Pages

வாசகர் வட்டம்

Monday, January 24, 2011

பொழுது போக்கிய மூலைக் கடை

நீண்ட விடுமுறை எப்பெழுதும் சந்தோசம் தராது . விடுமுறை இல்லாத காலங்களில் இருக்கும் பிரச்சனைகளை விடுமுறை காலத்திலையே அது மீண்டும் கொண்டு வந்து தந்து விடும் என்ற எடுகோள் பலராலும் வைக்கப்படுவது வழக்கம்.சிலர் தங்கள் அனுபவத்தை இப்படி பகிர்ந்து கொண்டார்கள் ஜரோப்பிய நாடுகளில் வசிக்கும் போது விலைக்கு வாங்கிய அல்லது பரம்பரை காரணங்களினால் வரும் வருத்தங்களான சலரோகம் ,உயர் ரத்த அழுத்தம் போன்றவை விடுமுறையிலோ சிறிது காலமோ இலங்கையில் வாழும் போதோ அதன் தாக்கம் குறைந்து விடுகிறது அல்லது இல்லாமால் போய் விடுகின்றது என்று.அந்த கருத்துக்கு எதிர் கருத்து கூறுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ஒப்பீட்டளவில் குறைந்த மாதிரி தோற்றமளித்தாலும் கொஞ்ச காலம் அங்கு இருந்தால் மீண்டும் வந்துவிடும் என்று .அது போலவே குறைந்த விடுமுறை எப்பவும் சந்தோசம் தரும் கொஞ்சம் நீளமாகி விட்டுது என்றால் சந்தோசத்தை கொன்று விடும் என்று.

நானும் நீண்ட காலத்துக்கு பிறகு ஊருக்கு சென்றமையால் கிழமைகள் மாதம் என்று தங்காமால் மாதங்களாக தங்கி இருந்தேன் .இவர்கள் சொன்ன மாதிரி நீண்ட விடுமுறை அப்படி சந்தோசத்தை கொல்லவில்லை அதற்கு பதிலாக ஜரோப்பாவுக்கு திரும்புவதில் தான் சந்தோசமில்லாமால் வந்தேன் .எனக்கு தெரிந்தவர்கள் இலங்கை சென்றால் யாழ்குடா நாட்டுக்குள்ளேயே கோஸ்டி கோஸ்டியாக உந்த கீரிமலை நயினாதீவு அந்த கடற்க்கரை இந்த கடற்க்கரை என்று ஊர் ஊராக சென்று பார்த்து வருவார்கள்

இவர்களுக்கு முன்பு உந்த வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் இவ்விடங்களுக்கு சென்றிருக்க மாட்டார்கள் இப்ப தங்களுக்கு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுகிறார்கள் அவ்வளவு தான் என்று நினைத்து கொள்ளுவேன் .ஏனோ ஏதோ காரணத்தினால் தாயகத்தில் வசிக்கும் போதே யாழ்குடாவில் அதிகமான இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு இருந்திருந்தது, அதனால் நான் அங்கு நீண்ட காலம் தங்கி இருந்தாலும் ஊருக்குள்ளையே ஊர் சுற்றுலா சென்று பொழுதை போக்க வில்லை

அதற்க்குப் பதிலாக ஊரில் இருக்கும் மூலைக்கடை ஒன்றில் அரட்டை அடிப்பது மூலம் பொழுதை கழித்தேன் .நான்.புகுந்தவீடு உள்ள ஊரில் மூலை கடை வைத்திருந்தான் பால்ய காலத்தில் என்னுடன் படித்த ஒருவன் .அதனால் எனக்கு நல்ல வசதியாக இருந்தது .இந்த கஸ்டமர் சேவிஸ் என்று சொல்லுகிறார்களே உந்த முன்னோறிய நாடுகளில் ..அத்ற்க்கு எவ்வளவு செலவளித்து ஜரோப்பிய நாடுகளில் பயிற்ச்சி அளிக்கிறார்கள் .அந்த மூலைக்கடையில் நின்ற சிறிது காலத்துக்குள்ளையே அதிசியித்தேன் அவனுடைய வியாபார நடைமுறை தந்திரம் மற்றும் வாடிக்கையாளர்களை கவரும் முறையை...இதை எல்லாம் படிக்காமால் அனுபவத்தில் முதிர்ச்சியில் அவனுக்கு சொல்லி கொடுத்திருக்கிறது .அவனது செய்கைகளை நான் அதிசையமாக வியந்து பார்ப்பதை கண்டு அவனுக்கே அதிசியமாக இருந்தது.

இப்படித்தான் நான் பிறந்த வீட்டிற்க்கு அண்மையில் ஒரு மூலைக்கடை இருந்தது.இந்த மூலைகடைகள் அவசரதேவைக்கு உதவும் மிகவும் சிறந்த நண்பனுமாயிருக்கும் எதிரியுமாயுமிருக்கும் .கடையிற்க்கு முன்பு உறவுக்கு பகை கடன் என்று போர்ட் எழுதி வைப்பார்கள் ஆனால் கடன் கொடுப்பார்கள் கடன் வேண்டுபவர்கள் அப்ப அப்ப அவசரத்துக்கு கடன வேண்ட எவ்வளவு வேண்டினது என்றதை மறந்து போய்விட்ட காரணத்தினால் அந்த கடன் சில வேளை குட்டியும் போட்டு விடும் ..அதனால் மாசக் கடைசியில் நெருக்கும் போது கட்ட முடியாமால் போவோதோடு தேவையில்லாத மனச் சச்சரைவையும் உருவாக்கி விடும்.

சமையலுக்கு அடுப்பில் ரெடியாகி விட்டு ஏதோ ஒன்று இல்லாமால் இருக்க அந்த கணத்தில் வந்து ஓடி வந்து வேண்டி போவர்களும் உண்டு. தலையில் எண்ணை வைத்து முழுக வெளிக்கிட்டு அரப்பு தேசிக்காய் சம்போ என்று முழுகின குறையில் வந்து வேண்டுபவர்களும் உண்டு

. இந்த மூலைக்கடைகள் அநேகமாக மூலை கடைகாரனின் வீட்டோடு இருக்குமென்றால் அர்த்த ராத்திரி என்று பார்க்காமால் பீடி சிகரட் இல்லாமால் இருக்கமாட்டதவர்கள் எழுப்பி தொந்தரவு செய்வதும் வழக்கமாக இருக்கும்.

நான் தங்கி இருந்த நாட்களில் இந்த பிறந்த வீட்டுக்கு அண்மையில் இருந்த மூலைக்கடை இருக்கும் இட்த்தை சைக்கிளில் தாண்டி செல்லும் போது எல்லாம் எனது பால்ய காலத்து ஞாபக குவியல்கள் எல்லாம் சிதறி ஒவ் ஒவ்வொன்றாய் எனது எண்ணக்கோவையில் வந்து தோற்றமளிக்கும்.இந்த மூலைக்கடை பொருட்கள் வாங்கும் இடமாக மட்டும் என்று அல்லாமால் செய்திகளை உலக நடப்புகளை அறிவதற்க்கு நண்பர்கள் ஒருங்கிணைந்து அரட்டை அடிப்பதற்க்கு பயன்படுபவையாகவும் இருந்தன.

எனது பதின்ம வயது உருவாக முன்பே அரை றாத்தல் சீனிக்கும் முக்கால் போத்தல் மண்ணெணனையுக்கும் வாங்குவதற்க்கு போவேன் . அப்பொழுது ஊரில் பெரிய மனிதர்கள் என வெள்ளை வேட்டி சால்வை கட்டி வெளி வேசம் போடுவர்களும் அவ்விடத்தில் விசயதானம் இல்லாமால் வெட்டி வியாக்கியனம் செய்து கதைத்து கொண்டிருப்பார்கள். ...அந்த சிறு வயதிலேயே இவர்களின் சின்னத்தனமான கதைகளை கேட்டு வெறுப்பும் எரிச்சலும் அடைந்திருக்கிறேன்.நான் அவர்களின் கதைகளை அவதானிப்பதை கண்டு தங்களுக்குள் ஒருவரை ஒருவர் எச்சரித்து என்னை துரத்தி அவ்விடத்தை விட்டு அகல வைப்பார்கள் .

கொஞ்சம் வளர்ந்தப்போலவும் அக்கடையில் பொழுது போகாத நேரத்தில் நின்று விடுப்பு பார்ப்பது உண்டு ..மூலை கடை வைத்திருப்பவர் ஊரில் இருப்பவர்களின் சகல இரகசியங்களை எப்படியும் தன்னுள் சேகரிப்பத்தில் வல்லுனராக இருந்தார் .ஒரு வாடிக்கையாளரிடம் ஒரு கதையை விட்டு மற்ற வாடிக்கையாளரிடம் ஒரு கதையை எடுத்து தகவல்களை சேகரிப்பார்.ஒரு பத்திரிகையை பக்கம் பக்கம் பிரித்து அங்கு நிற்கும் நாலு ஜந்து ஒவ்வோரு பிறத்திலும் நின்று வாசிப்பார்கள் ..வாசித்து விட்டு அவர்கள் விவாதிப்பதை பார்த்தால் நாட்டு அரசியல் திட்டத்தையும் உலக பொருளாதரதிட்டத்தையும் நடைமுறை படுத்த இவர்களிடமே விட்டுவிடலாம் என்ற மாதிரி தோன்றும்..சிறு பிள்ளை வேளான்மை வீடு வந்து சேராது என்று சொல்லி திருந்தவர்கள் ...அந்த காலக்கட்டத்தில் நிலமை காரணமாக தம்பி இதை பற்றி என்ன நினைக்கிறாய் என்னையும் தங்கள் கலந்துரையாடல் இழுக்க பார்ப்பார்கள் ..அந்த காலகட்டத்து இள வயதினருக்கேயுருத்தான பக்குவ முதிர்ச்சி காரணமாக மெளனமாக கலைந்து விடுவேன்.

ஊருக்கு போன நின்ற நாட்களில் எனது பால்ய நண்பனின் கடையில் எனக்கு தெரிந்த என்னோட்டை வயதுடைய நண்பர்களுடன் எமது முந்திய தலை முறை செய்த அதே வெட்டி வியாக்கியனங்களை செய்து கொண்டிருந்தோம் .அப்பொழுது வந்த இளம் யுவதிகள் கிலோ கணக்கில் சீனியும் பவுடர் சென்ட் பலவற்றை வாங்கி கொண்டிருந்தார்கள் ..அவர்கள் நவநாகரிகமான உடை அணிந்திருந்தார்கள் ..எனக்கோ ஆச்சரியம் எங்கட காலத்திலை அரை றாத்தல் சீனி வேண்ட எவ்வளவு பாடுபட்டம் ..இப்ப இந்த வெளிநாட்டு பணத்தாலை கொள்வனவு சக்தி கூடி விட்டுதோ என்று .அப்படி கொள்வனவு சக்தி கூடினாலும் இவ்வளவு சீனியும் என்னத்துக்கு என்று கேட்டேன் ..அவன் சொன்னான் வெளிநாட்டோடை தொடர்பான ஆக்கள் மட்டும் சொகுசாய் வாழ்ந்தால் காணுமே ..அப்படி தொடர்பு இல்லாதவர்களும் சொகுசாக வாழ்வதற்க்கு இப்ப அங்கை அங்கை உந்த குடிசை கைத்தொழில் செய்து வருமானத்தை பெருக்கினம் அதுக்கு உந்த சீனி என்றான் ..

.அவன் சொன்ன குடிசை கைத்தொழில் விளங்கினமாதிரி இருந்தது ஆனால் வடிவான தெளிவில்லாமால் இருந்தது ...அவனை வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தன் ..கொஞ்சம் நாள் இன்னும் இங்கை இருந்தி என்றால் நல்லாய் விளங்கி கொள்வாய் என்றான்

..அப்பொழுது அவசரமாய் அரை றாத்தல் பாணுக்கும் ஏதோ ஒன்றுக்கும் வந்த எனக்கு தெரிந்த ஒன்று என்னும் போகவில்லையே என்னை பார்த்து கேட்டுது ..கன நாள் நிக்கிறியள் என்றார் ....நாங்கள் அங்கை கனகாலம் நிற்க விரும்பினாலும் அங்குள்ள கனபேருக்கு நாங்கள் நீண்டகாலம் நிற்பது விருப்பம்
இல்லை ஏனோ தெரியவில்லை...

4 comments:

நிலாமதி said...

சொர்க்கத்துக்கு ........பால்ய நினைவுகளுக்கு செல்ல வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி

சின்னக்குட்டி said...

வணக்கம் நிலாமதி ,,வந்து பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஊருக்குப் போனால் நாள் செல்ல ஏற்படும் சிக்கலை, சலசரோகத்துடன் ஒப்பிட்டது அருமை.
என் நண்பரும் சொல்லுவார் நம்மூர் வியாபரிகளின் திறன் , ஏதோதோ படித்த இங்குள்ள வியாரபார அபிவிருத்தி உத்தியோகஸ்தரிடமில்லை.
கடைசிச் சீனி விடயம் தான் வருத்தமாக உள்ளது,
இந்தியா போல் மரணமில்லாமல் இருக்கவேண்டும்.

சின்னக்குட்டி said...

வணக்கம் யோகண்ணை வருகை தந்து கருத்து கூறியதுக்கு இந்த சின்னக்குட்டியின் மனமார்ந்த நன்றிகள்