Pages

வாசகர் வட்டம்

Friday, May 20, 2011

பெர்லின் சுவர் உடைய முன்பு ஒரு மே தினத்தில்(மீள் பதிவு)

வந்து மூன்று மாதம் தானாகிறது...இந்த குளிரும் நாடும் எனக்கு ஒத்துக்கொள்ள முரண்டு பிடித்துக்கொண்டிருந்ததது... வின்ரர் முடிஞ்சுது இப்பவும் உனக்கும் குளிருதே என்றபடி... யன்னல் சீலை திறந்தான் கண்ணன்......அவன்...இந்த பெர்லினுக்கு வந்து கனகாலம்...சொல்லுவன் தானே....

அந்த யன்னலூடகவோ...பெர்லின் சுவர் கண்ணில் தெரிந்தது.....சுவரை தாண்டி... ஒரு காவல் கோபுரம் ...அதில் நிற்கும் ஒருவனை பார்த்து வாஞ்சையோடு..... இந்த பக்கத்து றோட்டோரம் நடந்து செல்லுவோர் கை காட்டுகின்றனர்...அவனும் பதிலுக்கு புன்னகைத்து கை அசைக்கிறான்

மக்களை ,மொழியால்...அன்பால் ஒன்றாயிருந்தாலும்......இந்த சுவர் வீம்புக்கு நிமிர்ந்து நின்று ...அரசியலுக்காக பிரித்து வைக்குது

சீலை திறந்து...மதிலையே உற்று நோக்கியவன்....மெளனம் கலைந்து....டேய்...இருந்து பார்...ஒருநாளைக்கு உந்த மதில் உடைந்து...போகும்......சனம் ஒன்று சேருமென்றான்...

எனக்கு அது... வெறுப்பின் உச்சகட்டத்தில் வரும்... நப்பாசையாகவே...பட்டது.......

ம்ம் ...என்றபடி.....மீண்டும் ...நான் போர்வைக்குள்...........கீழே.....அழைப்பு மணி அடித்து சத்தம் கேட்கிறது...இவன்ரை கேர்ள் பிரண்டாயிருக்கோணும்....இவன் ஆள் சுள்ளி தான்...கெதியிலை.மொழியையும் பிடிச்சு....டொச்சு பெட்டையை ஒன்றையும் மடக்கிட்டான்...........அவன் நேற்றே சொன்னவன் .. இன்றைக்கு மே நாளடா வேளைக்கு எழும்பு ஒரு இடத்துக்கு போக வேணுமென்று ......எழும்ப விட்டால் தானே...இந்த குளிர்.....

உவன்...இந்த டொச்சு பெட்டையை ..பிடிச்சதாலை.... கன ஜெர்மன்காரரின்ரை தொடர்புகிடைச்சு இருக்கு......அப்பவே ஊரிலையிருக்க்கையையே தன்னை புத்திஜீவியாக காட்டுறதுக்காக உந்த சிவத்த புத்தங்களை எல்லாம்..வாசிச்சு கொண்டு திரிந்தவன்.......இங்கையும் தொடருது போலை ....வாவன் ஊர்வலத்துக்கு...எல்லாம் தெரியுமெண்டவன்......பார்ப்பம்
வாசலில்..கார்...ஸ்ராட்டாகி கேட்டது....அவர்கள் காருக்குள் ஏறி விட்டார்கள் எனக்காக தான் காத்து கொண்டிருந்தனர்..காருக்குள் இன்னொரு டொச்சுக்காரனும் இருந்தான் ... .....ஏற்ற இறக்க சுருதிகளுடன் அந்த மொழியில் ஏதோ சிரித்து கதைத்து கொண்டிருந்தனர்

அவள் ஏதோ கேட்டாள்...அவனிடம்....என்னை பற்றி தான் கேட்கிறாளென்று புரிந்தது....இவனும் பதிலுக்கு சிரித்துக்கொண்டு சொல்லிட்டு......என்னடா என்று தமிழில் நமிட்டு சிரிப்புடன் பார்த்தான்.. ....அந்த சிக்னல் லைட்டை கடந்து வலது பக்கம் திரும்ப....அவ்வழியே இராணுவ டாங்கி கடந்து சென்றது...........இப்பொழுது பிரித்தானிய எல்லைக்குள் உட்பட்டு நுழைகிறீர்கள் என்ற போர்ட் வரவேற்றது....அதையும் தாண்டி வலது இடது என்று பல திசைகளில் திரும்பி கார் தன் பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தது

