் தன்னிடம் விலகி நிற்குமாறு கேட்ட பொழுது நடந்த உரையாடலின் போது தான் .....அந்த திரை பட உரையாடல் போன்ற தொனியில் இவன் அவளை பார்த்து கேட்டிருக்கிறான் ...அப்போது தான் அவனது வார்த்தைகளிலிருந்து அவளுக்கு அவன் கட்டிய காதல் கோட்டையை பற்றி தெரிந்தது ...அவன் அவளை வெறுக்க வேணும் என்பற்க்காக ...அப்படியொரு தொனியில் அந்த கடைசி சந்திப்பில் பேசியிருக்கிறாள்....அப்பிடியொரு இழி பேச்சை வாழ் நாளில் அவன் கேட்டிருக்க மாட்டான்.


அவன் தனது வாழ்நாளை முடிக்கும் நோக்குடன் பஸ்ஸை விட்டு இறங்கி கொண்டிருந்தான். அந்த பஸ்ஸும் அவனுக்கு யமலோக அழைப்பாணையை கொடுத்து விட்டு சோகத்துடன் செல்லுவது போல் அவனை இறக்கி விட்டு சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது தான் தொலைக்காட்சி அறிமுகமான காலம் . அதுவும் சில வீடுகளில் தான் இருக்கும் அந்த வீடுகளும் பனை உயர அன்ரனாக்களை கட்டி தொலைக்காட்சி இருப்பதை பறைசாற்றி கொண்டிருக்கும்....அவளது வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டி .அவ்வூர் அரைவாசி சனங்களும் அங்கு பிரச்சனம் .அது போல அவனது வீட்டிலும் யாருமில்லை .அவனது முடிவுக்கு அனுக்கூலமானது..விட்டத்தில் விவாசய பயன்பாட்டுக்காக தொங்கி கொண்டிருந்த பொலிடோல் என்ற நச்சு திரவாகத்தை தன்னை அழிக்க பயன் படுத்தி கொண்டான் அவளது வீட்டில் கும்மாளமும் குதுகாலமும் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. இங்கு அவன் அரை குறை உயிரில் துடித்து கொண்டிருந்தான்.

ஆஸ்பத்திரி கட்டில் துடித்து கொண்டிருக்கிறான் .இப்பொழுது உயிர் தப்ப வேணும் என்று துடித்து கொண்டிருக்கிறான்.. கடைசி நேர உயிர் ஆசையில் தன்னை எப்படியும் காப்பற்றும் படி டாக்டர் நர்ஸ் பார்த்து கெஞ்சி கொண்டிருக்கிறான்...பொலிசார் சூழ இன்னுமொரு தற்கொலை முயற்சி செய்த பொடியனை கொண்டு வந்து காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.ஆனால் அந்த பொடியனோ டாக்டரிடமும் இரகசியமாக கூறுகிறான் தன்னை இறக்க விடும்படி ....என்னவோ தெரியாது அந்த அரசியல் பொடியன் இறந்து விட்டான் இவன் மோகன் எப்படியோ என்னவோ தெரியாது தப்பி விட்டான்.

காற்று வாக்கில் அவளிடம் செய்தி மாறி போனது ....தற்கொலை செய்ய முயற்சி செய்த பொடியன் இறந்து விட்டான் என்று .மோகன் தான் இறந்து விட்டான் என்று தனது குற்ற உணர்வு டன் அவளும் ஒரு தற்கொலை முயற்ச்சி எண்ணத்துடன் அதற்க்கான ஆயத்தங்களை செய்யும் போது ...பாடசாலை சென்று திரும்பிய மகனின் அம்மா என்று விளிக்கும் குரல் கேட்கிறது..அதே நேரம் பின்புலத்தில் இவ்வளவு நடந்து இருக்கு என்று எதுவும் தெரியாத அவளது கணவன் சந்தையிலிருந்து திரும்பி வந்து அவளை வாஞ்சை யுடன் கூப்பிடும் குரலும் கேட்கிறது.

தூங்கி சாவதுக்கு சுருக்கு கயிறுடன் நிற்கும் அவள் தூங்குவாளா இல்லையா என்பது இந்த கணம் மாறி அடுத்த கணம் வரும் போது தெரியும்.





----------------------------------------------------------------------------------------------


( 3) ஒரு சனிக்கிழமை இரவில்(சிறுகதை)






நான் உள்ளே போக சரியாக மட்டு மட்டாக அந்த நிலக்கீழ் ரயிலின் கதவு சாத்த பட்டது ..ஓடி வந்து
ஏறிய பின் இன்னும் பதட்டம் தணியவில்லை .இது தான் இந்த இரவின் கடைசி ரயில் .இதை விட்டிருந்தால் இந்த குளிருக்குள் விடியும் மட்டும் இந்த வெறியுடன் தள்ளாடி திரிய வேண்டி இருக்கும். நினைத்து பார்க்கவே குளிரில் துடிக்குது தேகம்.இது ஒரு சனி இரவு .அதனால் நடுநிசி தாண்டியும் கூட்டமும் கூச்சலும் அதிகமாக காணபட்டது தள்ளாடி தள்ளாடி இருக்க இடம் தேடி கொண்டிருந்தேன் .எனது நிலைமையை பார்த்து எனக்கே ஒரு வெட்கம் வந்தாலும் என்னைப்போல் பல பேர் வெட்கமில்லாமால் அப்படி அப்படி ஆண்களும் பெண்களும் அங்கங்கே .எப்படி குடித்தாலும் நான் நிதானம் தவறுவதில்லை ஆனால் இன்று என்னை அறியாமால் வாய் உளறியது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல இந்த பரதேசி மோகன் ஊத்தி விட்டானே..அவன் ஊத்தினால் எனக்கு என்னுடைய மதி எங்கை போனது ?தமிழில் இப்படி உளறுவுதை கண்ட எனது முதுகு பிறகு பக்கமாக நின்ற வெள்ளை இனத்தவன் ஒன்று தனக்கு தான் ஏதோ ஒன்று சொல்லுறன் என்று நினைத்து வள் என்றோ வட் என்றோ ஏதோ சொல்லி என்னை பார்த்து முறுகினான் .

கிழமை முழுவதும் யந்திரமாய் சுழன்று வேலை செய்து வார கடைசி எப்ப வரும் என்று துடித்து காத்திருந்து குடித்து கும்மாளமடித்து களைப்பை இறக்கி செல்லும் இப்படியான கூட்டத்துடன் பயணம் செய்து கன காலம் ....அதனால் அவர்கள் போடும் எல்லா அட்டகாசமும் கூச்சலும் கும்மாளமும் இந்த வெறியில் கூட என்னால் சகிக்காமால் விலகி இருக்க இடம் தேடினேன் ..இந்த இரைச்சல்களின் ஒலியை மீறி கிழித்து ஒலித்து ஓய்ந்து ஒரு தரிப்பிடத்தில் நின்றது ரயில்..இறங்கினார்கள் ஏறினார்கள்..அப்போது அந்த பெட்டியின் மூலையில் இடம் காலியாக கண்டு யாரும் பிடித்து விடுவார்களோ என்று அவசரப்பட்டு ஒரு தவளை பாய்ச்சல் பாய்ந்து அந்த இடத்தில் இருந்து கொண்டேன்.

அந்த சீட்டுக்கு முன் சீட்டில் சாவகாசமாக அதுவும் இந்த நேரத்தில் கூட புத்தகம் வாசித்து கொண்டு எதேச்சையாக என்னை பார்த்து விட்டு தொடர்ந்து வாசித்து கொண்டிருந்தாள். ஒரு வெள்ளை இனத்து பெண்.அந்த ஒரு கணம் தான் இருக்கும் இருவரின் பார்வை சந்தித்து இருக்கும் ..ஆனால் எனக்கோ பல நாள் பழகிய பந்தம் மாதிரியான ஓர் உணர்வு. அவள் திரும்பவும் பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் என்னுள் எழுந்தது. இந்த வெறி செய்யும் வேலையாக இருக்குமோ என்று நினைத்தேன்.சிலரை காரண காரியமில்லாமால் பிடித்து போவதுண்டு இடம் காலம் கூட பார்க்காமால் கூட.. எனது பார்வையின் அரவம் கண்டாளோ என்னவோ அல்லது தனது பாதுகாப்பை கருதியோ என்னவோ படிப்பதை நிறுத்திவிட்டு என்னை ஒருதரும் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்தாள் ..எனக்கு சொல்லவா வேண்டும் .அவளது புன்னகை சிந்த முன் இதற்க்காக காத்திருந்தவன் போல நானும் விரைந்து புன்னகைத்து அதை ஏந்தினேன். நான் போகும் இடத்துக்கு செல்ல இன்னும் ஒரு மணித்தியாலம் எடுக்கும் ..அதுவரை இவள் இருப்பாளோ அதற்கு முன் இறங்குவளோ அப்படி இறங்காமால் இருந்தால் என்றால் ,பேச்சு கொடுத்து பார்த்தால் ,அவள் என்னுடன் பேசினால் ,அப்படி அப்படி நினைத்து கொண்டிருந்தால்...

ஹி ஹி ஹி... என்று நைந்த நக்கல் குரலுடன் சிரிப்பை கக்கி விட்டு தொடர்ந்தது அது . இரண்டு கழுதை வயது ஆகிவிட்டது உனக்கேன் உந்த புத்தி இப்படி போகுது என்றது...வேற யாருமில்லை எனது மனம் தான் ..உங்களுக்கும் கேட்காது முன்னுக்கு இருக்கும் அவளுக்கும் கேட்காது ஆனால் அது பேசுவது கதைப்பது சிரிப்பது கோபிப்பது எல்லாம் எனக்கு தெளிவாக கேட்கும்..இந்த மனம் சிலவேளை எனக்கு கதை சொல்லும் என்னுடன் சண்டை பிடிக்கும் செல்லம் குத்தும் ஆலோசனை கூறும் அபப்ப வரும் .அபப்ப வராது.சிலவேளை பொழுது போகாமால் இருக்கும் பொழுது இந்த மனம் வந்து என்னுடன் வந்து கதைக்காதோ என்று ஏங்குவேன் தேடினாலும் நான் விரும்பினாலும் காத்திருந்தாலும் கூட வராது .எங்கையோ சுத்தி திரியும் எங்கை போய்ட்டுது என்றுஎனக்கு கூட தெரியாமால் இருக்கும்...இந்த மனதின் ஒரு கெட்ட பழக்கம் நேரம் காலம் தெரியாமால் வந்து தொந்தரவு கொடுக்கும் ...கதை கேள் கேள் என்று சொல்லி..

உன் பாட்டில் என்ன பினாத்தி கொண்டு இருக்கிறாய் நல்ல ரசமான கதை சொல்லுகிறேன் கேட்கிறாயா என்றது... தனது சொந்த கற்பனையை வர்ணஜாலம் செய்து எழுதும் இலக்கியவாதிபோல் இட்டு கட்டி சொல்லும் கதை என்று நினைக்காதே ...நிசமாய் நடந்த உண்மை கதை ..உனக்கே கதையின் மாந்தர்கள் கூட ரொம்ப பழக்கமே என்றது மனம். சொல்லு சொல்லு என்று கெஞ்சி கொண்டு ஆவலுடன் இருப்பேன் என..நினைத்து தன் பாட்டில் கதை சொல்ல ஆயத்தமானது ...நிறுத்து நிறுத்து என்று வாய் விட்டே சத்தமே போட்டு விட்டேன் .அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மொழி விளங்கா விட்டாலும் இந்த ஓடும் ரயிலை நிறுத்தச் சொல்லி தான் சத்தம் போடுறான் என்று அனுமானித்து என்னை ஒரு மாதிரி பார்க்கிறார்களோ என்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கவில்லை .முன்னுக்கு இருக்கும் அவளும் ஒரு மாதிரி பார்த்தது தான் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

மனதிடம் முரண்டு பிடிக்காமால் அமைதியாக அனுசரித்து கதையை வேற ஒரு நாள் பார்க்காலம் இப்ப என்னை விடு என்றேன் .உனக்கே அடுக்கமா இந்த சனிக்கிழைமை இரவில் அதுவும் அழகான வெள்ளை இன பெண்ணோடு ஒத்த அலைவரிசையில் பயணிக்கும் போது இப்பிடி குழப்பலாமா என்றேன்... இல்லை சொல்லுவேன் என்று சின்ன பிள்ளை மாதிரி சிணுங்கி மீண்டும் அடம் பிடித்தது ....இயலாத கடைசியில் கதையை சொல் என்று வேண்டா வெறுப்பாக சொல்லி வேட்டு எனது லீலைகளில் கவனமாக இருந்தேன்.
அது சொல்ல தொடங்கி விட்டது...மள மளவென..

அன்று நடந்த விளையாட்டு போட்டியில் எவ்வளவு சனம் ,,விளையாட்டும் அங்கங்கை நடந்து கொண்டு இருந்தது..ஆக்களும் அங்கங்கை கூடி கதைத்து , கூடி குடித்து ஞாபங்கள் மீட்டி கொண்டிருந்தனர் .இதிலை கடலை போட்டிருக்கின்ற இவனும் வந்திருந்தானே ..இவனுக்கு எங்கை அங்கை நடந்தது ஞாபகம் வரப்போகுது

..இப்ப இருக்கிறதிலும் பார்க்க நாலு மடங்கு குடியுடன் அல்லவா அன்று இருந்திருந்தான். இவனது குடி தான் ஊருக்கெல்லாம் தெரிஞ்ச மாதிரி தானே ..கி.மு கி.பி மாதிரி குடிக்கு முந்தி குடிக்கு பிந்தி என . குடிக்க முந்தி வர்க்கம் புரட்சி மசிர் மண்ணாங்கட்டி,புண்ணாக்கு என என்னனோவோ எல்லாம் கதைப்பான் ,கு.பி அவனது பேச்சு நடை பாவனை எல்லாம் எதிர்மாறாய் இருக்கும் ....இவனை பற்றியா சொல்ல வந்தது இல்லையே ..நான் சொல்ல வந்தது அன்று விளையாட்டு போட்டி வந்திருந்த இவனுடன் ஊரில் அந்த காலம் கூடி திரிந்த ராஜாவே பற்றி , அவனுக்கு என்ன என்று கேட்கிறியளா ..இவனுக்கு தான் நல்லா தெரியுமே அவனுடைய காதல் கதை ...அந்த பிற்சேர்க்கையான.இருபது வருடங்களுக்கு பின் நடந்த விசயத்தை ..இங்கு அந்த விளையாட்டு போட்டியில் நடந்த அதிசயத்தை.சொல்லத்தான் வந்தேன்..நான் கதை சொல்லுறன் கேட்காமால்.அங்கை பாருங்களேன் இவ்வளவு வெறியிலும் ...அந்த பெண்ணுடன் வழிந்து சரசம் குத்திக்கெண்டு இருப்பதை. என்றது மனது.

என்ன என்னைப் பற்றி வர்ண்ணை சொல்லி கொண்டிருக்கின்றாய் என்று இடைமறித்து கேட்டேன் , எனக்கும் அவளுக்கும் இந்த கணங்களில் நடக்கும் கதையில் இருக்கும் சுவாரசியம் உனது கதையில் இல்லையே என்றேன் ... அதற்க்கு மனது கதையின் முடிவுதான் சுவாராசியமானது ...அதுக்குள் அந்தரப்படுகிறியே என்றது .அப்படி என்ன சுவராசியம் நடந்தது என்று அலுத்து கொண்டு கேட்டேன் ..உனக்கு அவனது காதல் நிறைவேறாது போனது தெரியும் ..அந்த விளையாட்டு போட்டியில் இருபது வருடங்களுக்கு அவனும் அவளும் தற்செயலாய் திருப்ப சந்தித்து கதைத்ததால் ..இந்த .இருவரும் தங்களது கணவன் மனைவி பிள்ளை குட்டிகள் எல்லாவற்றை விட்டு துறந்து விட்டு இணைத்து விட்டார்களாம் ....எப்படி இருக்கிறது .....என்றது .மனது.

நல்லாயே இல்லேயே என்றேன் ...நீ ரசனையே இல்லாதவன் என்று அந்த காலம் அவனது காதலை நீ விமர்சிக்கும் போது அவன் சொன்னது சரி போலை என்றது நகைப்புடன்.

அவனைப்போல பைத்தியக்காரன் என்று நினைத்தானா என்னை?. .வேணுமென்றால் இதோ இவளிடம் கேட்டு பார் எனது ரசனையின் அளவுகோலை .என்றேன்.

அப்பதான் மனது . எனக்கும் அவளுக்கும் நெருக்கத்தை . பார்த்திருக்கும் போலை கோபத்தில் மறைந்து விட்டது

கூப்பிட்டு கூப்பிட்டு மனதை தேடினான் ... மனதை காணவில்லை .. எனக்கும் அவளுக்கும் இருக்கும் உறவை சொல்ல இந்த மனம் சாட்சிக்கு கூட இல்லாமால் மறைந்து விட்டதே

இப்பொழுது அவ்வளவு ஆர்ப்பாட்டம் இல்லை இந்த ரயில் பெட்டியில்.

...ஒருவன் புல்லாங்குழலை இனிமையாக வாசித்து கொண்டிருந்தான் .. மிதந்து வந்து கொண்டிருந்தது.சிலர் அமைதியாக கேட்டு கொண்டிருந்தனர் ...சிலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தனர் ..ரயிலும் அந்த ஒலியையும் அரவணைத்து கொண்டு சென்று கொண்டிருந்தது .
.நானும் அவளும் அந்த மூலையில் ...

இந்த ரயில் இனிமேல் எங்குமே நிற்க கூடாது .வாழ் நாள் பூராவும் ஓடி கொண்டே இருக்கவேண்டும் என்று .நினைத்து கொண்டேன்

ஆனால் தூங்கி வழிந்து கொண்டிருந்த என்னை கடைசி ஸ்டேசனில் சுத்த செய்பவன் தட்டி எழுப்ப தான் தெரிந்தது நான் தான் கடைசி பிரயாணி என்று ..
வெறி கூட முறிந்து விட்டது .. இந்த நிசியில் வீட்டுக்கு எப்படி போவது என்று தெரியவில்லையே ...புத்திசொல்ல மனம் கூட பக்கத்தில்லை இல்லையே...கோபித்து கொண்டு போய் விட்டதே என்ன செய்வது என்று தெரியாமால் விழித்து கொண்டிருந்தேன்.

தீடிரென்று மனம் தோன்றி இப்ப ஒரு கதை சொல்லுட்டுமா என்றது .. இந்த நேரத்தில் கதை கேட்க விரும்பமில்லை தான் ..மனம் முந்திய மாதிரி கோபித்து கொண்டு சென்று விடும் என்ற பயத்தில் சொல்லு என்று பவ்வியமாக கூறினேன்..

உன்க்கும் அவளும் இடையில் நடந்த கதையை தான் சொல்ல போறன் என்றது
மனம் சொல்லிக்கொண்டு வந்தது ..வெளியில் நல்ல பால் நிலா ..நானும் நடந்து வீடு செல்லும் வரையும் கேட்டு கொண்டு வந்தேன்....

மிதுவின் கிறுக்கல்கள்  வலை பதிவுக்காக எழுதப்பட்ட கதைகள் இவை

Saturday, May 22, 2010

ஒரு சிறுகதை

இவனும் ஒரு மேடை பேச்சாளன்


ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள்.


இவன் ஒருவன் எந்த விதமான மேடை அலங்காரமின்றி பட்ட பகலில் சுடும் வெய்யிலில் புல் தரை முன்பாக உள்ள உயரமான கல் மதில் குத்தி ஒன்றிலிருந்து காட்டமாக பேசி கொண்டிருக்கிறான் . நீண்ட நேரம் பேசி இருப்பான் போலும் . பேசியதை முடித்து விட்டு சில நேரம் அவகாசம் எடுத்து விட்டு புதிய தொனியில் புதிய விசயத்தை சொல்ல தொடங்குகிறான்.


இவ்வளவு நேரமும் எனது அரசியல் ஞானம் கலந்த பேச்சை கேட்டு கண்டுண்டவர் போல மெளனமாக இருக்கும் உங்களின் ஆர்வம் புரிகிறது. எனக்கு எப்படி இந்த அரசியல் சாணக்கியம் கிடைத்தது என்ற கதை சுவராசியமானது.யாருக்கும் சொல்லாதாது இது .இன்று சொல்லுகிறேன் உங்களுக்கு.

இந்த ஊரை தாண்டி இருக்கும் வல்லிபுரக்கோவில் அதன் தொடர்ச்சியாக இருக்கின்ற மணல் திட்டுக்கள் உடன் நீண்ட பாலை வனம் போல இருக்கின்ற பகுதி ,பொட்டல் காடு நீண்ட கால பயிரிடப்படாத வயல்கள் உங்களுக்கு தெரிந்தவை ..இவற்றை தெரியாதவர்கள் இவ்வூர் வாசிகளாக நிச்சயமாக இருக்க மாட்டீர்கள் .,..இந்த பகுதியில் பெரிய ஒரு அரச இராச்சியத்தின் தலை நகரம் இருந்தது என்று தெரியாதவர்கள் ..எழுத்து கூட்டி வாசிக்க முடியாதவர்கள் தான் அப்படி இருப்பீர்கள்..

திருவிழா காலம் அல்லது ஏதும் விசேசமான நாட்களில் தான் அப்பகுதிக்கு சென்று இருப்பீர்கள் , நான் இந்த நாட்கள் தவிர்ந்த நாட்களிலும் உலாவுவதுண்டு .இந்த பிரதேசத்தின் தனிமை அமைதி ஏகாந்தம் நடுநிசி இரவு நேரத்தில் கூட இருக்காது
ஆக்களுடன் வாழும் போது முட்டி மோதலினால் ஏற்படும் மன இறுக்கத்தை தவிர்க்க அடிக்கடி இங்கு செல்வதுண்டு.

அப்பகுதியிலிருந்து ஊரை பார்க்கும் போது ஊர் மூச்சு முட்டி தவித்து கொண்டிருப்பது போல் மாதிரியான உணர்வு ஏற்படும் . தூரத்தில் தெரியும் மணல் திட்டுகளை தாண்டி வானத்தை தொட்டு கொண்டிருக்கின்ற சாடையாக நீலமாக தெரிகின்ற கடல் தெரியும் . காற்றின் வீச்சின் ஏற்ற தாழ்வுக்கு ஏற்ப கடல் அலை எழுப்பும் சத்தம் அப்ப அப்ப கேட்டும் கேட்காமால் போகும் .தூரத்தில் சில கட்டாகாலி மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.எப்பாவது இருந்து அந்த பிரதேசத்தின் அண்டிய றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கும் சிலவேளை அதுவும் கேட்காது.

அந்த பிரதேசத்தில் உலாவும் போது நானே அவற்றுக்கு எல்லாம் ராஜா மந்திரி என்று நினைத்து கொள்ளும் போது ஒரு நாள் நீண்ட சடை முடி தாடியுடன் அமைந்த சாமியார் போன்ற தோற்றமுடைய ஒருவர் அந்த பொட்டல் காட்டில் உள்ள கொடி செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் .சில வேளை கேள்வி கேட்பவர் மாதிரி இருக்கும் . சிலவேளை பதில் சொல்லுகிறவர் மாதிரி இருக்கும்.ஏதோ பைத்தியமாய் இருக்கும் என்று நினைத்து கொண்டு அவரை தாண்டும் போது மெளனமாக செல்வேன் . அவரும் அத்தருணத்தில் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு செடி கொடியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு மெளனமாகி விடுவார்.இப்படி மெளன அறிமுக பரிமாற்றம் இருவரிடமும் பல காலமாக நடந்தேறியது.

.ஒரு முறை இப்படி இவரை தாண்டி செல்லும் போது மகனே என்று அசரீரி போல் என அழைத்து நிறுத்தி என்னுடன் பேச்சு கொடுக்க தொடங்கினார் . நானும் மிக பயத்துடனும் பவ்வியத்துடனும் அளவிளாவா தயாரானேன்.உன்னை ப்பார்த்தால் படித்தவன் போல் தோன்றுகிறது ...இந்த செடி பற்றி தெரியுமா என கேட்டார் .வாயை கொடுத்து வம்பை வளப்பான் என நினைத்து கொண்டு பதில் கொடுக்க வாயை திறந்த வாயை மறுத்தான் கொடுத்து மூடி கொண்டேன்.என்னிடம் எதுவும் நீண்ட நேரம் பதில் வராத நிலையில் இவ்வளவு காலமும் எனக்கு சொல்ல இருந்ததை மெளனத்துக்குள் வைத்து விட்டு இப்ப எல்லாம் சேர்த்து வைத்ததை சொன்ன மாதிரி மடை திறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கி விட்டார்.

இந்த செடியை பற்றி யாருக்கும் சொல்லுவதில்லை ..அதை தெரிந்து கொள்ளுவதுக்கு உனக்கு இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது ..இந்த செடியின் விதை இருக்கிறதே உன்னால் காலத்தை வைத்து கணிக்க முடியாத வயதை உடையது .சில காலங்களில் தான் இது தோன்றும் சில காலங்களில் மண்ணில் அடி யில் உறங்கு நிலையில் இருக்கும் ..இது தோன்றும் பொழுது எனக்கு இருக்கும் அனுமாஷ்ய சக்தியினால் அறிந்து இங்கு வந்து இதனுடன் வந்து பேச்சு கொடுப்பேன் .இதன் தாவர பெயர் இது . இதன் தாவரபெயரின் சூத்திரம் இது என்று அடுக்கி கொண்டு சொல்லிக்கொண்டு போனார் .பைத்தியம் போல் இருக்கும் இந்த சாமியாரிடம் அஞ்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானம் தெரிந்து இருக்கிறதே என்று அதிர்ச்சியுற்றாலும் அவர் கூறிய அந்த செடி காஞ்சிரோண்டி வகை செடி .அதன் இலையை எடுத்து சிறு வயதில் யாருக்கும் விளையாட்டுக்கு தேய்த்து விடுவதுண்டு . அப்படி தேய்த்ததனால் ஏற்படும் எரிச்சல் கடி அடங்க நீண்ட நேரம் எடுக்கும் ...
அதனால் நம்பிக்கையற்று அவரை முழு பைத்தியமே என்னுள் தீர்மானித்து கொண்டு எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டு அகல முடியமோ அவ்வளவு விரைவாக அகன்று விட்டேன்.


எப்பவும் போல அப்பப்ப அங்கு உலாவுவேன் .ஆனால் அந்த சாமியரை இப்ப கன காலம் காணவில்லை.எங்கு சென்றார் என்று என்னுள் ஒரு ஏக்கம் இருக்கும்..சிலவேளை அவரின் அசரீரி குரல் அங்கு கேட்பது போல் எனக்கு பிரமை தோன்றும் .சில வேளை திரும்பியே பார்த்து விடுவேன் .ஒன்றுமே இருக்காது அவ் விடத்தில் வெறும் கட்டாக்காலி மாடுகள் தான் மேய்ந்து கொண்டிருக்கும் .அவர் கதைக்கும் அந்த காய்ஞ்சோண்டி மரச்செடியை கூட காணவில்லை .அதை சூழ பல புதர் செடிகள் முளைத்து விட்டன.ஒரு நாள் பெளணர்மி அன்று அவ்விடத்தில் உலாவும் போது அந்த செடி தெரிந்தது .என்னையறியாமால் அதை நோக்கி சென்றேன். அது தீடிரென்று அரையளவுக்கு உயர்ந்தமாதிரி இருந்தது .அதன் இரு பக்கமும் கிளைத்து நிற்க்கும் இலைகள் கைகள் போல மாறி என்னை நோக்கி வா வா என்று அழைப்பது போல் இருந்தது .அதில் ஒரு இலை குத்தன கிளம்பி மேல் பக்கம் அசைந்து தலை போல காட்சி அளித்தது.இலையின் நடுவிலுள்ள காம்பு திறந்து மூடியது வாய் விட்டு சிரிப்பது போல் இருந்தது .நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது .என்னை அறியாமால் எனக்குள் ஒரு ஆனந்தம் ஏன் என்று தெரியவில்லை .எனக்கு தீடிரென்று தொடவேண்டும் என்று உணர்வு .உடனே அருகில் போய் இலையை வருடினேன்.

அப்போது தீடிரென்று சத்தம் மட்டும் தான் கேட்டது எனது உடல் கால் பகுதியில் தொடங்கி மெல்ல மெல்ல அருவமாக மாறி கொண்டிருந்தது.அதே நேரம் அந்த பிரதேசத்தின் சீதோஸ்ண நிலை மாறியது .தீடிரென்று ஒரு வித மணம் வீசியது .நாங்கள் சொல்லும் நறுமணத்துக்கு மேலான அந்த நேரத்தில் மட்டுமே உணரக்கூடியதான வாழ் நாளில் நான் நுகர்ந்திராத ஆனந்தம் தரக்கூடிய மணமாய் இருந்தது .. கோட்டைகள் கொத்தளங்கள் ,குதிரை தடம் தெரியும் பெரும் வீதிகளுடன் அங்கங்கு நெருப்பு பந்தங்கள் எங்கள் உலகத்து மேர்க்கூரி வெளிச்சத்தின் மேலான வெளிச்ச செலுத்தி கொண்டிருக்கின்ற இடமாக மாறி கொண்டிருந்தது. ..என்னில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கின்றன ஆனால் ..நானோ அருவமான நிலையில்

அங்கு ஆவி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன் ..தீடிரென்று ஒரு வித நக்கல் சிரிப்புடன் ஒரு குரல் கேட்டது . மகனே நீ இங்கு வருவாய் எனக்கு தெரியும் என்ற படி ...கேட்ட குரலாக இருக்கிறதே திரும்பி பார்த்தால் அந்த சாமியார் தான். ஆனால் வித்தியாசமாய் இருந்தார் .கொஞ்சம் இளமை ததும்பினதுமாக இருந்தார்
உடை அலங்காரமும் தலை அலங்கராமும் வித்தியாசமாய் இருந்தார் ,சிரிக்கும் போது தெரியும் பற்களின் அமைப்பும் மட்டும மாற வில்லை.

வா மகனே நல்ல நேரத்தில் தான் இங்கு வந்திருக்கிறாய் .. எங்கு நிற்கிறாய் தெரியுமா? நீ காலத்தை கடந்து
இறந்த காலத்துக்கு வந்திருக்கிறாய்

.உன்னுடைய சரித்திர ஆசிரியர்கள் சொல்லி தந்து போல் இங்கு இல்லை என இங்கு இருக்கும் சிறிது நேரத்தில் உணர்வாய் ..

.அவரே பேசி கொண்டு இருந்தார் .

அதோ பார் வெள்ளை இனத்தவரும் கடும் கறுத்த இனத்தவரும் சப்பை மூக்கு உடைய அமைப்புடையோரும் மிக கட்டை இனத்தவரும் அந்த பாய் மரக் கப்பலில் வந்து கரை ஏறி
கொண்டிருக்கிறார்களே ஏன் தெரியுமா?

.இந்த நாட்டின் அரசியல் பொருளாதார விற்பன்னர்கள் சேர்ந்து இன்று மாலை கருத்தரங்கு வைக்கிறார்கள் அதை கேட்க தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்

அந்த அரசியல் கருத்தரங்கத்தில் அருவமாக நான் . அவர்களின் உரை விளங்குவது கஸ்டமாக இருந்தது. நாம் பேசும் தமிழாக இல்லாமால் கமா ,கேள்விக்குறி முற்று புள்ளியுடன் இருக்கும் எழுத்து தமிழ் போல இருந்தது ..ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தது ..பிறகு இலகுவாக எனது மூளை யின் தினுசுக்களுக்களுள் அந்த உரைகள் அத்தியாயங்களாக மாறி நீண்ட பக்கங்களுடன் பெரிய புத்தகமாகவே சேமிக்க பட்டன.எனக்கு என்னவோ இந்த அரசியல் அறிவை எல்லாம் உடனடியாக எனது காலத்துக்கு சென்று பிரயோகிக்கவேண்டும் போல் இருந்தது.
கெஞ்சிய குரலில் கேட்டேன் எப்படி எனது காலத்துக்கு செல்லுவதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று சாமியாரை நோக்கி ...சாமியார் மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு இயல் நிலையை கடந்து காலம் கடந்து வந்தவர் திரும்பி சென்றது நடந்ததில்லை அது பல சிக்கல்களை தரும் என்பதால்.

எது எப்படியோ நான் அபாயத்தை எதிர் கொண்டு உனக்கு திரும்பி செல்லுகின்ற இரகசியத்தை சொல்லி தருகிறேன் அதன் படி செய் என்றார்.

அதோ குளம் மாதிரி தெரிகிறதே அதன் அருகில் இருக்கும் அருகில் இருக்கும் மரத்தில் பழம் மாதிரி இருக்கிறதை கடித்து துப்பு காலம் கடந்து செல்வாய் என்றார் .அவசரமாய் ஓடி அவர் சொன்னது போல செய்தேன் ..இப்ப அந்த பொட்டல் வெளியில் நான் மெல்ல மெல்ல தலையிலிருந்து காலை நோக்கி அருவத்திலிருந்து உருவமாக மாறி கொண்டு அரை நினைவுடன் மயங்கி இருக்கிறேன் . தூரத்தில் றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கிறது.

இவன் இங்கு நீட்டி முழுங்கி முழு அரசியல்வாதி மாதிரி பேசி கொண்டிருப்பதை பார்த்த றோட்டால் போன இவனது உறவுக்கார வயது போன மனிசி தன்னுக்குள் புலம்பி கொண்டு சென்றது...என்ன படிச்ச பொடியன் இப்படி பைத்தியகாரனாய் மாறி தன் நிலை தெரியாமால் பேசி கொண்டு திரியுது .என்ன இருந்தாலும் அவரவர் விதியை மார்த்த முடியுமே என்றபடி

இவன் இப்பவும் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறான் .ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பேசி கொண்டிருக்கும் கல் அத்திவார மேடைக்கு முன்னுள்ள புல் வெளியில் இவ்வளவு நேரமும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சிதறி வேறு பக்கம் பார்த்து கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன. நன்றி-மிது

Sunday, March 28, 2010

அவன் கோமாவில்

அவன் கோமாவில் என்று அறிந்தது இப்போ தான் ,ஆனால் ஒரு வருடமாக இருக்கிறானாம் ...அதை ஒரு செய்தியாக மட்டும் கேட்டு விட்டு செல்லமுடியாமல் என்னுள் ஏதோ...இன்னும்...

.அவனை எனக்கு பாலியல் காலத்திலிருந்தே தெரியும் ......என்ன பாலியல் காலம் ...மீசை அரும்பி குரல் தடிக்கும் காலத்துக்கு முன்பே தெரியும்....ஓடிப் பிடித்து ...கல்லு குத்தி அடிச்சு பிடிச்சு ...கிந்தி தொட்டு ...என...விளையாடிய காலத்திலிருந்தே தெரியும் ...எங்களை போல இருக்கும் சராசரிகளை விட ....கொஞ்சம் ...வசதி ....கொஞ்சம் ....சொத்தின் செழிப்பு அவனில் தெரியும் .. அடிக்கடி மாற்றும் டெரிலின் சேட்டும் .....அந்த சேட்டு பொக்கற்றுக்குள்ளை தெரியும் பொக்கற் மணியும் .....அதாவது ...எங்களுக்கு ...சில்லறைகள் கிடைப்பதே கனவுகளாக இருக்கும் போது ....அவனது பொக்கற்றுக்குள் ...தினமும் ...அலங்கரித்த படி இருக்கும் .....வித விதமான கலரில் தெரியும் ...நிஜ ரூபாய் நோட்டுக்கள்...எங்களையும் சில நேரத்தில் எட்டி பார்க்கும்.......

எங்களை போல இருக்கும் ...பஞ்ச பரதேசிகளுக்கு . காணும் நேரத்தில்...தேவைபடும் நேரத்தில் ...அதை கொண்டு அவன் செலவழிக்க தவறுவதில்லை...அள்ள அள்ள குறையாத செல்வம் இருப்பதால் .. அப்படி செலவழிக்கிறான் போலை என்று சிலர் கூறலாம்....அதுக்கும் ஒரு மனம் வேணுமே ...அது அவனுடமிருந்தது ...எந்த விதமான..மேட்டு குடி மனோபாவம் இன்றி சக மாணவர்களிடம் மிகுந்த நட்பாக இருந்தான்.....வகுப்பு தோழன் எல்லாரையும் நண்பன் என்று சொல்ல முடியுமா .. அல்லது நண்பனை எல்லாம் வகுப்பு தோழன் என்று சொல்லமுடியுமா...என்ற ஆராய்ச்சி எல்லாம் விட்டு விட்டு பார்த்தால்....என்னை அடிக்கடி காணுகின்ற அல்லது காண விரும்புகின்ற ...என்னுடன் சுக துக்கங்கள் உலக நடப்புகளை பகிர்ந்து கொள்கிறவனாகவாக இருந்தான்.....இதனால் இவனை எனது நண்பன் என்ற வரைக்குள் உட்படுத்தலாம் ..சில வேளை உட்படுத்த முடியாது.....காரணங்கள் பல.....அதை இப்ப விடுவம்

இவனது தகப்பனார்...புகழ் பெற்ற கல்லூரியில்...உயிரியல் ஆசிரியராக இருந்தது மட்டுமன்றி ...யாழ் உள்ள தனியார் டியூட்டரிகளில் புகழ் பெற்ற ஆசிரியராகவும் இருந்தார்......

இவனுக்கு ....சிறு வயதில் இருந்து ....மற்றவர்கள் செய்யாத செய்யமுடியாததை செய்து காட்ட வேண்டும் என்ற வெறி இருந்தது ,,,,,அத்துடன்....மற்றவர்கள் அவனை வித்தியாசபடுத்தி பார்க்கவேண்டும் என்பதற்க்காக மற்றவர்கள் எதிர்பார்க்க முடியாத விசயங்களை கூட..
செய்வான்...

பத்தாம் வகுப்பில் ...உயிரியல் பாடத்தில்....இனப்பெருக்கம் ....என்ற தலைப்பு இருக்கும்......அந்த பாடம் படிப்புக்கும் காலமும் வந்தது....எங்களுக்கும் அரும்பு மீசை முளைத்து ...குரலும் கொஞ்சம் தடித்து .....உடம்பிலும் மனதிலும் ஏதோ வீணை வாசிப்பது போன்று இருக்கும் காலம் ...எதையும் ஆழமாக அறியும் விரும்பும் காலமும்... கூட....

இவனது தகப்பனார் தான் ..படிப்புகிறார்.....இவனும் அந்த வகுப்பில்.....இனப்பெருக்கம் என்று எழுத்தில் கரும்பலகையில் ..எழுதும் ..போதே...வகுப்பில்..சிறிய அடக்க முடியாத மெல்லிய சிரிப்பு ....ஆண் குறி ...பெண்குறி...படம் காட்டி ....விளங்கபடுத்த போக ....விளங்க படுத்த முடியாத,,,மெளன சிரிப்பொலி ...இப்படி இருக்க...மாஸ்டருக்கு ......தேவையில்லாத வேலை தானை...யாருக்கும் இந்த பாடத்தில்..சந்தேகம் இருந்தால் கேளுங்கோ என்று சொல்ல.........அவரது கஸ்ட காலம் இப்படி வரும் என்று கடைசி வரையும்...அவரும் ..நினைத்திருக்க..மாட்டார்.......

யாருக்கும் சந்தேகம் வராதமாதிரி எல்லோரும்..அமசடக்காக..இருக்க..
வன் தான் இனப்பெருக்கத்தில்..சந்தேகம் கேட்டான்...அவனின் தந்தையிடம் தான் கேட்டான் ....அந்த பதினைந்து வயதில் கேட்டான்.......அவனது தந்தையும்....ஆசிரிய,..தர்மத்தை மீற முடியமால்....அவனுக்கு ...எங்கள் முன் இனப்பெருக்கத்தின் இரகசியத்தை அவனது பிறப்பின் இரகசியத்தை விளக்கமளித்தார்....

உயர்தர மாணவர்களுக்காண ஒன்று கூடல் நடைபெறும் பொழுது ...எல்லோரும் ஒரே விதமான உடுப்பு போட்டு இருக்கும் போது ....இவன் ...மட்டும்....நஷனலும் வேட்டியும் உடுத்தி அங்குள்ளவர்களை பரபரப்பாக்கினான்.

இப்படி இவனது சாகசங்கள்..பல...பள்ளி படிப்பு ..முடிந்த பின்...அவன் ..கட்டிட கலை பொறியியல் படிப்புக்காக..பல்கலை கழகம் போனான்..அந்த படிப்பையும் 83 யூலையால்...அவன் முடிக்கவில்லை...

காலங்கள் ....எங்களை...கன காலம் சந்திக்க விடவில்லை....ஒருநாள்....புலத்தில
் ..மீன் கடையில்...மீன் வெட்டி கொண்டு வேலை செய்ய கண்டேன் ..அதே சாகசத்துக்காகவோ என நினைத்தேன்

..அதே பழைய உரிமையில் தான் என்னுடன் கதைத்தான்..

அவனை பற்றி காது வழிசெய்திகள்தான் ...இப்ப சொல்வது....ஒரு பிரபல கவிஞனின் முதல் மனைவியை தனது முதல் மனைவியாக கொண்டான்...இதையும் வித்தியாசமாக முந்தி செய்த மாதிரி நினைத்து செய்தானோ என்னவோ தெரியவில்லை ...இவனது குடும்பத்தினர் ....உறவினர்கள்..நண்பர்கள்..ஒதுக்
கி வைத்தனர்....இவனது வாழ்க்கை முறை மாறியது கடன் குட்டி போட்டது ..கடன் கொடுத்தவர் தொல்லை கொடுத்தனர்..தொல்லையை மறக்க முனைந்தான்..மறக்க வழி தேடினான்.........இப்ப தன்னை மறந்து ...கோமாவில்.....

அவனுக்கு ..70 களில் இருந்த கால நினைவுகள்

மட்டுமே ஞாபகத்தில் சாடையாக இப்ப வருகின்றன....அந்த நாட்கள் ஞாபகங்கள் இனிமையானவை தான் ...என்றாலும் பாவம் அவனுக்கு அவை மட்டுமே வருவது பரிதாபம்

அவனை பார்க்க சென்றேன்
.
.எமது உருவங்கள் அந்த காலம் போல இல்லாததால் ...என்னையே ..பரக்க பரக்க பார்க்கிறான்.....அடையாளம் தெரியாமால்....

புதுப்படம் பார்க்க போனதுக்கு எனக்கு செருப்பாலை அடிக்கோணும்

சும்மா இருக்கமாட்டாமால்...எனக்கு இன்றைக்கு முதல் நாளே தசவதாரம் படம் பார்க்க வெளிக்கிட்ட் எனக்கு செருப்பாலை அடிச்சால் மட்டும் காணாது.இன்னும் என்ன என்ன கேடு கெட்டதாலை எல்லாத்தாலையும் அடிக்கோணும் ....எனக்கு உது வேணும் ...உதுக்கு மேலையும் வேணும் ...

தியேட்டருக்கு என்ன இருந்தாலும் அரை மணித்தியாலம் முன்னர் போய் விட்டன்.அந்த தியேட்டர் தொகுதியில் உள்ள டிக்கட் கவுண்டரில் போய் அதிலை இருந்த வெள்ளைக்கார பெட்டை இடம் கேட்டன்.உதுக்களை தமிழ் படம் ஒன்று ஓடுதல்லோ...அதுக்கு ஒரு டிக்கட் தா பிள்ளை என்று ...தமிழில் இல்லை ..அரை குறை ஆங்கிலத்தில் தான் கேட்டன்..பிள்ளை சின்ன சிரிப்போடை என்னை பார்த்துது ....இந்த காட்சிக்கல்ல அடுத்த காட்சிக்கான டிக்கிட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது..என்று சொல்லி என்ரை மடியலை நெருப்பை வார்த்துது..கனகாலம் தியேட்டரில் படம் பார்த்து அதுவும் கமலின் படம் என்று பார்க்க போனால் இப்படி இடி என்ரை தலையில் விழும் என்று கண்டனே...

கண்டறியாத இண்டர் நெற்றில் சனம் எல்லா புக் பண்ணி போட்டுதாம்.
அதோடை இப்ப வெளி நாட்டில் கண்ட படி டிக்கட்டின் விலையை நிர்ணயிக்க கட்டுபாடு போலை.
டிக்கட்டின் விலையும் ஓரளவு கட்டுபடியாக இருந்தமையால் குஞ்சும் குருமன் எல்லாம் தியேட்டர் உள்ளட்டு நிரம்பி போட்டுதுகள் போலை...இந்த படத்தை பார்க்க என்ன கோதாரியோ தெரியலை ..பஞ்சாபிக்காரன் போறான் ,துருக்கிக்காரன் போறான் , தசவதாரம் ஹிந்தி படம் இரண்டு கிழமை லேட் என்ற படியால் உள்ள வட இந்தியா ஆக்களும் போயினும் அப்ப எனக்கு என்ன என்று டிக்கட் கிடைக்கும்....தமிழ் படத்துக்கு உந்த மரியாதை கிடைக்குதே என்று ஒரு பக்கம் நல்லாதாக நினைச்சாலும் எனக்கு படம் பார்க்க கிடைக்க இல்லை என்ற கவலையோடு கோப்பி க்கடையில் கோப்பி குடிக்க போனான் அசதியில் தூங்கிவிட்டேன்.

உந்த படத்தை மிஸ் பண்ணினாலும் ...அருமையா படம் அருமையான கனவில் அந்த படத்துக்கு தசவாதரம் என்ற பெயரோ தெரியாது அந்த பட விமர்சனத்தை சொல்லட்டோ கேட்கிறியளே,,அதிலையும் கமல் தான் கதாநாயகன் ,,,இந்த படத்திலை இதிலையும் பத்து வேடம் தான்....

17 நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் வடமாரட்சி பிரேதசத்தில கடல் புகுந்த சுனாமியோடு படம் ஆரம்ப மாகிறது .....அந்த சுனாமியோடு கல்லோடு கட்டோடு கட்டப்பட்ட வைணவரும் கரை ஒதுங்கி அதிசயமாக ஒதுங்கி அதிசயமாய உயிர் தப்புகிறார். அந்த வைணவர் பாத்தரத்தில் கமல்.ஒதுங்கிய அவர் வல்லிபுரம் என்ற இடத்தில் ஒரு கிருஸ்ண கோயில் கட்டுகிறார் ...சைவர்கள் அதிகம் வாழும் இடத்தில் இந்த கோயில் அமைந்திருந்தாலும் எந்த எதிர்ப்பும் இல்லாமால் அந்த கோயில் கிருஸ்ண ஆழ்வார் கோயில் என்று அழைக்கபட்டு கொண்டிருந்தது

தீடிரென்று இந்த காலத்துக்கு கதை வந்து சம்பந்தமில்லாமால் லண்டன் வீதிகளில் சண்டை நடக்கிறது அதில் ஈழத்து புலம் பெயர் தமிழ் விஞ்ஞானி கமலுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் ....இதில் இரண்டு புலம் பெயர் இளைஞர் கோஸ்டியினர் ...அந்த இளைஞர் கோஸ்டியின் ஒன்றின் தலைவரும் கமல்தான்.....தீடிரென கதை கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் கதை செல்கிறது அதில் மரிக்காராக கமல் கொச்சிக்கடை முஸ்லிம் தமிழ் நடையில் பேசி அசத்தலாக செய்கிறார்.......மரிக்காரின் நண்பராக தமிழ் கலந்து சிங்களம் பேசும் உபாலியாக அதுவும் கமல் தான்

தீரென்று கதை யாழ்ப்பாணம் செல்கிறது...அதில் கோயில் பிரசங்க நடக்க அதில் பிரசங்கியாக தங்கம்மா அப்பாகுட்டி மாதிரி அந்த வயோதிப மாது வேடத்தில் அதுவும் கமல் தான்

திரைபடத்தில் தீவுப்பகுதியிலிருந்து யாழ்ப்பாண்த்தை படம் பிடித்திருக்கிறார்கள் கடலினூடக யாழ்நகரை பார்க்கிற மாதிரி அழகாக படமாக பட்டிருக்கிறது அழகாகவும் இருக்கிறது .
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் புலம் பெயர் கமிரா கவிஞன் அஜீவனின் திறமை மிக வெளி கொணருப்பட்டிருக்கிறது

இந்த படத்தின் பாடல் கதிர்காம்த்து கந்தா ,,,கதிர்காமத்து கந்தா என்ற பாடலும் ..
கல்லை கண்டால் நாயை காணன் ..நாயை கண்டால் கல்லை காணன் என்ற பாடலும் நன்றாக இருக்கிறது ...மற்ற பாடல்கள் கேட்க கூடியதாக இல்லை

இந்த படத்தின் திரை கதையை கமல் எழுதினாலும் கதை வசனத்தை பாலச்சந்திரன் அவர்கள் மிக நன்றாக எழுதியுள்ளார்

கனவு என்ற படியால் பத்தாவது பாத்திரத்தை இப்படி அமைஞ்சுதோ தெரியவில்லை பதிவர் சின்னக்குட்டியை லண்டனில் வைத்து விஞ்ஞானி கமல் சந்திக்கும் காட்சியில் பேசப்படும் வசனங்கள் அருமையாக உள்ளன....

அந்த சின்னக்குட்டி பாத்திரமும் கமல் தான்

இந்த கனவு படமும் நல்லாய் தான் இருக்கு...இனிமாய் சனம் நெருக்கம் குறைய ஆறுதலாய் தசவதாரம் பார்த்தால் போச்சு

தியேட்டர்களில் வாழ்க்கை நடத்தியவர்கள்

அஞ்ஞானவாசம் முடிந்த சந்தோசம். ஆறு ஏழு வருஷ கால . ஜரோப்பிய நாடொன்றின் குக் கிராமத்தில் அங்கையே கட்டயாம் காலந்தள்ள வேண்டும் என்ற நிலையும் ஒழிந்து எங்கையும் போய் வரலாம் என்ற நிலை வந்த பொழது கனடாவுக்கு விடுமுறைக்கு சென்றேன்.அங்கு எனது தம்பியிடம் மிளகாய் தூளும் கருவேப்பலையும் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட 40 கிலோ மீற்றர் சென்றால் தான் முடியும் என்று சொன்னேன். அப்படி வாழ்ந்த கிராமத்தின் நன்மை தீமைகளை பலதும் பத்தும் கதைத்து கொண்டிருந்த பொழுது கேட்டான் ...தமிழ் படங்கள் தியேட்டரில் பார்க்க வசதி இல்லையா .என்று...

தமிழ் படங்கள் வெளிநாட்டில் தியேட்டரில் ஓடுகிறதா..என்ற அதிசயத்துடன் வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தேன்

இவையள் ஊரிலை தியேட்டர்களிலையே வாழ்க்கை நடத்தியவர்கள்... இவ்வளவு காலமும் வெளிநாட்டு வந்ததுக்கு தியேட்டரிலை படம் பார்க்கவில்லையாம் மிகுந்த பரிதாப உணர்ச்சியுடன் அண்ணணை கூட்டி கொண்டு போய் படம் காட்டுவமே என்று கனடாவில் காட்ட வேண்டிய முக்கிய இடம் போல தன் மனைவியிடம் கூறுவது கேட்டது

இவன் தியேட்டர்களில் வாழ்க்கை நடத்தியவர்கள் என்றும் கூறும் பொழுது இது புகழ்ச்சி அணி வசனமா அல்லது இகழ்ச்சி அணி வசனமா என்று ஆராய்ந்து வெட்கப் பட வைக்கவில்லை.




. சிறு வயதில் இருந்தே திரைக்குள் நம்மளை தேடும் முட்டாள் தனமான அதி கூடிய சினிமா மோகத்தில் யாழில் உள்ள பல தியேட்டர்களில் படம் பார்க்க அலைந்ததை அவன் அப்படி கூறுகிறான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் செய்தது.

ஊரில் எங்களுக்கு கால் நடை தூரத்தில் உள்ள சந்தியில் இரு தியேட்டர்கள் இருந்தன இங்கு தான் எனது திரைபடம் பார்க்கும் சரித்திரம் ஆரம்பமானது , அந்த காலங்களில் திரைபடம் பார்ப்பதும் மாமிச ரொட்டி கடைக்கு சென்று சாப்பிடுவதும் மகா
பஞ்சமா பாதகத்தில் ஒன்றாக கருதுவார்கள்.ஆனால் மற்ற என்னோட்டை ஆக்களுக்கு இல்லாத சுதந்திரத்தை எனது பெற்றோர்கள் தந்த காரணத்தனால் அந்த சிறு வயதிலையே நன்றாக படம் பாரப்பேன் .

மாணவர்களகாக இருப்பவர்கள் தியேட்டரில் கலரியில் இருந்து படம் பார்ப்பதை கெளவரவ குறைச்சலாக கருதுவார்கள்,அடிக்கடி படம் பார்ப்பவர்களுக்கு செக்கன் கிளாஸ் ,பெஸ்ட் கிளாஸ் , றிசெர்வ் பல்கனி என்று டிக்கட் எடுத்து கட்டுபடி ஆகாது என்றுது போக...அந்த வயதில் என்ன வீட்டில் பொக்கற் மணியா தரப் போறார்கள்.

நான் அறிய கலரி டிக்கட் 55 சதமோ 65 சதமாக ஆரம்பத்தில் இருந்தது.இந்தியாவின் கிராமங்களில் இருப்பது போல் முன் வரிசை கலரி தரையோ மணலோ போட்டிருப்பதில்லை ,,ஆனால் பல நூறு மூட்டை பூச்சி வாழ்க்கை நடத்தும் வாங்கு போட்டிருப்பார்கள்.

இந்தியாவில் a சென்டர் b சென்டர் போல யாழ்நகரில் படம் ஓடிய பிறகு இரண்டாம் சுற்று வடமராட்சி உள்ள தியேட்டர்களில் திரையிடுவார்கள். அதற்க்கு பின் தான் மற்ற யாழ் குடா நாட்டின் மற்ற தியேட்டர்களில் திரையிடுவார்கள். அத்தோடு இன்ன இன்ன விநியோகஸ்தரின் கொம்பனி படங்கள் என்ன என்ன தியேட்டரில் ஓடும் என்று அநுமானிக்க கூடியதாயிருக்கும்.

குணரத்தினத்தின் சினிமாஸ் கொம்பனி படங்கள் கொழும்பில் கிங்ஸ்லி கொட்டாச்சேனை , பிளாசா வெள்ளவத்தை , கெப்பிட்டல் போன்ற தியேட்டர்களிலும்
யாழ்ப்பாணத்தில் வெலிங்கடன் ,லிடோ
இந்த தியேட்டர்கள் இப்பவும் இருக்கோ தெரியாது .ஆனால் தினசரி பத்திரிகையின் மூன்றாம் பக்கத்திலும் வானொலி விளம்பரங்களிலும் அந்த காலங்களில் முக்கிய இடத்தை பிடிக்கும்

சிலோன் தியேட்டர் படங்கள் கொழும்பில் செல்லமாகால்,கொட்டாஞ்சேனை நவா கொம்பனித்தெரு

யாழ்ப்பாணத்தில் வின்ஸர் ,ரீகல்

சிலோன் என்டர்ண்மண்ட் தியேட்டர் கொம்பனிபடங்கள்

கொழும்பில் சென்டரல் மருதானை
யாழ் நகரில் ராணி ,மனோகரா

வடமராட்சி உள்ள தியேட்டர்கள்
லக்சிமி ,மஹாத்மா , யோகநாயகி ,றஞ்சனா, சென்றல்,புலோலி சினிமா

சரி என்று சொல்லி கனடாவில் தமிழ் படம் பார்க்க சென்றால் படம் ஒழுங்காய் பார்த்தது என்றா நினைக்கிறீங்கள்

அங்கு படம் பார்க்க வந்தவர்களின் தூசண மழையத்தான் கேட்க முடிந்தது

இதை பார்க்கும் போது அந்த காலம் என்னோடு கலரியில் படம் பார்த்தவர்கள் நாகரிகமாக தெரிந்தார்கள்

தனது ஊருடன் பெயரையும் இணைத்திருக்கும் இலங்கை பிரபலங்கள்

தனது ஊருடன் தனது பெயரையும் இணைத்து இருந்த பிரபலங்களை பற்றிய பதிவு தான் இது.... இதை
ஞாபகமூட்டலாகவும்.... தெரியாதவற்றை பலர் மூலம் தெரிஞ்சு கொள்ளும் நோக்குடனும் இதை நான் தொடக்கி வைக்கிறேன்.

காவலூர் இராசதுரை-ஊர்வாகவற்றுதுறை- எழுத்தாளர்
குப்பிளான்.ஜ.சண்முகம-குப்பிளான் - எழுத்தாளர்

சில்லையூர் செல்வராஜன்--- சில்லாலை- நடிகர், வசனகர்த்தா, வானொலி அறிவிப்பாளர்

செம்பியன் செல்வன்-செம்பியன்பற்று- எழுத்தாளர்திருக்கோவில்
கவியுவன் - திருக்கோவில்- எழுத்தாளர்




தெளிவத்தை யோசப் - தெளிவத்தை- எழுத்தாளர், நாவலியூர் சோமசுந்தர புலவர் - நாவலி- கவிஞர்


நீர்வை பொன்னையன் - நீர்வேலி- எழுத்தாளர்


நெல்லை க.பேரன் -- நெல்லியடி- எழுத்தாளர்

மாத்தளை சோமு- மாத்தளை- எழுத்தாளர்

நெல்லை நடேசன்-நெல்லியடி- எழுத்தாளர்

புலோலியூர் சதாசிவம்-- புலோலி - எழுத்தாளர்.. இவர் புலோலியூர்
இரத்தினவோலோனின் மாமனார்

கரவைக்கிழார்- கரவெட்டி - பண்டிதர், கவிஞர்

கோப்பாய் சிவம் - கோப்பாய் - எழுத்தாளர்


வண்ணை ஆனந்தன்- வண்ணார் பண்ணை .... - அரசியல்வாதி..,பிரபல மேடை பேச்சாளர்

கைதடி பழநி- கைதடி-- தவில் வித்துவான்

உடுப்பிட்டி சிவா- உடுப்பிட்டி.. மூத்த அரசியல்வாதி

காரை சுந்தரம்பிரம்பிள்ளை- காரைநகர்- பேராசிரியர் ,படைப்பாளி

இணுவையூர் சிதம்பரநாதன்- இணுவில்- எழுத்தாளர்




முல்லை சகோதரிகள் -முல்லைத்தீவு பாடகிகள்
.
யாழ் சுதாகர்- யாழ்நகர்- எழுத்தாளர், தமிழ்நாட்டு சூரியனின் எப்எம் இரவு நேர அறிவுப்பாளர்


யாழ்வாணன்- யாழ்நகர்- எழுத்தாளர்யாழ் நங்கை- யாழ் நகர்-எழுத்தாளர்

கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம்- கோப்பாய்- மூத்த அரசியல்வாதி

ஆவரங்கால் சின்னத்துரை -ஆவரங்கால்- அரசியல்வாதி

வரணியூரான் கணேசபிள்ளை- வரணி- வானொலி நாடக ஆசிரியர்

திக்குவல்லை கமால்-திக்குவல்லை எழுத்தாளர்
-

அளவெட்டி பத்மனாதன்- அளவெட்டி- நாதஸ்வர வித்துவான்

மறவன்புலவு சச்சிதானந்தம் -மறவன் புலவு - அறிஞர்

புலோலியூர் இரத்தினவேலோன்.- புலோலி -எழுத்தாளர்- இவர் எனது வகுப்பு தோழன்

புதுவை இரத்தினதுரை- புத்தூர் -படைப்பாளி,

வேலைணையூர் சுரேஷ்
இவர் தற்சமயம் வன்னியில்(கிளிநொச்சி) இருக்கிறார். கவிதைகள் எழுதி தொகுப்பாகுவும் வந்துள்ளன. பாடல்களாகவும் இசைப்பேழைகளில் வந்துள்ளன.- வேலணை


ஏழாலை ஜெனகமகள் சிவஞானம் -- எழுத்தாளர் --- ஏழாலை

மணலாறு விஜயன் - எழுத்தாளர்- மணலாறு

வவுனியா திலீபன் -எழுத்தாளர்- - வவுனியா

முல்லை கோணேஸ் -எழுத்தாளர் -முல்லைத்தீவு

முல்லை கமல் -எழுத்தாளர் -முல்லைத்தீவு

இளவாலை விஜயேந்திரன் -இளவாலை - கவிஞர்


பூநகரி மரியதாஸ், கவிஞர் -பூநகரி

திக்கவயல் தர்மு, எழுத்தாளர், பத்திரிகையாளர் - திக்கவயல்

திக்குவல்லை கமால், கவிஞர் -திக்குவல்லை

அமிர்தகழியான், எழுத்தாளர் - அமிர்தகழி

நவாலியூர் சச்சிதானந்தன், எழுத்தாளர் - நவாலி

'இளவாலை அமுது' -.எழுத்தாளர், கவிஞர் -இளவாலை

மாதகல் மயில்வாகனப் புலவர்:- இவர் ஒல்லாந்தர் கேட்டுக் கொண்டதன் பேரில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலைத் தந்தவர்.// - மாதகல்






வேலணை வேணியன் -தற்போது மேலக மக்கள் முன்னணிப் பிரமுகர்-
வேலணை

இணுவில் வீரமணிஐயர் - பல்துறைக்கலைஞர் - இணுவில்

கோண்டாவில் பாலகிருஸ்ணன் - நாதஸ்வரக்கலைஞர்- கோண்டாவில்

யாழ் சீலன் - இசைக்கலைஞர்- யாழ்நகர்

யாழ் ரமணன் - இசைக்கலைஞர்-யாழ்நகர்

நாச்சிமார்கோவிலடி இராஜன்- வில்லிசைக்கலைஞர் -
நாச்சிமார்கோவிலடி

திருக்)கோவிலூர் செல்வராஜன் எழுத்தாளர்.- திருக்கோவில்
கல்லாறு சதீஸ் - எழுத்தாளர் - கல்லாறு

வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - நாடகக்கலைஞர்-- வரணி

தாமரைத்தீவான் இராஜேந்திரம் - கவிஞர்

நிலா(வெளி) தமிழின் தாசன் - நிலா வெளி
கவிஞர்

வவுனியன் - கவிஞர் - வவுனியா

அடடா சின்னக்குட்டி அவர்களே
சிரமப்பட்டுத்தான் இவற்றைச் சேர்த்திருக்க முடியும்
இந்தத் தலை முறையினருக்கு இது ஒரு அடிச்சுவடு
பாராட்டுக்கள்

ஆமாம் உங்கள் ஊர் எது?
அதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே!
SP.VR.சுப்பைய
19 டிசம்பர், 2006 இரவு 19:52 கொழுவி said...
புதுவையார் புத்தூரைச் சேர்ந்தவர்.
19 டிசம்பர், 2006 இரவு 19:56 சின்னக்குட்டி said...
வணக்கம....சுப்பையா அவர்கட்கு.... உங்கள் வருகைக்கும்.. பாராட்டுக்கும் கருத்துக்கும்

//ஆமாம் உங்கள் ஊர் எது?
அதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே//

நான் ஊர் பெயரோட இருக்கிற பிரபலம் இல்லைங்க.. அதோடை. இப்பொழுது ஊரற்ற வழிபோக்கன்,நாடோடி, ஒரு அகத

19 டிசம்பர், 2006 இரவு 20:07 சின்னக்குட்டி said...
வணக்கம் கொழுவி.. தவறை சுட்டி காட்டியதற்க்கு நன்ற

19 டிசம்பர், 2006 இரவு 20:09 Chandravathanaa said...
விடுபட்டவைகளில் என் நினைவில் வந்தவை

வேலைணையூர் சுரேஷ்
இவர் தற்சமயம் வன்னியில்(கிளிநொச்சி) இருக்கிறார். கவிதைகள் எழுதி தொகுப்பாகுவும் வந்துள்ளன. பாடல்களாகவும் இசைப்பேழைகளில் வந்துள்ளன.

ஏழாலை ஜெனகமகள் சிவஞானம

19 டிசம்பர், 2006 இரவு 20:43 சுந்தரி said...
காசியானந்தன் எந்த ஊருங்
19 டிசம்பர், 2006 இரவு 20:53 சின்னக்குட்டி said...
வணக்கம்...சந்திரவதனா..வருகைக்க
ும்...... மேலதிக தகவலுக்கும்...நன்றிகள

19 டிசம்பர், 2006 இரவு 21:02 சின்னக்குட்டி said...
வணக்கம் சுந்தரி... காசி ஆனந்தன்.... காத்தமுத்து சிவானந்தன் என்ற முழு பெயரை அப்படி சுருக்கி கொண்டார்....

காசி ஆனந்தன்....மட்டகளப்பைச் சேர்ந்தவர்.......பாலுமகேந்திராவ
ன் ஊருங்

19 டிசம்பர், 2006 இரவு 21:03 Anonymous said...
மணலாறு விஜயன

19 டிசம்பர், 2006 இரவு 21:35 சின்னக்குட்டி said...
வணக்கம்... அநோமதய நண்பருக்கு... உங்கள் தகவலுக்கு நன்றி.... புதியவர்களை எனக்கு தெரியாததால் உறுதிபடுத்த முடியாமிலிருக்கிறது....... என்ன விததித்தில் பிரபலம் என குறிப்பிட்டீங்கள் என்றால் உதவியாய் இருக்கும்.....

19 டிசம்பர், 2006 இரவு 21:46 வெற்றி said...
சின்னக்குட்டி அண்ணை,
நல்ல தகவல்கள். மிக்க நன்றி.
ஆட்சேபனை இல்லையெனின் ஒரு சின்னத் திருத்தம்.

/* அளவெட்டி பத்மனாதன்- அளவெட்டி- தவில் வித்துவான் */

பத்மநாதன் தவில் வித்துவான் அல்ல. நாதஸ்வர மேதை.

நன்றி.

அன்புடன்
வெற்ற

19 டிசம்பர், 2006 இரவு 22:10 வசந்தன்(Vasanthan) said...
சின்னக்குட்டியர்,
நல்ல தொகுப்பு.
காசியானந்தன் அமிர்தகழியைச் சேர்ந்தவர். ஆமாம், பாலுமகேந்திராவும் அதே.
புதுவை புத்தூரைக்குறிப்பதே.
மணலாறு விஜயனை ஓர் எழுத்தாளர் என்ற வகைக்குள் அடக்கலாம்.
அதேபோல் வவுனியா திலீபன் என்றும் ஒருவருண்டு.
முல்லை கமல் என்றொரு கவிஞரும் வன்னியில் உள்ளார்.
மேலும் முல்லை கோணேஸ் (தற்போது புலத்தில்?) உள்ளார்.
நாடக ஆசிரியர் முல்லைமணியினதும் இடத்துடன் சேர்ந்த புனைபெயரென்று நினைக்கிறேன்.

19 டிசம்பர், 2006 இரவு 22:11 வசந்தன்(Vasanthan) said...
மணலாறு விஜயனின் "வணங்காமண்" என்ற புத்தகம் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியதொரு படைப்பு அல்லது தொகுப்பு.
19 டிசம்பர், 2006 இரவு 22:13 சின்னக்குட்டி said...
.//பத்மநாதன் தவில் வித்துவான் அல்ல. நாதஸ்வர மேதை//

.வணக்கம்..வெற்றி வருகைக்கு நன்றி... ஓம் நீங்கள் சொல்வது சரி.... பிழை திருத்ததுக்கு நன்றிகள்..

19 டிசம்பர், 2006 இரவு 23:01 சின்னக்குட்டி said...
மணலாறு விஜயன் - எழுத்தாளர்
வவுனியா திலீபன் -எழுத்தாளர்
முல்லை கமல் -எழுத்தாளர்
முல்லை கோணேஸ் -எழுத்தாளர்
வணக்கம் வசந்தன்...வருகைக்கு நன்றிகள்....மேலும் விவரங்களை தந்து இந்த பதிவை மெரு கூட்டியதுக்கும் நன்றிகள

19 டிசம்பர், 2006 இரவு 23:12 டிசே தமிழன் said...
இளவாலை விஜயேந்திரன்?
திருக்கோயில் கவியுவன் ?(பெயர் சரியா, சரிநிகரில் அருமையான சிறுகதைகள் எழுதியவர்)

19 டிசம்பர், 2006 இரவு 23:37 சின்னக்குட்டி said...
இளவாலை விஜயேந்திரன் -இளவாலை - நாடக நடிகர்.. திரைபடநடிகர்....தமிழக திரைபடங்களிலும் நடித்திருக்கிறார்.... கமலின் புன்னகை மன்னன் படத்தில் பார்த்ததாக ஞாபகம்

வணக்கம்...டிசே வருகைக்கும் .மேலதிக தகவலுக்கும் நன்றிகள

19 டிசம்பர், 2006 இரவு 23:51 கானா பிரபா said...
கேரளப்பிரபலங்கள் பலர் இப்படி ஊர்ப் பெயரோடு இருப்பார்கள், நம்மூர்க்காரரையும் அணிவகுத்தது சிறப்ப

20 டிசம்பர், 2006 மதியம் 00:00 சின்னக்குட்டி said...
//கேரளப்பிரபலங்கள் பலர் இப்படி ஊர்ப் பெயரோடு இருப்பார்கள்//

வணக்கம் பிரபா... உண்மை தான்...அடூர் கோபலகிருஸ்ணன் .. அப்படி இப்படி ... என்று....

வருகைக்கும் கருத்துக்கும்...நன்றிகள

20 டிசம்பர், 2006 மதியம் 00:11 சுந்தரி said...
நன்றி சின்னக்குட்டி அவர்களே
எனக்கு A9 ஏரம்புவின் கதைகள் நன்கு பிடிக்கும். இப்பவும் வன்னியில் கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.உண்
ையில் அவர் பண்டத்தரிபப்பு பிரசாந்தன். A9 ஏரம்பு அவரின் புனைபெயராயிருக்குமோ?

20 டிசம்பர், 2006 மாலை 04:56 tamilnathy said...
நல்ல முயற்சி மற்றும் தொகுப்பு. தகவல்களுக்கு நன்றி.

20 டிசம்பர், 2006 மாலை 06:39 Kanags said...
சின்னக்குட்டி, இது மிகவும் நீண்ட பட்டியலாக வளரக்கூடியது. நல்ல முயற்சி.

இவர்களையும் சேர்த்து விடுங்கள்:

பூநகரி மரியதாஸ், கவிஞர்
திக்கவயல் தர்மு, எழுத்தாளர், பத்திரிகையாளர்
திக்குவல்லை கமால், கவிஞர்
அமிர்தகழியான், எழுத்தாளர்
நவாலியூர் சச்சிதானந்தன், எழுத்தாளர்

20 டிசம்பர், 2006 இரவு 11:14 வசந்தன்(Vasanthan) said...
ஏ-9 ஏரம்பு எண்டது ஒரு புனைபெயர்தான்.
நிற்க, கோணசக் கவிராயர் எண்ட பேரில ஒருத்தர் கவிதை எழுதினவர், ஆனா அவருக்கும் கோணமலைக்கும் ஒரு தொடர்புமில்லை.
______________________
'இளவாலை அமுது' எண்டவரையும் சேர்க்கலாம்.
எழுத்தாளர், கவிஞர்.
சுவாமி ஞானப்பிரகாசரைப் பற்றின வாழ்க்கை வரலாற்றை எழுதித் தந்தவர்.
கவிஞர் 'வேலணை வேணியனை'யும் (தற்போது மேலக மக்கள் முன்னணிப் பிரமுகர்) சேர்க்கலாம்.

20 டிசம்பர், 2006 இரவு 11:18 சின்னக்குட்டி said...
வணக்கம் தமிழ் நதி.... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள

20 டிசம்பர், 2006 மதியம் 12:01 சின்னக்குட்டி said...
வணக்கம்...கனக்ஸ்.. அவர்கட்கு.... உங்கள் வருகைக்கும்... மேலதிக தகவலுக்கு நன்றிகள்..

சந்திரவதனா,வசந்தன், டிசே,கனக்ஸ்... தந்த மேலதிக தகவல்களை... இந்த பதிவின் உள்ளடகத்திலை சேர்த்து விட்டேன்..
20 டிசம்பர், 2006 மதியம் 12:08 டிசே தமிழன் said...
சின்னக்குட்டி நீங்கள் குறிப்பிடுவது சிலோன் விஜயேந்திரன் என்று நினைக்கின்றேன். திரைப்பட நடிகர்;தமிழ்நாட்டில் நீண்டகாலம் வசித்தவர். ஏதோ ஒரு தீ விபத்தில் அவர் இறந்துபோனதாயும் நினைவு.
.....
நான் குறிப்பிடுவது கவிஞர் இளவாலை விஜயேந்திரன். அருமையான கவிதைகள் எழுதுபவர். 'நிறமற்றுப்போன கனவுகள்' அவரது கவிதைத் தொகுப்பின் பெயர். தற்சமயம் நோர்வேயில் வசிக்கின்றார்.

20 டிசம்பர், 2006 இரவு 15:47 சின்னக்குட்டி said...
//சின்னக்குட்டி நீங்கள் குறிப்பிடுவது சிலோன் விஜயேந்திரன் என்று நினைக்கின்றேன். திரைப்பட நடிகர்//

வணக்கம்...டிசே...நீங்கள் நினைப்பது போல் சிலோன் விஜேந்திரனையே இவர் என நினைத்து விட்டேன்.

.
தவறை உடனடியாக சுட்டிக்காட்டி.. மேலதிக தகவல்களை வழங்கியதுக்கு நன்றிகள்....பதிவில் திருத்தி விடுகிறேன்
.

20 டிசம்பர், 2006 இரவு 18:12 கொழுவி said...
கோணேச கவிராயர் என்ற பெயரில் எழுதியவர் புதுவை இரத்தின துரை.

உயிரில் தீ மூட்டி உணர்வுகளின் நெய்யுற்றி
அயலை ஒளியுட்டும் அகல்.

இது என்ர நினைவில் நின்ற கொணேச கவிராயரின் கவித்துளி.

கொழும்பு கொழுவ

20 டிசம்பர், 2006 இரவு 19:14 சின்னக்குட்டி said...
நன்றிகள்...கொழுவி. மேலதிக தகவலுக்கு

//கொழும்பு கொழுவி

ஹாஹா..இந்த பெயரை சேர்க்கமாலா .. இல்லையா... என்று மத்தியகுழு கூடி விரைவில் முடிவெடுக்கும

20 டிசம்பர், 2006 இரவு 19:30 வெற்றி said...
சின்னக்குட்டி அண்ணை,
எனது ஊரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்ததை வன்மையகக் கண்டிக்கிறேன். சும்மா சொன்னனான். கோவிக்காதைங்கோ.

எனது ஊரைச் சேர்ந்த பல அறிஞர்கள் பல நூல்களைத் தந்துள்ளார்கள். குறிப்பாக ஐரோப்பியர்களின் கால கட்டத்தில்.

மாதகல் மயில்வாகனப் புலவர்:- இவர் ஒல்லாந்தர் கேட்டுக் கொண்டதன் பேரில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலைத் தந்தவர்.

20 டிசம்பர், 2006 இரவு 19:39 சின்னக்குட்டி said...
மாதகல் மயில்வாகனப் புலவர்:- இவர் ஒல்லாந்தர் கேட்டுக் கொண்டதன் பேரில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலைத் தந்தவர்.// - மாதகல்



வணக்கம்...வெற்றி.. யாழ்ப்பாண வைபமாலையில்...தான் டச்சுக்காரர் அறிமுகபடுத்திய குடாநாட்டுக்கே பிரத்தியகமாக இருந்த தேச வழமைப்பு சட்டத்தையும்... அப்போதிருந்த குடாநாட்டு சாதி அமைப்பு முறையையும் பற்றி விபரமாக இருக்கிறத

20 டிசம்பர், 2006 இரவு 19:50 மலைநாடான் said...
அடடா! சின்னக்குட்டி! என்னப்பா ஒருநாள் உந்தப் பக்கம் எட்டிப்பாக்கேல்ல, அதுக்குள்ள அந்தமாதிரி வெளுத்துக்கட்டுறீர்.
சரி சி எனர பங்குக்கு

இணுவில் வீரமணிஐயர் - பல்துறைக்கலைஞர்
கோண்டாவில் பாலகிருஸ்ணன் - நாதஸ்வரக்கலைஞர்
யாழ் சீலன் - இசைக்கலைஞர்
யாழ் ரமணன் - இசைக்கலைஞர்
நாச்சிமார்கோவிலடி இராஜன்- வில்லிசைக்கலைஞர்
அனலை(தீவு) ஆறு இராஜேந்திரம் - எழுத்தாளர்
(திருக்)கோவிலூர் செல்வராஜன் எழுத்தாளர்.
கல்லாறு சதீஸ் - எழுத்தாளர்
வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - நாடகக்கலைஞர்
தாமரைத்தீவான் இராஜேந்திரம் - கவிஞர்
நிலா(வெளி) தமிழின் தாசன் -
கவிஞர்
வவுனியன் - கவிஞர

20 டிசம்பர், 2006 இரவு 20:25 சின்னக்குட்டி said...

இணுவில் வீரமணிஐயர் - பல்துறைக்கலைஞர்

கோண்டாவில் பாலகிருஸ்ணன் - நாதஸ்வரக்கலைஞர்

யாழ் சீலன் - இசைக்கலைஞர்

யாழ் ரமணன் - இசைக்கலைஞர்

நாச்சிமார்கோவிலடி இராஜன்- வில்லிசைக்கலைஞர்

அனலை(தீவு) ஆறு இராஜேந்திரம் - எழுத்தாளர்
(
திருக்)கோவிலூர் செல்வராஜன் எழுத்தாளர்.
கல்லாறு சதீஸ் - எழுத்தாளர்

வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - நாடகக்கலைஞர்

தாமரைத்தீவான் இராஜேந்திரம் - கவிஞர்

நிலா(வெளி) தமிழின் தாசன் -
கவிஞர்
வவுனியன் - கவிஞர்
வணக்கம் மலைநாடன்... நீங்கள் வந்தால்... ஆரவாராமாய் ஒரு வெடி கொழுத்தலோடு பெயர்களை கொண்டு வருவீர்கள் என்று தெரியும்....நீங்கள் தந்த பெயர்களில் வரணியூரனின் பெயர் ஏற்கனவே சேர்த்திருக்கிறேன்.
..மிக்க நன்றிகள்...பதிவின் உள்ளடகத்தில் சேர்த்து விடுகிறேன்..

மண்டூர் மகேந்திரன் என்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தாக ஞாபகம்.... உங்களுக்கு ஞாபகமிருக்க


20 டிசம்பர், 2006 இரவு 20:39 மலைநாடான் said...
சின்னக்குட்டி!

மிகுந்தஆர்வத்துடன் நீங்கள் முன்னெடுத்திருக்கும் நல்ல முயற்சி. சிரமம் பாராது அகரவரிசையில் பெயர்களைத் தோகுத்துப் போடுங்கள். பிரயோசனமாகவிருக்கும். தவறவிட்ட பெயர்களை யோசிக்கவும் சுலபமாக இருக்கும்.

புலவர் ஈழத்துச் சிவானந்தன் இந்த ஒழுங்கில் சேர்க்க முடியுமா? மத்தியகுழுவிடம் கேளுங்கள்.

மண்டுர் மகேந்திரன் ஞாபகம் இல்லை.

தம்பலகாம் க.வேலாயுதம் -எழுத்தாளர் பத்திரிகையாளர்

ஞாபகம் வந்தால் பின்பு எழுதுகின்றேன்
நன்ற

20 டிசம்பர், 2006 இரவு 20:50 வெற்றி said...
சின்னக்குட்டி அண்ணை,
எங்கை யோகன் அண்ணையைக் காணேலை? அவரும் மலைநாடான் மாதிரி இலங்கை முழுக்க அடிபட்ட காய், தெரியும் தானே! இருந்து பாருங்கோ, அவரும் நல்ல ஒரு பட்டியலோடை வருவர்.

20 டிசம்பர், 2006 இரவு 20:59 சின்னக்குட்டி said...
//சின்னக்குட்டி அண்ணை,
எங்கை யோகன் அண்ணையைக் காணேலை//

வெற்றி.... நானும் தான் தேடறன்....யோகரை...... காண கிடைக்கலை...

யோகர் ...புளக்கர் பீற்றாவுக்கு கொடுத்த கரைச்சலில்... புளக்கரே.. பீற்றாவே வேண்டாம் என்று புது பதிவுக்கு போட்டுது என்ற செய்தி கேள்விபட்டனீங்களே..

யோகன்..பகிடிக்கு கண்டுக்காதையுங்க..

மலை நாடன் மேலதிக தகவலுக்கும்.. ஆலோசனைக்கும் நன்றி...நேரம் கிடைக்கும் போது மறு சீரமைக்கிறேன

20 டிசம்பர், 2006 இரவு 21:50 சுந்தரி said...
சின்னக்குட்டி, வெற்றி
மாதகல் மயில்வாகனப் புலவரும் நல்லூர் சின்னத்தப்பிப் புலவரும் ஏக காலத்துப் புலவர்கள்.கல்வளை அந்தாதி பறாளாய் விநாயர் பள்ளு இயற்றியவர் சின்னத்தம்பிப் புலவர்.

20 டிசம்பர், 2006 இரவு 23:23 சின்னக்குட்டி said...
//மாதகல் மயில்வாகனப் புலவரும் நல்லூர்
சின்னத்தப்பிப் புலவரும் ஏக காலத்துப் புலவர்கள்.கல்வளை அந்தாதி பறாளாய் விநாயர் பள்ளு இயற்றியவர் சின்னத்தம்பிப் புலவர்//


சுந்தரி...தகவல்களுக்கு நன்றிகள
20 டிசம்பர், 2006 இரவு 23:27 விருபா / Viruba said...
சேனையூர் அ.அச்சுதன்
கல்லாறு சதீஷ்
வண்ணை தெய்வம்
அம்பலவன் புவனேந்திரன்
தீவகன்
நோர்வே நக்கீரனார்
வேலணையூர் பொன்னண்ணா
ஈழமுருகதாசன்
பருத்தியூர் பால வயிரவநாதன்
மணி இளவாலை அமுது
மட்டுவில் ஞானகுமாரன்
பாடுமீன் சு.ஸ்ரீகந்தராசா

என்ன தாமதமாக வந்துவிட்டேனா?

21 டிசம்பர், 2006 மதியம் 01:57 Anonymous said...
சின்னக்குட்டியர்!
ஆனானப்பட்ட கொம்பியூட்டர் இஞ்சினியர்மாரெல்லாம் முழிபிதுங்கிவிட்டினம்!! இந்த கொம்யூட்டர் என்று சரியா எழுதக் கூடத் தெரியாத ;நான் எம்மாத்திரம்....ஆனால் முணந்து பிடிச்சுட்டியள் போல கிடக்கு!!!நீங்க நினைக்குமாப் போல யோசினையொண்டு கிடக்குத்தான்..;;
அது கிடக்கட்டும்..;;இதை ஊர்ப் பெயரையும் ஒட்டிக் கொண்டவர்களுடையதை மாத்திரமெடுத்தால் பெரும் பகுதி சொல்லியாச்சு!!ஆனால் சில பிரபலங்களை சொன்னவுடன் ;அவர்கள் ஊர்ப் பெயர் ஞாபகம் வரும்.
நானும் ஒரு சின்னப் பட்டியல் தாறன்!!!
சாவகச்சேரி- பஞ்சாபிஷேகன் - பழம் பெரும் நாதஸ்வரக் கலைஞர்
நாச்சிமார் கோவிலடி -கணேசன் -தவில் வித்துவான் (வாக்கன் கணேசன் செல்லப்பெயர்)
புங்குடுதீவு-பொன் சுந்தரலிங்கம்- இசைக் கலைஞர்
சாவகச்சேரி-வி.என்.நவரெத்தினம்- அரசியல்வாதி
வட்டுக் கோட்டை-நல்லதம்பிப் புலவர்- கவிதை
ஒட்டகப்புலம்-பலர்-முறிவு நெரிவு வைத்தியம்
கொக்குவில்- இரகுநாதையர்- பதிப்பாசிரியர் பஞ்சாங்கம்
தெல்லிப்பளை- தங்கம்மா அப்பாக்குட்டி-தமிழறிஞர்
காங்கேசந்துறை-வி.வி.வைரமுத்து-தமிழ்ப் புராண இதிகாச நாடகத்தில் ஈழத்தில் முடிசூடாமன்னன்.
ஊர்காவற்றுறை- காவலூர் ஜெகநாதன் -எழுத்தாளர்
நயினாதீவு-கைலாசநாதக் குருக்கள்- சைவ ஆகம கிரிகா சிரோன்மணி
அல்லப்பிட்டி- சோபா சக்தி- எழுத்தாளர்
புதுக்குடியிருப்பு-மற்றாஸ் மெயில்- சிறந்த நாட்டுப்புறப் பாடல் தொகுப்பாளர்;எழுத்தாளர்
யாழ்ப்பாணம் -தனிநாயகம் அடிகள்- தமிழறிஞர்;மதகுரு
யாழ்ப்பாணம் -தெட்சணாமூர்த்தி- உலகத் தவில் மாமேதை;;;;அளவெட்டி என ஆரம்பத்தில் குறிப்பிட்டபோதும்; புகழால்..;பின் தென்னிந்தியப் பத்திரிகைகள் "யாழ்ப்பாணம்" எனும் அடை மொழியே!
கொடுத்தது.
ஆரியகுளம்-பொன்ராசா- யாழ்ப்பானத்தில் பிரபல வாகனப் பயிற்சியாளர்.
இன்னும் பலர் புகழுடன் இருக்கலாம். இங்கே ஊர்ப்பேர்ப் புகழுடன் "வாழ்ந்த சண்டியர்களையும்;வாழும் சண்டியர்களையும்" தவிர்த்துள்ளேன்.அவர்களும் ஊருக்கு கியாதி சேர்த்தவர்கள் தான்!!!!
இங்கே!!சிலர் கொடுத்திருக்கும் வரிசை எனக்கு அடக்கமுடியாத சிரிப்பை வரவழைத்தது; அகதியா!!!புறப்பட்ட பின் பலர்;எழுத்தாளர் ரூபமெடுத்து; ஊர்பெயரையும் ஒட்டி;;;;பத்திரிகையில் வேலை செய்யும் சொந்தக்காரர் செல்வாக்கைப் பயன்படுத்தி;பவனிவரும் செய்திகளும் காதில் விழுகிறது.
அந்த நாளில் இலங்கை வானொலியிலும் இப்படி!!!ஒரு விளையாட்டிருந்தது.
நம் நாட்டுப் பத்திரிகைகள் இன்னும் வெளிநாடெனில் மெய்சிலிற்கின்றன;அந்தப் பாதிப்பு எனவே யோசிக்கவும்.
ஆசை ஆரை விட்டது.
ஏதோ நடக்கட்டும்.
யோகன் பாரிஸ்
தயவுசெய்து "ஊர்காவற்றுறை" என மாற்றவும்.

21 டிசம்பர், 2006 இரவு 13:58 பகீ said...
நல்ல தகவல்கள் நன்றி சின்னக்குட்டியாரே.

ஊரோடி பக

21 டிசம்பர், 2006 இரவு 15:29 Kulakaddan said...
Maravanpulavu sachchithanatham .....
ivaroda peyar paddiyalil irukkaa??

21 டிசம்பர், 2006 இரவு 15:52 வெற்றி said...
யோகன் அண்ணை,

/* ஆரியகுளம்-பொன்ராசா- யாழ்ப்பானத்தில் பிரபல வாகனப் பயிற்சியாளர். */

உண்மையாத்தான் சொல்லுறீங்களோ?உண்மையாத்தான் சொல்லுறீங்களோ?
முந்தி, யாழ்ப்பாணத்திலை இவர் பெரிய சண்டியன் எண்டு என்ர கூட்டாளியள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரை வைச்சு கன பகிடிக் கதையளும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
21 டிசம்பர், 2006 இரவு 17:34 சின்னக்குட்டி said...
வணக்கம்..விருபா..வருகைக்கும்...
ேலதிக தகவலுக்கும்.நன்றிகள்....காலக் கிரமத்தில் பதிவின் உள்ளடத்தில் சேர்த்து விடுகிறேன
21 டிசம்பர், 2006 இரவு 17:45 சின்னக்குட்டி said...
//யோகன் பாரிஸ்
தயவுசெய்து "ஊர்காவற்றுறை" என //


வணக்கம்... காவலூர் யோகன்(யோகன்-பாரிஸ்).. அவர்களே.... வெற்றி சொன்ன மாதிரி நிறைய விசயங்களோடு தான் வந்திருககிறீர்கள்...மிக்க நன்றிகள்....காலகிரமத்தில் பதிவின் உள்ளடக்கத்தில் சேர்த்து விடுகிறேன்மாற்றவும்//

21 டிசம்பர், 2006 இரவு 17:51 சின்னக்குட்டி said...
வணக்கம் பகீ.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

வணக்கம் குளக்காடன்..வருகைக்கு நன்றி... மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் பெயர் ஏற்கனவே பதிவின் உள்ளடகத்தில் சேர்த்திருக்கிறேன்... அத்துடன் அவர் சக வலைபதிவரும் கூடவே...

21 டிசம்பர், 2006 இரவு 17:57 Anonymous said...
வெற்றி!
அந்த நாட்களில் கார் பயிற்சி தேவைப்பட்டவர்களுக்கு(எனக்கல
ல)அவர் அதைச் செய்து பிரபலம்.நீங்கள் குறிப்பிடும் விடயமும் இருந்ததுதான்....சிலரிடம் உள்ள திறமைகளை விடக் குறைகளே!!வெளியே தெரிவது கூட....இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.
யோகன் பாரிஸ்
சின்னக்குட்டியர்!
கல்லடி வேலரை மறந்து விட்டேன்."சுத்த தமிழுக்கு முட்டி மோதியவர்" கட்டாயம் போடவும

21 டிசம்பர், 2006 இரவு 17:57 வெற்றி said...
சின்னக்குட்டி அண்ணை,
இப் பதிவு ஈழத்தின் வரலாற்றுப் பதிவு போன்றது. எனவே, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இப் பிரபலங்களின் பெயர்களையும் ஊரையும் alphabetical ஒழுங்கிலும், அத்தோடு அவர்களின் துறைகளையும் பிரித்துப் போட்டால் நன்றாக இருக்கும். எடுத்துக்காட்டாக, எழுத்தாளர்கள் ஒரு பிரிவு, கவிஞர்கள் இன்னுமொரு பிரிவு etc.,
நன்றி.

21 டிசம்பர், 2006 இரவு 17:58 சின்னக்குட்டி said...
//மிகுந்தஆர்வத்துடன் நீங்கள் முன்னெடுத்திருக்கும் நல்ல முயற்சி. சிரமம் பாராது அகரவரிசையில் பெயர்களைத் தோகுத்துப் போடுங்கள். பிரயோசனமாகவிருக்கும். தவறவிட்ட பெயர்களை யோசிக்கவும் சுலபமாக இருக்கும்//

//இப் பதிவு ஈழத்தின் வரலாற்றுப் பதிவு போன்றது. எனவே, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இப் பிரபலங்களின் பெயர்களையும் ஊரையும் alphabetical ஒழுங்கிலும், அத்தோடு அவர்களின் துறைகளையும் பிரித்துப் போட்டால் நன்றாக இருக்கும். எடுத்துக்காட்டாக, எழுத்தாளர்கள் ஒரு பிரிவு, கவிஞர்கள் இன்னுமொரு பிரிவு etc.,
நன்றி. //

வணக்கம் நண்பர்களே.... இந்த பதிவை யாரும் ஒழுங்கபடுத்தி தங்கள் மீள் பதிவாக பிரசுரிக்க வந்தீர்களென்றால் நன்றியுடையவனாய் இருப்பேன்...... இந்த பதிவின் சேகரிப்பும் கனமும் முக்கியத்துவம் விளங்கியபடியாலே தான் கேட்கிறேன்...

எனது கமபியூட்டர் அறிவு குருடன் பெண்டிலுக்கு அடிச்சமாதிரி தான். யாரும் அநுபவம் வந்தவர்கள் முன் வந்தால் சரியான வடிவமைப்பில் வரும் என்ற நம்பிக்கையில் கேட்கிறன

21 டிசம்பர், 2006 இரவு 18:31 வெற்றி said...
என்ன சின்னக்குட்டி அண்ணை,
பின்னூட்டங்கள் 49 தோட நிக்குது. இந்தாங்கோ 50 வது பின்னூட்டம்.!!!

/* இந்த பதிவை யாரும் ஒழுங்கபடுத்தி தங்கள் மீள் பதிவாக பிரசுரிக்க வந்தீர்களென்றால் நன்றியுடையவனாய் இருப்பேன்...*/

நானும் இதை வழிமொழிகிறேன்.

கனக்ஸ் ஸ்ரீறீதரன்
மலைநாடான்
கானா பிரபா
மதி கந்தசாமி
வசந்தன்
ஈழநாதன்
பகீ

இவர்களில் யாராவது ஒருவரோ அல்லது சிலர் சேர்ந்து கூட்டு முயற்சியாகவோ செய்யலாம். மேற்குறிப்பிட்ட பதிவர்கள் மனசு வைச்சால் செய்யலாம். செய்வினமோ?
21 டிசம்பர், 2006 இரவு 19:09 மலைநாடான் said...
//மேற்குறிப்பிட்ட பதிவர்கள் மனசு வைச்சால் செய்யலாம். செய்வினமோ?//

வெற்றி!
என்ன இப்பிடிக் கேட்டுப் போட்டடீர். இணையத்தில் இணைந்த எங்கள் எல்லோரிடமும், அரட்டை அடித்ததாக இருக்கக் கூடாது அதற்கும் மேலாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இணைந்தே இருக்கிறது. என்ன புலத்தில் நேரம்தான் ஒரு பெரும் பிரச்சினை.
சின்னக்குட்டி ஒரு வரலாற்றுத்தகவல் பதிவுக்கு அடியிட்டிருக்கிறார்.
இதைச் சற்றுக்கவனமெடுத்து வடிவாகவும், ஒழுங்காகவும், செய்து ஒரு ஆவணமாக அமைப்பது நல்லது. யாரும் செய்வதாக இல்லாவிடின் நான் இதனைச் செய்கின்றேன்.ஆனால் சற்றுக்கால அவகாசம் தேவை. அதுவரைக்கும், விடுபட்டிருப்பவர்களின் பெயர்கள் இருப்பின் (நிச்சயமாக இருக்கும்)இணைத்துக் கொண்டே இருக்கலாம். அல்லது வேறு யாராவது செய்வதாயின் உதவிசெய்கின்றேன்.

இதுகுறித்து ஏனைய நண்பர்களின் கருத்தையும் தெரிவியுங்கள்.

வெற்றி!
அதுசரி, நீர் இப்பிடிக்கதைவிட்டிட்டு எங்க மாறப்பாக்கிறீர். ஏன் நீரும் முயற்சிக்கலாம்தானே?
21 டிசம்பர், 2006 இரவு 22:22 வசந்தன்(Vasanthan) said...
வீரமணி ஐயர் ஊர்ப்பெயரோடு பரவலாக அறியப்பட்டவரல்லரென்று நினைக்கிறேன். தனியே வீரமணி ஐயர் என்றுதான் (சிலவேளை ஒரு பட்டத்தோடு) அவரது பெயர் இடம்பெற்றுப் பார்த்ததுண்டு.
'ஈழத்து' என்ற அடைமொழி இந்தத் தொகுப்பில் இடம்பெற வாய்ப்பில்லையென்றே படுகிறது.
அத்தோடு 'நோர்வே' நக்கீரனும் இத்தொகுப்பில் இடம்பெறச் சாத்தியமுண்டா?

வெற்றி, உம்மட ஊர்க்காரர் ரெண்டொரு பேரின்ர பேர்கள் ஊர்ப்பெயரோட நாட்டுக்கூத்து வரலாற்றில் வருது. அதில மயில்வாகனத்தாரும் ஒராளெண்டு நினைக்கிறன். யாழ்ப்பாணத் திருமறைக்கலாமன்றத்தாரின்ர கலைக்கண்காட்சியிலயோ எங்கயோ நாட்டுக்கூத்து இயற்றியவர்கள் என்ற நீண்ட பட்டியலில் பார்த்த ஞாபகம்.

வீரமணி ஐயர் ஊர்ப்பெயரோடு பரவலாக அறியப்பட்டவரல்லரென்று நினைக்கிறேன். தனியே வீரமணி ஐயர் என்றுதான் (சிலவேளை ஒரு பட்டத்தோடு) அவரது பெயர் இடம்பெற்றுப் பார்த்ததுண்டு.
'ஈழத்து' என்ற அடைமொழி இந்தத் தொகுப்பில் இடம்பெற வாய்ப்பில்லையென்றே படுகிறது.
அத்தோடு 'நோர்வே' நக்கீரனும் இத்தொகுப்பில் இடம்பெறச் சாத்தியமுண்டா?

வெற்றி, உம்மட ஊர்க்காரர் ரெண்டொரு பேரின்ர பேர்கள் ஊர்ப்பெயரோட நாட்டுக்கூத்து வரலாற்றில் வருது. அதில மயில்வாகனத்தாரும் ஒராளெண்டு நினைக்கிறன். யாழ்ப்பாணத் திருமறைக்கலாமன்றத்தாரின்ர கலைக்கண்காட்சியிலயோ எங்கயோ நாட்டுக்கூத்து இயற்றியவர்கள் என்ற நீண்ட பட்டியலில் பார்த்த ஞாபகம்.

கொழும்பு கொழுவி,
எங்களுக்குத் தெரியாமலோ புதுவையைச் சொல்லாமல் விட்டனாங்கள்?

22 டிசம்பர், 2006 மதியம் 00:30 Anonymous said...
நீலவாணன்
திருமலை நவம்
ஆவரங்கால் ஸ்ரீனிவாஸையும் சேர்க்கலாமோ?
மலைநாடான் மாதிரி சாரல்நாடான் ;-)

22 டிசம்பர், 2006 மதியம் 00:49 விருபா / Viruba said...
ஈழ இலக்கியங்கள் தொடர்பான ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த இடத்தில் ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.

விருபா என்பது பௌதீக எல்லைகள் இன்றி அனைத்து தமிழ்ப் புத்தகங்கள்/தமிழ் எழுத்தாளர்கள்/பதிப்பகங்கள்/இதழ்கள்/சிற்றிதழ்கள் என்று அனைத்தையும் பட்டியலிடும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

எமது தளத்தைப் பார்த்து அதே போன்று தனியாக ஈழத்து நூல்களையும், கலை, இலக்கிய நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் பட்டியலிடக்கூடியவாறு தனியான ஒரு செயலியை உருவாக்கித் தரும்படி நோர்வேயில் வசித்துவரும் தமிழியம் என்ற இணையதளத்தினை இயக்கிக்கொண்டிருக்கும் சுபாஸ் மற்றும் உதயன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாம் புதிய ஒரு செயலியை, முற்றிலும் தமிழிலியே இயங்கவல்ல இடைமுகத்துடன்கூடிய செயலியை உருவாக்கியுள்ளோம். இதில் ஈழத்தை தாயகமாகக் கொண்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் படைப்புக்கள் பட்டியலிடப்படும்.

இச்செயலியானது www.eelambooks.com என்ற தளத்தில் தை மாதம் முதல் இயங்கவுள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்கள் பலரும் ஈழ நூல்கள் பற்றிய தகவல்களையும் மதிப்பீடுகளையும் உள்ளிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ் இணைய தளத்தில் நூல்களை இணைப்பதற்கு தமிழில் இணையப் பயன்பாடு தெரிந்திருத்தல் அவசியம் என்பதால் ஒரு வலைப்பதிவை அல்லது இணையதளத்தை நிர்வகிப்பவர்கள் உடனடியாக உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள
. ஒவ்வொரு நாட்டிலும் இருந்தும் இருவரை அல்லது மூவரை சேர்த்துக்கொள்வதாக உள்ளார்கள்.

விரும்புகிறவர்கள் tamiliam@eelambooks.com என்ற முகவரிக்கு தமிழில் தொடர்பு கொள்ளவும். ஏற்றுக்கொள்ளப்படும் உறுப்பினர்களுக்கு உங்கள்பெயர்@eelambooks.com என்ற மின்-அஞ்சல் முகவரி http://mail.google.c.../eelambooks.com என்ற தளத்திலிருந்து தரப்படும். உறுப்பினர்களின் தரமான பங்களிப்பிற்கேற்ப அவர்களுடைய வலைப்பதிவை http://eelambooks.com/blog/உங்கள்பெயர் என்ற முகவரிக்கும் பிற்காலத்தில் மாற்றிக்கொள்ளவும் அனுமதிக்கும் எண்ணமுண்டு. நாம் சில ஈழத் தமிழ் இலக்கிய ஆர்வமுள்ள வலைப்புதிவாளர்களைப் பரிந்துரைத்துள்ளேன், முடிவு அவர்கள் கையில். எனவே ஆர்வமுள்ளவர்கள் உங்களின் விபரங்களுடன் நேரடியாக தமிழில் தொடர்பு கொள்வது நல்லது.
22 டிசம்பர், 2006 மதியம் 02:17 வெற்றி said...
மலைநாடான் ஐயா,
வணக்கம்.

/* இணையத்தில் இணைந்த எங்கள் எல்லோரிடமும், அரட்டை அடித்ததாக இருக்கக் கூடாது அதற்கும் மேலாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இணைந்தே இருக்கிறது. என்ன புலத்தில் நேரம்தான் ஒரு பெரும் பிரச்சினை.
சின்னக்குட்டி ஒரு வரலாற்றுத்தகவல் பதிவுக்கு அடியிட்டிருக்கிறார். */

உண்மை. நான் உங்கட கருத்தோட 100% உடன்படுகிறேன்.

/* வெற்றி!
அதுசரி, நீர் இப்பிடிக்கதைவிட்டிட்டு எங்க மாறப்பாக்கிறீர். ஏன் நீரும் முயற்சிக்கலாம்தானே? */

எனக்குச் செய்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் எனக்கு ஈழத்தின் ஒரு சில தவில்/நாதஸ்வரக் கலைஞர்களைத் தவிர வேறொருவரையும் தெரியாது. முந்தநாள் மறைந்த ஈழத்தின் பழம்பெரும் எழுத்தாளர் அமரர் வரதர் ஐயா அவர்களைப் பற்றியே சில வாரங்களுக்கு முன்னர் பகீயின் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் மேலே குறிப்பிட்டவர்கள் ஈழத்தின் எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றவர்களைப் பற்றிய பரீட்சயம் நிறைய உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள் செய்வது நல்லது என்று சொன்னேன். மற்றும்படி அவர்களுக்கு ஏதாவது உதவி, ஒத்தாசைகள் தேவையெண்டால் நான் உதவி செய்யத் தயார்.

மிக்க நன்றி.
22 டிசம்பர், 2006 மாலை 06:12 கொழுவி said...
செல்வா சுக்
சிட்னி சின்னப்பு
ஒஸ்ரேலியா வசந்தன

22 டிசம்பர், 2006 மாலை 07:29 கானா பிரபா said...
கொழும்பான் கொழுவ

22 டிசம்பர், 2006 இரவு 08:02 கொழுவி said...
கானா என்ற ஒரு நாடு இருக்கிறது கானா பிரப

22 டிசம்பர், 2006 இரவு 08:11 கொழுவி said...
கொழும்பு கொழுவி என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன். அது மத்திய குழு பரிசீலனையில் உள்ளதாம். நீங்கள் மனது வைத்தால் பட்டியலில் இடம் பெறும்..

22 டிசம்பர், 2006 இரவு 08:13 மலைநாடான் said...
//வீரமணி ஐயர் ஊர்ப்பெயரோடு பரவலாக அறியப்பட்டவரல்லரென்று நினைக்கிறேன்//

'ஈழத்து' என்ற அடைமொழி இந்தத் தொகுப்பில் இடம்பெற வாய்ப்பில்லையென்றே படுகிறது.
அத்தோடு 'நோர்வே' நக்கீரனும் இத்தொகுப்பில் இடம்பெறச் சாத்தியமுண்டா//

இவை நியாயமான கூற்றுக்களாகவே நானும்உணர்கின்றேன்.


//மலைநாடான் மாதிரி சாரல்நாடான் //

)

விரூபாவின் அறிவுறுத்தலை முழுமனத்துடன் ஏற்றுக் கொள்கின்றேன். உதவி தேவைப்படும்போது முடிந்தவரை உதவுகின்றேன்.

வெற்றி!
உந்த ஐயா போடுவதை விடமாட்டீரோ?
நன்றி!

Saturday, August 29, 2009

நிக்கி - ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்று

செம்படவக் குப்பம். இரண்டு நாளாக மழை வேறு. ஒரே சகதி. ஈரம்.

ஒரு தாழ்ந்த குடிசையின் பின்புறம். இரண்டு குடிசைகளின் நடுவேயுள்ள இடைவெளியில் அவ்விரு கூரைகளின் ஓலைகளும் அந்த இடத்தில் சேர்ந்து ஒரு கூரையாகி, ஒரு சிறு திட்டில் ஈரம் படாமல் காய்ந்த மிருதுவான புழுதி மண்ணைக் குவித்து நடுவில் குழி பரத்தியது போன்ற இடத்தில் இரண்டு நாட்கள்வரை ஐந்து நாய்க்குட்டிகளை பிரசவித்த ஒரு குப்பத்து நாய் மடியைத் தரையில் தேய்த்துக் கொண்டு தாய்மை பெருமிதத்துடன் 'பாரா' கொடுத்துத் தன் குட்டிகளைப் பாதுகாவல் செய்தவாறு கிடந்தும் திரிந்தும் அலைந்து கொண்டிருந்தது. காலையிலிருந்து காணோம்!

இனிமேல் அந்த நாய் வராது என்று செய்தியைக் குப்பத்துச்சிறுவன் ஒருவன் எல்லோருக்கும் அறிவித்தான்.

" ஐஸவுஸாண்டே பஸ்லே அடிபட்டு அந்த நாய் கூய் கூயாப் பூட்ச்சி."

இந்த அறிவிப்புக்குப் பிறகு குப்பத்துச் சிறுவர்கள் தைரியமாக இந்த குட்டிகளைத் தேடி வந்தனர். ஆளுக்கு ஒரு குட்டியை எடுத்துக் கொண்டபின் கடைசியாக ஒன்றைமட்டும் எல்லோரும் நிராதரவாக விட்டுப் போய்விட்டார்கள். அதன் நிறம் கறுப்பு, இரண்டு காதுகளிலும் வாலிலும் மட்டும் வெள்ளைத் திட்டுக்கள். "சீ! அது பொட்டடா!" என்று அதனை அவர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்வதுபோல் விட்டுச் சென்றனர்.

அந்தப் பெட்டை நாய்க்குட்டி ஒரு புழுமாதிரி நாளெல்லாம் சிணுங்கியவாறு புழுதியிலும் சகதியிலும் நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தது. கண்ணைத் திறந்து முதல் முறையாக உலகைப் பார்த்தது. பசியால் சிணுங்கிச் சிணுங்கி அழுதது. தான் கவனிக்க யாருமில்லாத அநாதை நாய் என்று புரிந்து கொண்டுவிட்டது மாதிரி, நடக்கக்கூடப் பயிலாத அந்த நாய்க்குட்டி கால்களைத் தரையில் இழுத்து இழுத்து நடை பழகியபோதே தனது ஜீவித யாத்திரையை மேற்கொண்டது. அந்தத் தாழ்ந்த இரண்டு குடிசைகளின் நடுவே இருந்து வெளியே வந்து ஈரமும் சகதியுமான குப்பத்துத் தெருவில் அது புரண்டு புரண்டு நடந்த காட்சியைச் சிறுவர்கள் கூடி ரசித்தனர்.

அது தனக்கு ஓர் எஜமானனை அவர்கள் மத்தியில் யாசிப்பது மாதிரி அவலமாக அழுதது. அவர்களூம் அதற்குப் பரிதாபப்பட்டனர். ஒரு குடிசையின் திண்ணையில் அதற்குப் புகலிடம் தந்து கஞ்சித் தண்ணீர், சோறு, டீ என்று படிப்படியாகத் தங்களின் தரித்திரத்தை அதற்கும் அறிமுகம் காட்டினர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுவர்களுக்கு இந்த நாய் விளையாட்டுச் சலித்துப் போயிற்று. அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரி இந்த நாயைக் கண்டு, அதன் மீது பூசிக் கிடக்கும் சேறும் சகதியும் அதற்கே சொந்தம் போன்றும், அது அந்தத் திண்ணையின் மூலையை அசுத்தப்படுத்துகிறது என்றும் கோபித்து, விளக்குமாற்றால் குப்பையைக் கூட்ட வந்தவள் நாயையும் சேர்த்துக் கூட்டித் திண்ணையிலிருந்து தெருவுக்குத் தள்ளினாள். அது கத்தி அலறியவாறு தலைகீழாகப் புரண்டு திண்ணையிலிருந்து தெருவில் வீசி விழுந்தது.

விழுந்த வேகத்தில் வசமாக அடிபட்டது. நாய்க்குட்டி பெருங்குரலில் அழுதவாறு புரண்டு எழுந்து ஒரு காலை மட்டும் நொண்டி நொண்டி இழுத்தவாறு தனது பயணத்தைத் தொடர்ந்தது.
கொஞ்ச தூரம் நடந்ததும் கத்துவதை நிறுத்திக் கொண்டு, விதியை நொந்துகொண்டு போவது மாதிரி மெளனமாய் - காலை இழுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் சரியாகவே - நடக்க ஆரம்பித்தது. பயந்து பயந்து குடிசை மண் சுவரை ஆதாரமாகக் கொண்டு நடந்து குப்பத்தின் எல்லைக்கும் மெயின் ரோட்டுக்கும் குறுக்கே உள்ள நாற்றச் சாக்கடைப் பாலத்தருகே வந்து விட்டது. அதற்கு மேல் திசை புரியாமல் அரை நாள் யோசனையில் அங்கேயே கிடந்து உறங்கி விழித்துக் கத்திக் கத்திக் குரல் தேய்ந்த பிறகு தைரியமாகப் பாலத்தைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்தது.
பெரிய கட்டிடங்கள் நிறைந்த வீதி. ராட்சஸத்தனமாய்ப் பஸ்களும் லாரிகளூம் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜன சந்தடி மிகுந்திருக்கிறது. அந்தச் சின்னப் பெட்டை நாய் தைரியமாக வீதியின் குறுக்கே நடந்தது. இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் மனிதன் என்ன என்ன சாகசங்களை எவ்வளவு ஆர்வத்தோடு நடத்திக் காட்டுகிறான்! இந்த நாய் இந்தத் தெருவில் நடக்கக்கூட கூடாதா என்ன? நடந்தது.

ஒரு மாடி பஸ் வந்தது. அந்த டிரைவர் நல்ல மனுஷன். இந்தச் சிறிய நாய்க்காக அந்த பெரிய பஸ்ஸையே சில விநாடி நிறுத்தினான். அது குறுக்கே நடந்து போனபிறகு, ' எவ்வளவு சின்ன நாய்! அடிகிடிபட்டுச் சாகப்போகுது. நமக்கு ஏன் அந்தப் பாவம்!" என்று அதற்காக விசனம் கொண்டவன் மாதிரி அதைப்பார்த்துக் கொண்டே அந்தப் பெரிய பஸ்ஸைத் திருப்பினான.

நாய் ரோட்டைக் கடந்துவிட்டது. பிறகு எங்கே போவது? எங்காவது போகவேண்டியதுதானே? போயிற்று.

மெயின் ரோட்டைக் கடந்து குப்பம் மாதிரி இல்லாத ஆனால் குப்பத்துத் தெரு போன்றதேயான ஒரு குறுகிய தெருவில் நடக்கையில் அதன் எதிரே ஒரு இலை வந்து விழுந்தது. இலை விழுந்ததும் அதற்காகப் பாய்ந்தோடுவதற்கான அநுபவமோ அறிவோ அதற்கு இன்னும் வராததனால் 'பொத்' தென்ற சத்தத்துக்குப் பயந்து பின்னால் பதுங்கியது அது. பதுங்கியதோ, பிழைத்ததோ!

ஒரு பெரிய நாய் அந்த இலையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது. இந்தக் குட்டிக்கு அது தன் இனத்தைச் சேர்ந்தது என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அது பெரிதாகவும் மூர்க்கமாகவும் இருந்ததனால் இது பதுங்கிக்கொண்டு அதை அச்சத்தோடு பார்த்தது. அந்த இலையில் இருப்பது சாப்பிடத் தகுந்தது என்பதைச் சுவரோரமாகப் பதுங்கிக்கொண்டு பார்த்ததனால் இந்தக் குட்டி புரிந்துகொண்டது.

ஆனாலும் இந்தக் குட்டிக்குப் பசி வந்தபோது எதிரே இலை விழுந்தும், இலை விழுந்தபோதெல்லாம் போட்டிக்கு மூர்க்கமாக மோதிச் சாடிக்கொண்டு பெரிய நாய்கள் வந்ததனால், இலையில் இருப்பதைச் சாப்பிடலாம் என்று அறிவு வந்தும் அதை அநுபவமாக்கிக் கொள்ள வாய்ப்பு வரவில்லை.

ஆனால் பசி மட்டும் வந்துகொண்டே இருந்தது.

மழையிலும் குளிரிலும் முனகி அழுதவாறு தெரு ஓரங்களில் ஓடும் சாக்கடை அருகே போட்டிக்கு யாரும் இல்லாததனால் பொறுக்கித் தின்று உழன்றுகொண்டே அந்தக் குறுகிய தெருவில் சில நாட்கள் இந்த நாய் வாழ்ந்தது.

பின் ஒரு நாள் வெயிலடித்தபோது உடம்பின் ஈரம் காய்ந்து, அழுகலையும் கழிவையும் தின்று உடம்பில் ஏறிய பலத்தால் கொஞ்சம் தெம்பும் வளர்ச்சியும் பெற்றிருந்த இந்தக் குட்டி அந்தக் குறுகிய தெருவிலிருந்து வேறொரு பெரிய தெருவுக்கு தனது யாத்திரையைத் தொடங்கிற்று.

அந்த நாளை இந்த நாய்க்கு ஒரு சோபன தினம் என்று சொல்ல வேண்டும்.

அழுது அடம் பிடித்த ஒரு குழந்தையை அதன் தாய் மல்லுக்கட்டி எங்கேயோ தூக்கிக்கொண்டு போகிறாள்.

குழந்தை பிடிவாதமாய் அவள் பிடியில் அடங்காமல் திமிறித் திமிறித் தாயின் இடுப்பிலிருந்து நழுவி நழுவி வழிகிறது.

ஒரு கையில் சிலேட்டும் பையும் வைத்துக்கொண்டு அந்தத் தாய் அந்தக் குழந்தையை ஒரு கையால் சமாளிக்க முடியாமல் வைது அடிக்கிறாள். அடம் பிடித்த குழந்தை அலறி அழுகிறது. அழுகிற குழந்தையை அவள் சமாதானம் செய்து கொஞ்சுகின்ற வேளையில் இந்தக் குட்டி அங்கே போய் சேர்ந்தது. இந்த நாயை வேடிக்கை காட்டி அந்தக் குழந்தையைத் தாய் சமாதானப்படுத்தினாள்.

இப்போது அந்தக் குழந்தை இந்த நாய் வேண்டுமென்று அடம் பிடித்தது.

அந்த மனித நேசத்தைப் புரிந்துகொண்ட இந்த அநாதை நாய் குழைந்து வாலை ஆட்டிற்று.

நல்ல வேளை. மழையில் நனைந்தும் வெயிலில் உலர்ந்தும் இது சுத்தமாக இருந்தது. நேற்றுவரை இது தின்ற அழுகலும் கழிவும் மனிதர்களுடையதுதானே! நாய்க்குட்டியை எடுத்து முத்தம் கொடுத்துக் குழந்தையிடம் கொஞ்சி அதன் கையில் கொடுத்தாள் தாய்.

இந்த நாய் ஜென்ம சாபல்யம் அடைந்தது.

சிலகாலம் அந்த வீட்டின் திண்ணை தூணில் சணல் கயிற்றால் கட்டப்பட்டுக் குழந்தையின் காட்சிப் பொருளாகவும் விளையாட்டுச் சாமானாகவும் அது வளர்ந்தது. அதற்கு அந்தக் குழந்தை தன்
மழலையில் 'பப்பி' என்றோ 'நிக்கி' என்றோ பேரிட்டது.

இப்போது பார்வைக்குப் பெரிய நாய் மாதிரி உருவம் கொண்டிருந்த அந்தப் பெட்டை நாய் நிக்கி, ஒரு நாள் அந்த வீட்டு எஜமானி வெளியில் போனபோது நன்றியுணர்ச்சியுடன் அவளைத் தொடர்ந்து ஓடிற்று. அவள், "வீட்டுக்குப் போ!" என்று எத்தனையோ முறை விரட்டியும் குழந்தைமாதிரி போக்குக் காட்டியும் ஒளிந்து ஒளிந்தும் அவளைத் தொடர்ந்து வாலை ஆட்டிக் கொண்டு துள்ளித் துள்ளி ஓடிற்று. அப்படி அவள் தன்னை விரட்டுவதும் அவள் விரட்டியவுடன் சில அடிகள் ஓடிப் பின்பு திரும்பிப் பார்த்து, அவளைத் தொடர்ந்து ஓடிப் பிடிப்பதும் நிக்கிக்கு ஆனந்தமான விளையாட்டாக இருந்தது. அந்த அம்மாவுக்கு வேலை இல்லையா என்ன? கடைசியில் 'வீட்டுக்குப் போய்விடும்' என்ற நம்பிக்கையோடு அவள் பஸ்ஸில் ஏறிப் போய்விட்டாள். கொஞ்சதூரம் பஸ்ஸைத் தொடர்ந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடிற்று நிக்கி. அந்த நெடிய சாலையில், பிடிக்க முடியாத, எட்ட முடியாத வேகத்தோடு விலகி விலகி எஜமானியோடு வெகுதூரத்தில் போய் - கடைசியில் அந்தத் திருப்பத்தில் பார்வைக்கும் மறைந்து விட்டது பஸ். ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் பஸ் மறைந்த பிறகும் அந்தத் திருப்பம் வரைக்கும் ஓடிற்று நிக்கி.

பஸ்ஸைக் காணோம்! வேறு வேறு பஸ்களூம் கார்களூம் மனிதர்களூமாகப் பெரும் சந்தடி நிறைந்திருந்தது அந்த வீதியில். வீட்டுக்குத் திரும்ப மனம் கொண்டு நிக்கி வந்த வழியே ஓடி வரலாயிற்று. வரும் வழியில் ஒரு சிறிய சந்து.

அங்கேயிருந்து மசால்வடை வாசனை எண்ணெய்க் கமறலுடன் வீசிற்று. நிக்கி சற்று நின்று காதுகளை உயர்த்தி, வேர்வையின் ஈரம் துளித்த நாசி விரிய வாடை பிடித்தது. மகிழ்ச்சியுடன் ஒரு துள்ளலில் சந்துக்குள் நுழைந்தது.

ஒரு கிழவி, மரத்தடியில் அடுப்பைச் சுற்றிலும் தகர அடைப்பு வைத்து வடை சுட்டுக் கொண்டிருக்கிறாள். பக்கத்திலுள்ள குப்பை மேட்டில் ஏறிப் படுத்துக்கொண்டு மிகுந்த சுவாரசியத்துடன் வடை வாசனையை வாயில் நீரொழுக அநுபவித்துக் கொண்டிருந்தது நிக்கி. எப்போதாவது ஒரு வடையில் கொஞ்சம் பிய்த்துத் தன்னிடம் எறிய மாட்டாளா என்ற கற்பனையோடு அவளையே தன் எஜமானியாகப் பாவித்து வாலாட்டிற்று.

ஏதோ ஒரு சமயம் அவளும் ஒரு சிறு துண்டு வடையை நிக்கியிடம் வீசி எறிந்தாள். சந்தோஷம் தாங்கவில்லை நிக்கிக்கு. ஒரு சுற்றுச் சுற்றிப் பரவச நடனம் ஆடிற்று. அந்த வடைத் துண்டைத் தின்னாமல் தரையில் போட்டு, இரண்டடி பின்னால் நகர்ந்து அதன் அழகை ரசிப்பது மாதிரி பார்த்துக் கொண்டிருந்தது. அதற்குள் யாரோ அந்த வடைத் துண்டை அபகரிக்க வந்துவிட்ட அவசரத்தோடு, அந்தக் கற்பனை எதிரியிடம் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து தன்னுடைய பொருளை ஸ்வீகரிக்கும் அவசரத்தோடு அதைக் கவ்வியது. மறுபடியும் போட்டியில் ஜயித்த ஆனந்தத்தில் வாயில் கவ்விய அந்த வடைத் துண்டைக் கீழே போட்டுச் சுற்றிச் சுற்றிப் பரவச நடனமாடிச் சுழன்றது.

திடீரென மழை பெய்தது. கிழவி அடுப்பையும் பிற சாமான்களையும் அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த வீட்டின் திண்ணைக்கு ஓடினாள். நிக்கியும் மழைக்காக அந்தத் திண்ணையோரமாக ஒதுங்கி நின்றது. நல்ல மழை சடசடத்துப் பெய்து சற்று நேரத்தில் ஓய்ந்தது. மழை நின்ற பின் தெருவில் ஜனங்கள் நடமாடினார்கள். பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகள் திரும்பின.

நிக்கிக்குத் தன் எஜமானியும் தனக்குப் பேரிட்ட அந்தப் பாப்பாவும் நினைவுக்கு வந்தனர். பாப்பாவின் நினைவு வந்ததும் அதற்கு ஒரு விநாடி கூட அங்கே கால் தரிக்கவில்லை. பாய்ந்து பாய்ந்து ஓடிற்று. பாதைகள் பல திசைகளில் பிரிந்தன. வந்த வழி எதுவென்று அதற்குப் புரியவில்லை. எந்த திசையில் பாப்பாவின் வீடு இருக்கிறதென்று பிடிபடவில்லை. நாலு திசையும் ஓடிற்று. எஜமானியின் பின்னால் ஓடி வந்தபோது அந்த அவசரத்திலும் பல இடங்களில் உட்கார்ந்து திரும்பி வருவதற்கு வழி தெரியும் பொருட்டுச் சிறுநீர் கழித்திருந்தது நிக்கி. சற்று முன் பெய்த நல்ல மழையில் தெருவெல்லாம் சுத்தமாகியிருந்தது.

நிக்கி நம்பிக்கை இழக்காமல் ஓடிக் கொண்டிருந்தது. பொழுதும் இருட்டிப் போயிற்று. தெரு விளக்குகளெல்லாம் எரிய ஆரம்பித்தன. நிக்கிக்குப் பயம் பிறந்தது. தன் எஜமானியையோ பாப்பாவையோ பார்க்கவே முடியாதோ என்ற ஏக்கத்தில் அது வானத்தைப் பார்த்து அழுதது. இரவெல்லாம் அழுது அழுது ஏதோ ஒரு தெருவில் எங்கோ ஒரு மூலையில் படுத்து உறங்கி விழித்து அடுத்த நாள் காலை மறுபடி அனாதையாயிற்று!

தெருவில் போகிறவர்களையெல்லாம் தன் எஜமானியோ என்று நினைத்து நினைத்து ஓடி அவர்களால் விரட்டியடிக்கப்பட்டுப் பரிதாபமாகத் திரும்பியது நிக்கி.

இப்போதெல்லாம் தெருவில் எச்சிலை விழுகிறபோது பெரிய நாய்களுக்குப் பயப்படாமல் பாய்ந்து அவற்றோடு சண்டையிட்டுத் தன் பங்கை எடுத்துக் கொள்ளுகிற அளவுக்கு நிக்கி வளர்ந்திருந்ததனால் அதன் வயிற்றுப் பிரச்னை ஒருவாறு தீர்ந்துவிடுகிறது.

ஆனாலும் வாழ்க்கையின் பிரச்னை வயிறு மட்டுமா? அதற்கு மனித நேசம் பசிக்கு உணவு மாதிரி ஓர் அவசியத் தேவையாயிற்று.! அந்தப் பாப்பாவையும் எஜமானியையும் எண்ணி எண்ணி எல்லா இரவுகளிலும் தனிமையில் 'ஓ' வென்று அழுதது நிக்கி.

ரோட்டில் சங்கிலியால் பிணித்துக் கையில் ஒய்யாரமாகப் பிடித்துக் கொண்டு நடக்கும் எஜமானர்களின் பின்னால் ஓடுகிற சிங்கார நாய்களையும், சங்கிலியால் பிணைப்புண்டு மதர்ப்போடு எஜமானர்களையே இழுத்துக் கொண்டு முன்னால் செல்கின்ற கம்பீர நாய்களையும், கார்களில் எஜமானர்களோடு சமதையாக வீற்றிருந்து வெளியே தலைநீட்டிப் பார்க்கிற செல்ல நாய்களையும் பொறாமையோடும் கவலையோடும் பார்த்து அழுதது நிக்கி.

சில சமயங்களில் அந்த நாய்கள் நிக்கி தங்களைப் பார்ப்பதைக் கண்டு, பற்கள் வெளித் தெரிய உறுமியவாறு பாய வரும். அப்போதெல்லாம் அந்த எஜமானர்கள் நிக்கியைத்தான் கல்லெடுத்து அடிக்கிற மாதிரி பாவனை காட்டி விரட்டுவார்கள்.

அப்போதெல்லாம் தொலைவில் வந்து திரும்பிப் பார்த்து ஒரு முறை குரைத்த பின் ஓடிப்போகும் நிக்கி.

ஒருநாள் மத்தியானம். பங்களாக்கள் நிறைந்த ஒரு தெரு. ஜனசந்தடியே இல்லை. நல்ல வெயில். பகலெல்லாம் ஓடி ஓடி, ஊரெல்லாம் பொறுக்கித் தின்று வயிறு புடைத்துக் கொண்டிருந்தது நிக்கிக்கு. எங்காவது சுகமான இடம் தேடி, ஒரு நிழலில் படுத்துக் கிடக்கும் உத்தேசத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.

யாரோ தன்னைக் கூப்பிடுவது மாதிரி குரலோ சிணுங்கலோ கேட்டது. ஓடிக் கொண்டிருந்த நிக்கி நின்று திரும்பிக் காதுகளை உயர்த்திப் பார்த்தது.

ஒரு பங்களாவின் பூட்டிய கேட்டுக்குப் பின்னால் ஒரு நாய் முன்னங்கால்களைத் தூக்கி இரும்பாலான அந்தக் கேட்டின்மீது வைத்து எம்பி நின்றுகொண்டு நிக்கியை அழைத்தது.

அதன் உடம்புதான் என்ன வெள்ளை! சடை சடையாய் வெள்ளி மாதிரி சுருள் முடி வழிகின்றது. அது நின்ற நிலையில் ஆண் நாய் என்று தெரிகிறது. நிக்கி சற்று நின்றது. கம்பியைப் பிறாண்டிச் சிணுங்கிச் சிணுங்கி அது தன்னை அழைக்கும் தவிப்பை ரசித்துப் பார்த்தது. நிக்கியைப் பார்த்துக் குரைக்காமல், கூப்பிடுகிற முதல் நாயே இதுதான்.

நிக்கி லேசாக வாலை ஆட்டிற்று. நிக்கியின் சம்மதம் தெரிந்த அந்த ஜாதி நாய் முன்னிலும் மும்முரமாகக் கதவுகளைப் பிறாண்டித் தாவியது. தரைக்குக் கேட்டுக்கும் இடையே உள்ள சந்தில் நுழைந்து வெளியில் வர முயன்றது. ம், நடக்கவில்லை! அந்தச் சந்தில் நுழைய முடியாத அளவு அது பருமனாக இருந்தது. ஜாதி நாய் பரிதாபமாகக் கொஞ்சியது.

நிக்கிக்கும் அதன் அருகில் போகவேண்டும் போலிருந்தது. அந்த ஜாதி நாய், தான் மனித நேசத்துக்காகத் தவிக்கிற மாதிரி, இன்னொரு நாயின் நேசத்துக்காகத் தவிப்பதை நிக்கி புரிந்து கொண்டது. அது தனக்காகத் தவிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்தது. அதுவும் இவ்வளவு பெரிய இடத்து உயர்ந்த ஜாதி நாயின் நேசம் கிடைக்கும்போது ஓர் ஆதரவுமின்றித் தெரு நாயாக அலையும் நிக்கியால் எப்படி இந்தக் காதல் மிகுந்த அழைப்பை மீறிப்போக முடியும்?

போயிற்று. கேட்டுக்குக் கீழே இருந்த இடைவெளி வழியாக அந்த ஜாதி நாய்தான் போக முடியவில்லை. எனினும் இந்தத் தெரு நாய் நுழைந்து உள்ளே வர முடியும் என்று கனக்கிட்டு வைத்ததுபோல் அந்த ஜாதி நாய் நிக்கியை ' இதன் வழியாக வா' என்று கூறுவது போல் நிக்கியின் முன்னங்கால்களில் ஒன்றைப் பிடித்து இழுத்தது.

நிக்கிப் பங்களாக் காம்பவுண்டுக்குள் ஓடிப் போய் விட்டது. இரண்டும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஒன்றன்மீது ஒன்று தாவிப் புரண்டு கவ்வி விளையாடின. நிக்கி அதன் பிடிகளிலிருந்து விலகித் திமிறி ஓடி ஓடி ஆனந்த நடனம் ஆடியது. இதனுடைய ஆட்டத்தைச் சற்று விலகி இருந்து அநுபவித்த ஜாதி நாய் சமயம் பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று நிக்கியின் மீது தாவியது. அவ்வளவுதான்; அந்தப் பிடியிலிருந்து அசைய முடியாமல் கட்டுண்டு கண் கிறங்கியது.

பங்களா வீட்டினுள்ளிருந்து நாயைக் காணோமே என்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த வீட்டு எஜமானி, ' ஏ... சீ! சர்தார்!... சர்தார்!' என்று இரண்டு தடவை கூப்பிட்டாள். அதற்குள் இந்தப் பிணைப்பு பிரிக்க முடியாததாகப் போகவே, தன்னை யாராவது கவனித்தார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு உள்ளே போய்க் கதவை மூடிக் கொண்டாள் எஜமானி.

இப்போதெல்லாம் நிக்கி எங்கே போனாலும் எல்லோருமே விரட்டுகிறார்கள். எந்த வீட்டின் அருகேயும் யாரும் அதனை நெருங்க விடமாட்டேனென்கிறார்களே!

எங்கேயாவது இந்தத் தெரு நாய், குட்டி போட்டு வைத்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அவர்கள் விரட்டுகிறார்கள் என்று நிக்கிக்குப் புரியவே இல்லை. விரட்டுவதும் ஓடுவதும் அதற்குப் புதிதா என்ன? ஆனாலும் இப்போதெல்லாம் ஓடுவது சிரமமாக இருக்கிறதே, இந்த அநுபவந்தான் அதற்குப் புதிதாக இருந்தது.

சுத்தமான திண்ணையிலும் காம்பவுண்டுகளிலும் இந்த அசுத்தம் பிடித்த நாய்க்கு இடம் தர மறுத்து விரட்டியபின் கடைசியில் ஒருநாள் இரவில் மிகுந்த வேதனையோடும் விரக்தியோடும் அசுத்தம் பிடித்த ஒரு சேரிக்குள் நுழைந்தது நிக்கி.

அது பிறந்ததே, அந்த மாதிரி இன்னொரு குப்பம்.

ஈரம், சகதி. ஒரு குடிசையின் பின்னால் உள்ள மூலையில் சுகமான புழுதி மண்ணில் ஐந்து அழகிய நாய்க் குட்டிகளைப் பிரசவித்தது நிக்கி.

எல்லோரும் வந்து அந்தக் குட்டிகளின் அழகைப் புகழ்ந்தார்கள். ஏதோ ஜாதி நாயின் கலப்பு என்று பெருமையாகப் பேசிக்கொண்டார்கள். சில நாட்களில் அவை அனைத்தும் நிக்கியிடமிருந்து பறிபோயின.

வாழ்வும் தாழ்வும், பெருமையும் வீழ்ச்சியும், மகிழ்ச்சியும் துயரமும் நாயின் வாழ்க்கையிலும் மாறி மாறித்தான் வரும் போலும்!

காரில் போகிற, சங்கிலியால் பிணித்துக் கையில் இழுத்துக் கொண்டு போகிற ஜாதி நாய்களைப் பார்த்து இப்போது நிக்கி ஓடுகிறது. ஒருவேளை, தனது குட்டியை அது தேடுகிறதோ? நிக்கி பெற்றதாகவே இருந்தாலும் அவை நிக்கியின் ஜாதியாகிவிடுமா, என்ன?

அதோ, பங்களா நாயையோ அல்லது இன்னுமொரு குப்பத்து நாயையோ தேடித் தெரு நாயாக நிக்கி அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு இப்போது ஒரு நாயின் தேவையை நாடுகிற ஸீஸன். தேவை என்று வந்து விட்டால் ஜாதியையா பார்க்கத் தோன்றும்?