வெஸ்ற் பெர்லினை செக்கன்ட் வேர்ல்ட் வார் காலத்தில் இருந்து பிரிட்டிஸ் அமெரிக்க பிரான்ஸ் இராணுவ வலயமாய் வைச்சிருக்கினமாம்.....போர் சூழல் இருக்கிற மாதிரி...நினைச்சால் மரண விசாரணையை கூட நடத்தாமால் தடுக்கலாமாம்....அழகான கார்களும் பஸ்களுமும் ஓடுகின்ற அந்த றோ்ட்டில் இராணுவ டாங்கிகளும் ஓடி கொண்டிருக்கின்றது ஆச்சரியமாய் இருந்தது

கார் கடைசியாக ஒதுக்கு புறத்தில் உள்ள கட்டிட பகுதிக்கு வந்தடைந்து....அங்கு தான் பின்னேரம் நடை பெறும் மே டே ஊர்வலத்துக்கான ஆயுத்தங்கள் நடக்கிறது......

இப்படித்தான்...ஊரிலை இருக்கிற சைக்கிள் கடை மாணிக்கண்ணை கேட்டதுக்க்காக உந்த மே டே ஊர்வலத்திற்க்கு போனது நினைவுககு வந்தது.....எட்டுமணித்தியாலய நேர கட்டுபாடு தொழிலாளர் பெற்று கொண்ட நாளாம்... வானிலை சிவத்த கொடியெல்லாம் கட்டி யாழ்ப்பாணம் போய் உலக தொழிலாளரே ஒன்று சேருங்கள் என்று கோசம் போடுவினம்... பல பேர் பின்னர் மீற்றிங்கிலை வீறாப்பிலை பேசுவினம்.......மாணிக்கண்ணை சொன்னவர்...நாங்கள் இண்டைக்கு மட்டும் தான்...ஹீரோக்கள்......மற்றும்படி திரும்பவும் நாதியற்று போயிடுவம் என்றார்....அவர் அப்படி சொல்லக்கை...எனக்கு அவரை பார்க்க பாவமாயிருந்தது


அங்கை பலஸ்தீனியர் கறுப்பர் என்று ..பல நாட்டுக்காரரும் அங்குமிங்குமாக போஸ்டர் பதாகைளையும் வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தனர்.... அந்த கட்டிடம் சுத்தபடுத்தாமாலும்... அந்த கட்டிட்டத்தில் red army என்று ஆங்கிலத்திலும் வேறு கோசங்கள் டொச் மொழியிலும் எழுதியிருந்தது...

அந்த கட்டிடத்தின் மூலையில் உள்ள பெரிய அறையில் பலர் விவாதம செய்து கொண்டிருந்தனர்...நீண்ட முடி தாடியுடனுமும்....பார்த்தால் பிச்சைக்காரர் போல் அவர்கள் உடையும் இருந்தது..

கண்ணன் அதிலிருந்த ஒருவனை அறிமுகபடுத்தினான்.. அவனை பார்க்க பயங்கரமாயிருந்தது....அவனது அடர்ந்த மீசை தாடிக்குள்ளால் அவனது பற்களைகளை காட்டி சிரிக்கும்பொழுது....ட்ரகுலா...கிறிஸ்ரோப்பர் அலி போல் இருந்தான் ...அவன் தனது காதலியை அணைத்தப்படியே....ஆங்கிலத்தில் கேட்டான்.....

பீர்..விஸ்கி...ஏதாவது...

அழகான ஆங்கிலத்தில் விவாதம். செய்தான்...செய்தோம்....அவன் ...ஒடுக்கபடும் மக்களுக்காக அவனுக்குள் இருக்கும் நேசத்தை பார்க்கும்போது பின்னர்....அவன் எனக்கு அழகாயே தெரி்ந்தான்....

ஊர்வலத்தில் எவ்வளவோ சனம் ..அமெரிக்காவுக்கு எதிரான கோப கொப்பளிப்பு.....அமைதியாக சென்ற ஊர்வலம் தீடிரென்று ..கலவரமாக மாறியது....கலகமமடுக்கும் பொலிசாரும் குதிரை படை பொலிசாரும் ...ஒரு புறமும் ...கண்ணீர் குண்டுகளையும் பொழிந்த படி மறுபுறமும்.....ஊர்வலத்தை சின்னாபடுத்தி கொண்டிருந்தனர்..... முதலாளித்துவம் தொழிலாளர்களிடமிருக்கின்ற பயத்தை காட்டிகொண்டிருந்தது...

அந்த அழகான மனிதனை பொலிசார் பிடிச்சு சென்று விட்டனர்

ஆனால் அடுத்த வருடமும் இதே போல் மே ஊர்வலம் நடக்கும்...

No comments: